| படிக்க----ரோகித் வெமுலாவைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் ! |
ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து ........
ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஒரு அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம் . ஆனால். என்னால் எழுத முடிந்தது என்னவோ, இந்த தற்கொலை கடித்த்தை மட்டுமே.
ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.., ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றானா என்றால்? நிச்சயமாக இல்லை.
சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்ககளை திரும்பி பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.
எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும் சுமுகமாகவும் நடை பெறட்டும். நான் தோன்றினேன் மறைந்தேன் அவ்வளவே... அதை இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம். இவ்வுலகில் வாழ்வதைவிட மரணித்தல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிழவுலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிச் செல்கிறேன்.