பக்கங்கள்

புதிய கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய கலாச்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 14 2015

நீங்கள் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்.....

படம்-Prpc Milton Jimraj

ஆவின்றி அமையாது உலகு!
நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்

“மாடு ஒரு வாழை மரம்” என்று பொருத்தமாக வருணித்தார் ஒரு கால்நடை மருத்துவர் . மாட்டிடம் கிடைக்கும் நாமறிந்த பாலும், இறைச்சியும் அதன் பங்களிப்பில் ஒரு பகுதி மட்டுமே. இது தவிர மாட்டின் கொம்பு முதல் குளம்பு வரை எல்லா பாகங்களும் பல துறைகளில் முதன்மையாகவும், துணையாகவும் பயன்படுகின்றன. உணவு, பற்பசை, அழகு சாதனங்கள், மருத்துவம், தொழிற்ச்சாலை, ஊர்திகள், விமானம் என மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் மாடின்றி வாழ்க்கையில்லை.


மாட்டை சாணி போடும் ஒரு புனித மிருகமாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களே அதைக் கேவலப்படுத்துகிறார்கள். வரலாற்றில் ஆநிரை மேய்த்தலுடன்தான் மனித வாழ்க்கை துவங்கியது. மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, ஆறறிவு உயிரினமாக வடிவமைத்துக் கொண்டதில் கால்நடை இறைச்சி ஒரு முக்கியக் காரணமாகும். அதன்பின் பரிணமித்த நாடோடி வாழ்க்கையிலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி, நிலையான விவசாயத்திலும் சரி கால்நடைகள், குறிப்பாக மாடு மனித குலத்திற்கு அளப்பரிய சேவையை செய்தன.


மனிதனது அறிவு, அனுபவம், வாழ்க்கை அனைத்திலும் மாடுகள் கொண்டிருக்கும் உறவென்பது இன்று நேற்றல்ல, பல்லாயிராமாண்டு பழமை வாய்ந்தது. ஏடறியாத வரலாற்றின் தொன்மைக் காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சியும், புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடியும் கண்டம் விட்டுக் கண்டம் நடந்த மனிதனோடு மாடுகளும் நடந்தன. இன்றும் ஜெட் விமானங்களின் இயந்திர உராய்வைத் தடுக்கும், மசகு எண்ணெயில் கலந்திருக்கும் கொழுப்பின் மூலமாக மாடுகளும் மனிதனை ஏந்திப் பறக்கின்றன.

மாட்டிறைச்சியின் மகத்துவம்
மாட்டின் வயிறு நான்கு அடுக்குகளாய்ப் பிரித்து உணவுப் பொருளைக் கட்டம் செரிக்கின்றது. மனிதன் எளிதில் உட்கொள்ள முடியாத, ஆனால் மனித உடலுக்குத் தேவையான பல்வேறு தாவரங்களை மாடு உட்கொள்கிறது. மாட்டிறைச்சியை உண்ணும்போது நாமும் அந்த சக்தியைப் பெறுகிறோம். மேலும் ஏனைய இறைச்சிகள், தாவரங்களைக் காட்டிலும் மாட்டிறைச்சியில்தான் அதிகமான இரும்பு மற்றும் துத்துநாக சக்தியும்(Iron & Zinc) இருக்கின்றன். பசலைக் கீரையின் சாறு ஒரு லிட்டரில் இருக்கும் இரும்புச் சத்தை பெற மாட்டிறைச்சியின் 90 கிராமே போதுமானது.

மேலும் இச்சத்துக்கள் மனிதனது வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடற்சக்திக்கும், சோர்வின்மைக்கும், நினைவுத் திறனுக்கும் அவசியமானவை. அடுத்து, இச்சத்துக்களை தாவரங்களிலிருந்தே பெறலாமென சைவ உணவு வெறியர்கள் வாதிடுகின்றனர். உன்மை என்னவென்றால் தாவரங்கள் மற்றும் அதன் மருந்து வகைகளிலிருந்து மனித உடல் 3 சதவீத்தை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் மாட்டிறைச்சியிருந்து 23 சதவீதசத்தை நமது உடம்பு ஏற்கிறது. மேலும் அன்றாடம் மாட்டிறைச்சியை உண்ணும்போது நமது உடல் தாவரங்கள் மற்றும் அதன் மருந்துகளிலிருந்து மேலதிக சக்தியை உறிஞ்சும் ஆற்றலையும் பெறுகிறது.

