| படம்- |
உனது அழைப்பில்
உனது உத்தரவு
கிடைத்த மறு
வினாடியில் புறப்பட்டேன்
நீ இருக்கும்
இடத்தை நோக்கி..............
வரும் வழியில்
தீய சக்திகளின்
சதியிலிருந்து வெற்றி
வாகை சூடிய
அம்மா அவர்கள்
தங்களுடை பொழப்பு
வாதத்தின் பிதா
மகன்களின் நன்றி
கடனுக்கு மாலை
சூட்டும் கையோடு
அம்மா மீண்டும்
அரியணையில் அமர
படை சூழ
பவனி வந்தார்கள்
அம்மாவின் பக்தர்களும்
அம்மனை தரிசிக்க
வேண்டி கூட்டமாக
கூடி சாலையை
மறித்து நின்று
என்னையும் மறித்து
விட்டார்கள் அன்பே...
நகர்வலத்தின் முன்
தப்பிக்க முடியாமல்
மாட்டிக் கொண்டேன்.
உன்னை பல
மணி நேரம்
காக்க வைத்ததினால்
என் மீது
ஏற்ப்பட்ட கோபத்தை
தனிக்க அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களை யும்
உன் வழக்கமான
அர்ச்சனை வசவுகளால்
திட்டி ஆற்றிக் கொள்.
அடிமைகளின் அம்மாவையும்
அம்மாவின் பக்தர்களையும்
இப்படி பன்றேங்களம்மா
என்று..........................