செவ்வாய் 09 2014

தெரிந்ததும்,தெரியாததும்


முன்னோரு காலத்தில்,“ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம்,ஆகையால் ஆசையை விட்டொழியுங்கள்என்றார்.
புத்தர்.
     
அவர் சொன்னதோடு நிற்காமல் ,அரச மகுடத்தையும்,  அதன் சுக போகங்களையும் துறந்த மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துகொண்டார் .புத்தர் அரசமகுடத்தை துறக்காமல் எண்ணற்றமாற்றங்களை செய்து மக்களைதிருத்தி வழிநடத்தியிருக்கலாம்.
     
சரி,இது நடக்குற காரியமா? முடியுமா? என்றால்,முடியும் என்றால் முடியும்.முடிந்தவரை முயற்சிப்பது.முடியும்வரை முயற்சிப்பது........என்று சொல்லும் அறிவாளிகளைத்தான் கேட்க வேண்டும். அரசவை மகுடத்தை சுமந்துகொண்டு மக்களோடு மக்களாக இருக்கமுடியுமா?.

முடியாது என்றுதான் அரசமகுடத்தை துர்க்கியெறிந்து துறவறம் ஏற்று மக்களுக்கு போதித்தார். அன்று போதித்தவை இன்று நடைமுறையில் எப்படி உள்ளது.
     
பணக்காரன் ஆசைபட்டால் இன்பம். ஏழைஆசைபட்டால் துன்பம்.ரெண்டா கெட்டான்ஆசைபட்டால் இன்பமும் துன்பமும் மாறி மாறி.   அந்தக் காலத்திலயே பேராசையும், பொறாமையும் ,இருந்த்து என்றால், விஞ்ஞானமும் நாகரிகமும் வளர்ந்து சந்திரனுக்கு தப்பு செவ்வாய்க்கு போயிருக்கிறதென்று சொல்லுகிற இந்தக் காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடைந்து இருக்கும்.தியாகமும் அர்ப்பணிப்பும் அறிவியல்சிந்தனையும் எவ்வளவு குறைந்து இருக்கும். நல்ல பழக்கங்கள் கடு களவும், கெட்டதுகள் மலையளவுமாக உள்ளன.அரசனாக இருந்துகொண்டே மக்களுக்கு எந்த நன்மையும் செய்து விடமுடியாது என்று தெரிந்துதான் ஊர்ஊராக. சென்று தன்கொள்கைகளை பரப்பினார்.
     
இன்றைய காலகட்டத்தில் நல்லவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் நல்லதுக்காக குரல் கொடுப்பவர்கள் சீர்குலைவுகாராகள் என்றும், கெட்டவர்கள் பிழைக்க தெரிந்தவர், வல்லவர், படித்தவர்கள் என்றும் மாற்றப்பட்டுள்ளனர். நல்லவர்கள் கடுகளவும் கெட்டவர்கள் மலையளவுமாக உள்ளனர்.
     
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.” -----இன்றைக்கு இவை  பொருந்துமா? உங்களுக்கு  தெரிந்த்தை சொல்லுங்கள.. நானும் தெரிஞ்க்கிறேன். “தெரிந்ததுகையளவு, தெரியாததுமலையளவு



1 கருத்து:

  1. நல்லதுக்காக குரல் கொடுப்பவர்கள் சீர்குலைவுகாராகள் //

    இதான் சரி.. கொஞ்ச நாள் குரல் கொடுப்பார்கள். அப்புரம் நமக்கேன் வம்பு என ஒதுங்கிடுவார்கள்..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...