நையாசின், வைட்டமின் டி போன்ற சத்துக்களும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் ‘வைட்டமின் 12’(இந்த வைட்டமின் ஏனைய தாவர, விலங்குகளிடம் அதிகம் கிடைக்காத ஒன்று) மாட்டிறைச்சியில் அபரிமிதமாக கிடைக்கின்றன.

வாழ்க்கை முழுவதும் அரைப்பட்டினி நிலையிலேயே வாழும் தலித் மக்களின் ஆரோக்கியத்தை ஓரளவேனும் பராமரிப்பது மாட்டிறைச்சி என்றால் மிகையல்ல. உண்மையில் தரமான மாட்டிறைச்சியைக் குழந்தைப் பருவம் முதல் சாப்பிட்டு வந்தால் இந்திய மக்களின் சராசரி உடல் எடை, உயரம் அதிகரிப்பதோடு நோயற்ற ஆயுள் சராசரியும் வெகுவாக நீளும். பசுவின் புனித மென்ற பெயரில் பார்ப்பனியம் நமது உடல் நலனுக்கு எவ்வளவு பெரிய தீங்கிழைத்திருக்கிறது என்பதை அறிக.

இதுவரை சைவமென்று நினைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு உணவுப்பொருட்களில் மாடு உள்ளது. மாட்டு எலும்பிலிருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் என்ற புரதக் கூழைச் சேர்த்தே ஐஸ்கிரீம், இனிப்புத் தயிர்க்கட்டி (யோகர்ட்) தயாராகிறது. மேலும் சாக்லேட், சூயிங்கம், பழச்சாறு, ஒயின், பீர், பிஸ்கட் வகைகளிலும் மாடு கலந்திருக்கிறது. மனிதனால் செரிக்க முடியாத மாட்டின் பாகங்கள் கால்நடை, செல்ல விலங்கு, கோழி, மீன் ஆகியவற்றின் தீவனமாக நுகரப்படுகிறது.
மாட்டின் மருந்துப் பொருள்கள்
மருத்துவ உலகம் தான் கண்டுபிடித்திருக்கும் பல அரிய உயிர் காக்கும் மருந்துகளுக்காக மாட்டுக்கு பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இம்மருந்துகளில் சிலவற்றை செயற்கை முறையில் தயாரிக்க முடியுமென்றாலும் அவற்றின் விலை அதிகமாகும்.
உலகின் சர்க்கரை நோயாளிகளில் அதிகம் பேர் இந்தியாவில் தான் வாழ்கிறார்கள். சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்து மாட்டின் கணையத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. ஒவ்வாமை, மூட்டு முடக்குவாதம் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான ‘ஹெபரின்’ மருந்து, தைராய்டு சுரப்பிகளை இயங்க வைக்கும் ‘தைராபிடின்’, டெட்டனஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ‘பாரா தைராய்டு ஹார்மோன்கள்’, அறுவைச் சிச்சையின்போது ரத்தப்பெருக்கை குறைத்து உறையை வைக்கும் ‘க்ளுக்கோன்’, காயங்களை சுத்தம் செய்யும் ‘ட்டிரிப்சின்’ மற்றும் ‘குரோமோட்டிப்சின்’ , புண்களின் சீழை வடிய வைக்கும் ‘டிஅக்ஸி ரைபோ நியூக்கிலியேஸ்’, இருதயத்தின் ரத்த அடைப்பை நீக்கும் ‘பிப்ரிநோலெஸிக்’ போன்ற அரிய மருந்துகளையும் மாடு அளிக்கின்றது.
மேலும் எய்ட்ஸ் நோய்க்கு பயன்படும் ‘பிடல் காப் சீரம்’ புற்றுநோய் சிகிச்சைக்கான ‘ஆல்புமின்’ ஆகியவற்றையும் மாடு தருகின்றது. பசுவை புனிதத்தின் பெயரில் ஒதுக்கி வைத்தால் அவ்வரிய மருந்துகள் கிடைக்காது என்பதோடு, ஏழைகளே மிகவும் பாதிக்கப்படுவர்.
தோல் பொருட்கள்

