பக்கங்கள்

லெனின் பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லெனின் பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 21 2015

மகிழ்ச்சி.....!!!


மகிழ்ச்சி.................


அமைதி நிறைந்த ஸிம்பீர்ஸ்க் நகருக்கு மேலே மகிழ்வுடன் இசைத்தன வானம்பாடிகள். வோல்கா ஆற்றக்கு உயரே அவை பண் பொழிந்தன. நகரின் அருகாமையில் ஆறு சட்டெனத் திரும்பியத. பனிக்கட்டிப் பாளங்கள் அண்மையில்தான் உருகிப் போயிருந்தன.தடையின்றிப் பெருகிய ஆற்றில் சென்றது நீராவிக்கப்பல்.

“வெள்ளைக் கப்பலே, எங்கே போகிறாய்? “

ஸிம்பீர்ஸ்க் நகரில் வசந்தம்

விதிகளும் தோட்டங்களும் பட்சிகளின் கீச்சொலிகளால் நிறைந்திருந்தன. காற்று பிர்ச் மரக் கிளைகளை ஆட்டி உலுக்கியது. தெருக்களில் இளவேனிலின் ஆட்சி புரிந்தது.

உல்யானவ் குடும்பத்தாரின் இல்லத்திலும் மகிழ்ச்சி நிலவியது. அவர்கள் வீடு வோல்கா அற்றுக்குப் பக்கத்திலேயே இருந்தது. ஜன்னல் வழியே சுள்ளென்று வெயில் அடித்தது. நீராவிக் கப்பல்களின் சங்கொலிகள் கேட்டன.

அம்மா தொட்டில் மீது குனிந்தாள்.  தொட்டிலில் கிடந்தான் மகன். தாயார் அவனை உற்று நோக்கினாள்.

“நீ எப்படிப்பட்டவனாக வளர்வாய்? எந்த மாதரி வாழ்க்கை உனக்கு கிட்டும்?” என்று அம்மா சிந்தித்தாள்.

தகப்பனார்  இல்யா நிக்கலாயெவிச் அறைக்குள் வந்தார்.

“மரியார. கண்ணே!” என்று அழைத்து, “நற்பகல், மரியா என்றார்.

தகப்பனாருடன் கூடவே மூத்த குழந்தைகள் ஆண்ணாவும்அலெக்ஸாந்தரும் தாயாரிம் வந்தார்கள். கருவிழிகளும் சுருண்ட கேசமும் கொண்ட ஆண்ணாவுக்கு ஆறு வயது. அலெக்சாந்தருக்கு நான்கு வயது. ஆவல் பொங்க அவர்கள் தொட்டிலை நெருங்கினார்கள்..

“ குழந்தைகளே! உங்களுக்குத் தம்பி பிறந்திருக்கிறான்“ என்றார் இல்யாநிக்கலாயெவிச்.

“ எவ்வளவு சின்னூண்டுப் பயல்! ” என்று வியந்தாள் ஆண்ணா...

“ வளர்ந்ததும் பெரியவன் ஆகிவிடுவான்” என்று பதில் அளித்தார் தந்தை.

“ இவன் பெயர் என்ன?“ என்று தம்பியை நன்றாக பார்ப்பதற்க்காக நுனிக் கால்களில் எம்பி நின்றபடியே கேட்டான் அலெக்சாந்தர்.

“ விளாதீமிர் என்று கூப்பிடுவோமே” என்றார் தாயார்.

இவ்வாறு,வோல்கா நதிக்கரையில் உள்ள ஸிம்பீர்ஸ்க் நகரில், 1870 ஆண்டு ஏப்ரல் மாதம் 22ந்தேதி பிறந்தார்  விளாதீமிர் உல்யானவ் என்னும் புதிய மனிதர்.. பிற்காலத்தில் இவரே மாபெரும் லெனின் ஆகப் புகழ் பெற்றார்.





'மரீயா பிரிலெழாயெவா-" அவர்கள் எழுதிய “ லெனினின் வாழ்க்கைக் கதை என்ற பிரதான நூலிருந்து...

ஞாயிறு 22 2012

ஏப்ரல்-22.இந்த மண்னில் சொர்க்கத்தைப் படைத்த மாபெரும் புரட்சி தலைவரின் பிறந்தநாள்.


உலகத்திலுள்ள தொழிலாளர்கள்.விவசாயிகளின் உள்ளங்களில்
விடுதலையைப் பற்றிய நம்பிக்கையை விதைத்தவரும் பரந்துபட்ட
மக்களின் நேசதக்குரியவரும் உலக பாட்டாளிவர்க்கத்தின்
ஆசானும் மாபெரும் புரட்சித்தலைவருமான தோழர் லெனின்
பிறந்தநாள்விழா.இந்நாளை சுரண்டப்பட்ட.அடக்கி ஒடுக்கப்பட்ட
மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்று கொண்டாட வேண்டிய
நாள்.

தோழர் லெனினை நேசிப்போம்.அவரை கற்றறிவோம். தோழர்
லெனின் எப்படி போதித்தாரோ!..அப்படியே! பன்னாட்டு கொள்ளை
யர்களை,உள்நாட்டு கொடுங்கோலர்களை,திரித்து புரட்டும்
எத்தர்களை எதிர்த்து போராடி தோற்க்கடிப்போம்.

தோழர் லெனின் நமக்கு எப்படி வழிகாட்டினாரோ!அந்த வழியில்
இந்தியமண்ணில் புதியஜனநாயத்தை,புதிய கலாசாரத்தை
படைப்போம்.

“ சிறிய காரியங்களை செய்ய ஒரு போதும் மறக்காமல் இருப்போம்
சிறிய காரியங்களிலிருந்தே.பெரிய காரியங்கள கட்டியமைக்கப்
படுகின்றன”-என்ற லெனின் ஆனையை. லெனின் பிறந்தநாள்
வாழ்த்தாக கொண்டு செயலாற்றுவோம்.

வாழ்க!தோழர் லெனின்! ஓங்குக! தோழர் லெனின் புகழ்!
இந்தமண்ணில் சொர்க்கத்தை படைத்தவர்கள்

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...