வெள்ளி 13 2013

குளிக்காதவர்கள் குளிக்க தடை!!!!!!!



என் நண்பருக்கு நண்பர் ஒருவர்  குளித்து சில நாள்கள் ஆனதால் நன்றாக குளிக்க வேண்டும் என்ற ஆசையில் தேனி மா வட்டம் பெரிய்ய.........
குளத்திலிருந்து 8.கி.மீ தூரம் உள்ள கும்பக்கரை அருவிக்கு சென்றார்

 அவர் சென்ற நாட்களில்  அப்பகுதியில் வானத்திலிருந்து  கொட்டோ கொ்ட்டுன்னு  தண்ணீர் கொட்டுவதால் அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

வழக்கத்தைவிட கூடுதலாக தண்ணீர் ஓடுவதால், குளிக்காதவர்கள் (டாஸ்மாக்)குடித்துவிட்டு குளிக்க  முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது

இதனால்.பலநாள் குளிக்காமல் அருவியில் குளிக்க வருபவர்கள் சேர்ந்துள்ள அழுக்கோடு குளிப்பவர்களும் அடித்து செல்லப்படும்  காரணத்தால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நண்பர் குளிக்காதவர்களுக்கு குளிக்க தடை போட்டதால் அம்புட்டு தூரம் போயிட்டு குளிக்காமல் வந்துவிட்டதை பெருமையாக நண்பரிடம் சொன்னார்.

 எதெதுக்கு பெருமை படுவது என்பதற்கு வித்தியாசமில்லாமல் போய்விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...