அதிகமான கால்நடைகள் வாழும் இந்தியா இயல்பாகவே தோல் உற்பத்தியால் முண்னணி வகிக்கின்றது. காலணி, கைப்பை, பெட்டி, பர்ஸ், தொப்பி, பெல்ட், துணிவகை, செல்போன் உறை, கார் இருக்கை உறை, விலங்குகளின் கழுத்து, இடுப்பு பட்டைகள் முதலானவை மாட்டின் பங்களிப்பகளாகும்.

அழகு சாதனப் பொருட்கள்
மாடின்றி அழகு சாதனப்பொருட்கள் ஒன்று கூட தயாரிக்க முடியாது. முகச்சவர கிரீம்கள், லோசன்கள், குளியல் மற்றும் சலவை சோப்புகள் , சிவப்பழகு களிம்புகள் , பற்பசைகள், மணம் வீசும் செண்டுகள், கூந்தலைப் பராமரிக்கும் ஷாம்புகள், தலைக்கு பூசப்படும் பல வண்ணச் சாயங்கள் அனைத்திலும் மாடு இருக்கிறது.
இதர பயன்பாடுகள்
பெயிண்ட், டிஸ்டம்பர், பிளைவுட், புகைப்படச் சுருள், மெழுகுவர்த்தி, பென்சில்கள், கோட்டு பட்டன்கள், இசைக்கருவி நரம்புகள், டயர், மசகு எண்ணெய், கீரிஸ், பிளாஸ்டிக் சிமெண்ட் அச்சுகள், வெடிமருந்து, உரம், அச்சு மை, தாளின் வழவழப்பு, சலவை நோட்டின் விறைப்பு, தீயணைப்பு பொருட்களின் நுரை ஆகியவற்றில் மாட்டின் பாகங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சரி, ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் சரி, மாடு இல்லாமல் எவரும் வாழ முடியாது.
\ஒருவேளை இந்து மதவெறியர்கள் இப்படியும் கூறலாம். “இதுவரை மாட்டின் மூலம் கிடைக்கின்ற மருந்துகள், பொருட்களை அறியாமல் பயன்படுத்தி விட்டோம். இனி மறந்தும் கூடப் பயன்படுத்த மாட்டோம்”. அப்படி உறுதியாகப் பின்பற்றினால் இந்து மதவெறி அமைப்புகளை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியும் பணியை நாம் செய்ய வேண்டியதில்லை. ‘கோமாத’ வே பார்த்துக் கொள்ளும்.
-ஸ்பார்ட்டகஸ்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2003

செவ்வாய் 06 2015

“மரியா”...காமத்தின் புதிய தேவதை...


puka6_sex_oct_15_wrapper
எது காதல் ? புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2015 வெளியீடு

லகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் நுகர்வுக் கலாச்சாரம் சமூக உறவுகளின் இலக்கணத்தில் கூடி வாழும் மனிதத் தன்மையை ரத்து செய்து விட்டு பணத்தின் தயவால் மட்டுமே உறவாட முடியும் என்று மாற்றி விட்டது.
கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்திலிருந்த அரிதான காதல் இன்றைய தொழில் நுட்பப் புரட்சியின் விளைவாக சுலபமாகியிருக்கலாம். ஆனால் காதல் உருவாக்குவதாக சொல்லப்படும் அன்பும், கனிவும், கருணையும் இன்று அரிதாகிவிட்டது.
செல்பேசிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளைஸ்’ அதிகம். காதலோடு மல்லுக் கட்டும் பணம் போலவே பார்ப்பனியமும் பகை கொண்டிருக்கிறது. முன்னெப்போதைக் காட்டிலும் ‘கௌரவக் கொலைகள்’ அதிகரித்திருக்கின்றது. தலித் இளைஞர்கள் பகிரங்கமாக தலை துண்டிக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதிவெறியின் அரிவாளை எதிர்த்துப் போராட வேண்டிய காதல் வெள்ளித் திரையில் வெளிநாடு பறந்து ரோசாப்பூ கொடுப்பதையே கிராபிக்சில் சித்திரிக்கிறது.
சாதி, மதவெறியை தவிர்த்து விட்டுப் பார்த்தால் சொல்லிக் கொள்ளப்படும் காதலில் கூட ஆணாதிக்கத்தின் அமில வீச்சு அதிகம். பெண் என்பவள் ஆணின் வேட்கைக்கு அடிபணியும் விலங்காகவே தமிழ் சினிமாவும், ஊடகங்களும் உணர்த்துகின்றன. விளைவாக பாலியல் வன்முறைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டன.
காதலாய் கசிய வேண்டிய காமம் இன்று வெறியாய் மாற்றப்பட்டிருப்பது மற்றுமொரு விளைவு. அதனால் நமது பெண் – ஆண் குழந்தைகள் தப்பிப்பது எப்படி என்ற கவலை கொள்ளாதார் யாருமில்லை. சமூக வாழ்க்கையின் துறைகளில் ஆணுக்கு நிகராய் தலை நிமிரும் பெண்கள் கூடவே பாலியல் சுரண்டலை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கிறது.
வன்முறையின் அங்கமாக மாற்றப்பட்டிருக்கும் காதலையும், காமத்தையும் மற்றவர் பிரச்சினை என எவரும் தப்பிப்பது இயலாது. அதைப் புரிந்து கொண்டு சமூக நடவடிக்கைகளில் நம்மையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி? இந்தக் கட்டுரைகள் உதவி செய்யுமென நம்புகிறோம்.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்
அக்டோபர் – 2015




ஞாயிறு 22 2012

ஏப்ரல்-22.இந்த மண்னில் சொர்க்கத்தைப் படைத்த மாபெரும் புரட்சி தலைவரின் பிறந்தநாள்.


உலகத்திலுள்ள தொழிலாளர்கள்.விவசாயிகளின் உள்ளங்களில்
விடுதலையைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தவரும் பரந்துபட்ட
மக்களின் நேசதக்குரியவரும் உலக பாட்டாளிவர்க்கத்தின்
ஆசானும் மாபெரும் புரட்சித்தலைவருமான தோழர் லெனின்
பிறந்தநாள்விழா.இந்நாளை சுரண்டப்பட்ட.அடக்கி ஒடுக்கப்பட்ட
மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று கொண்டாட வேண்டிய
நாள்.

தோழர் லெனினை நேசிப்போம்.அவரை கற்றறிவோம். தோழர்
லெனின் எப்படி போதித்தாரோ!..அப்படியே! பன்னாட்டு கொள்ளை
யர்களை,உள்நாட்டு கொடுங்கோலர்களை,திரித்து புரட்டும்
எத்தர்களை எதிர்த்து போராடி தோற்க்கடிப்போம்.

தோழர் லெனின் நமக்கு எப்படி வழிகாட்டினாரோ!அந்த வழியில்
இந்தியமண்ணில் புதியஜனநாயத்தை,புதிய கலாசாரத்தை
படைப்போம்.

“ சிறிய காரியங்களை செய்ய ஒரு போதும் மறக்காமல் இருப்போம்
சிறிய காரியங்களிலிருந்தே.பெரிய காரியங்கள கட்டியமைக்கப்
படுகின்றன”-என்ற லெனின் ஆனையை. லெனின் பிறந்தநாள்
வாழ்த்தாக கொண்டு செயலாற்றுவோம்.

வாழ்க!தோழர் லெனின்! ஓங்குக! தோழர் லெனின் புகழ்!
இந்தமண்ணில் சொர்க்கத்தை படைத்தவர்கள்

ஞாயிறு 08 2012

வீரமாய் வழுக்கி விழுந்த வீ......வீ.ரத் துறவி....

புல் தடுக்கி விழுந்த வீரனையும், டாஸ்மாக் புல் அடித்த
விரனையும் தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை

ஆனால். வீரமாய் சென்று வீரமாய் தடுக்கி விழுந்த வீரத்
துறவியைப் பற்றி பெரும்பாலானேர் தெரிந்திருக்க வாய்ப்
பில்லை.

அட,என்னங்க, நீங்க ,வீரத்துறவியை பற்றி தெரிஞ்சா
தெரியும்னு சொல்லுங்க, தெரியலைன்னா தெரியலைன்னு
சொல்லுங்க! இல்ல பேசாம சொல்றத கேட்டு அதிலிருந்து
தெரிஞ்சுக்ங்க..............................

வருடா வருடம் தீபாவளியின் போது “ இந்துக்களே! இந்துக்
கடையிலேயே வாங்குங்கள்”,.. “ இந்துக்களே!! காமசூத்ரா
ஆனுறை போன்ற இந்து மனம் கமழும் இந்து பொருட்களையே
வாங்குங்கள்” என்று முப்பதுகோடி தேவர்கள் புடை சூழு..........

பிள்ளையார் கொழுக்கட்டையை விழுங்குவதற்க்காக
நாத்திகர்களை வம்புக்கு இழுக்கும்  இந்து முன்னணியின்
நிறுவன அமைப்பாளர் இராமா.கோபாலா.... என்ற வீரத்
துறவிதாங்க..........அவரு.!!!!



ஈரோடு மாவட்ட வன்னியர் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சி
ஒன்றில் கலந்து வீரமாய் பேசுவதற்க்காக வந்தவரு......
அந்த மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணித் துணைத்
தலைவர் புாசப்பன் வீட்டிலுள்ள பாத்ரூமுக்குள் வீரமாய்
போனவரு , வீரமாய் வழுக்கி வழுந்திட்டாருங்க.......

கண்ணு பருவத்திலும்,இடது கையிலும் வீரத்தினால்
காயம் ஏற்ப்பட்டதினால, அகில ஒலக பார்வதிதேவி
சரஸ்வதி,லெட்சுமி போன்ற தேவிகளிடம் வேண்டி
விரதம் புாண்டு அருள் பெறாமா...

தனியார் ஆஸபத்திரியில் அதுவும் அவசர பிரிவில்
சேர்க்கப்பட்டு இருக்காருங்க,.

சிகிச்சை முடிந்த பிறகு.விரமாய் சென்று வீரமாய் வழுக்கி
விழுந்ததில்,பாகிஸ்தான் அய்.எஸ. அய்,தேசத்துரோகிகள்
மற்றும் பயங்கரவாதிகள் சதி என்று வீரமாய் பேட்டி
அளிப்பாருங்கோ,....

 சீ.பீ.அய்,புல்அய்வு,மற்றும் இந்து நாட்டின்முப்படைகளும்
களத்தில் குதித்தாலும் குதிக்கலாமுங்கோ?????
அப்ரானி,சப்பானி போன்றவர்களுக்கு திண்டாட்ட்ம் தாங்கோ???

உதவி-- கண்ணை மறைக்கும் காவிப்புழுதி.-- புதிய கலாச்சாரம்
வெளியீடு.



...

சனி 02 2011

கேட்டீரா?......ஒரு.....சேதீய........!!!

மச்சான்,மச்சான் என்னய கோடை பண்பலை
விழவுக்கு கூட்டிட்டு போ.......... மச்சான்

உன்னய  கூட்டிட்டு போகாம இருந்திருவேனா
பிள்ள!

மறந்திறமாட்டியே மச்சான்,”

உன்னய மறப்பேனா பிள்ள,”

இந்த வசனம் கோடை பண்பலை அலை
வரிசை ஒலிபரப்பில் ஒலித்த வசனங்கள்


காலையில் இருந்து கரண்ட் போனாலும்
ராத்திரிவரைக்கும்  இடைவேளை இல்லாமல்
குத்துப்பாட்டு,கொத்துப்பாட்டு,டப்பா பாட்டு,
நின்றபாட்டு,நிக்காதபாட்டு இப்படி பல வகை
பெயர்களில் தனியார் பண்பலை அலைவரிசை
ஒலிபரப்புடன் போட்டிபோட்டுக் கொண்டு
கலைச்சேவையினை ஒலிபரப்பிவரும்


இந்தியஅரசு நடத்தும் தமிழ்மொழி கோடை
பண்பலை ஒலிபரப்பு நிலையத்தின் பதினோ
றாவது பிறந்தநாள் விழாவாம்.அந்த விழாவுக்கு
தான் அந்தப்பொன்னு,தன் மச்சானை கூட்டிட்டு
போ....மச்சான்னு கொஞ்சும் மொழியில் கூவியது.


பண்பலையில் வரும் எந்த விளம்பரமும் நடப்பு
குடும்பத்தோடு  எள்ளவுவிற்குகூட சம்பந்தம்
இருக்காது.ஆனா,இருக்கிறமாதிரி மயக்கத்தை
உண்டு பண்ணிவிடும் அலைவரிசை.


தனியார் பண்பலை ஒலிபரப்பு தோன்றாத காலத்தில்
பாட்டு கேக்கிற பொழுதுபோக்குகிற்கு கோடை
பண்பலை ஒலிபரப்புதான் முதன்மையாக
இருந்தது.


தோழர் சார்லி சாபடளின் நடித்த மாடர்ன் ஆப்
டைம்ஸ் படத்திதல் அவர்  எப்பொழுதும் ஸ்பானருடன்
இருந்த மாதிரி .இருபத்தொன்றாம் றுாற்றாண்டு
தொடக்கத்தில் ஒவ்வொருத்தரும் தங்கள் வீடு
களிகளிலும்,சின்னஞ்சிறிய,நடுத்தர தொழிற்
கூடங்களிலும் பண்பலை ஒலிபரப்பு எப்எம்வுடன்
தான் இருந்தார்கள்.பாட்டுகேட்டுக்கொண்டே
இருக்கும் நிலைதான் அன்று இருந்தது.


இந்த பண்பலை ஒலிபரப்பின் தாக்கத்தைப்
பற்றி அன்றைய புதிய கலாசாரம் மாத இதழில்
ஏராளமான கட்டுரைகளும் கவிதைகளும்
வெளிவந்திருந்தன.

தனியார்மயம்,தாராளமயம் புன்னியத்தால்
ஏராளாமான தனியார் பண்பலை ஒலிபரப்பு
நிலைய்கள் தோன்றியது

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் செல்
போன் கம்பெனிகள் மாதிரி  ஒவ்வொரு 
நிலையமும் தங்கள் கொள்கைக்கேற்ற
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வயது
வித்தியாசமின்றி பாரபட்சபாராமல் எந்த
ரசிகனும் தப்பித்து ஓடிவிடாமல் கட்டி
போட்டு இருந்தன. அதில் தப்பித்தவர்கள்
காது கேளாதவர்கள்தான்.


அப்படி முதன்முதலில் இசை கயிற்றால்
கட்டி போட்ட கோடைபண்பலை ஒலிபரப்பு
நிலையத்துக்கு  பதினோராவது பிறந்த நாள்
விழா.சேலம் நகரத்தில் அதுவும் கல்லுாரி
வளாகத்தில்.


பண்ணைபுரத்து இசைக்கலைஞனின் வசீகரத்
இசை தாலாட்டுடன் பல இசைக்கயிற்றால்
கட்டுண்டு கிடப்பவர்கள்.அந்தக்கட்டுகளிலி
ருந்து விடுபடுவது அவ்வளவு சுலபமானதா??


காற்று மண்டலத்தையே!  காந்த மண்டலமாக
ஆக்கியவர்கள் அவ்வளவு  சுலபத்தில் விட்டு
விடுவார்களா??????????????????



மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...