வியாழன் 16 2019

அதிகாலை கனவு-18.

அந்த நாள் நிணைவுகள்...கனவுக்குள் கனவு...!!!

மகிழ்ச்சி க்கான பட முடிவு


நான் தூக்கத்தில் புலம்புவதை கண்டு..என் அம்மா..டேய்...என்னடா  வாய் ஒலம்புற என்னடா என்று என்னை உலுப்பி  கேட்டபோதுதான் கண்விழித்தேன். என் அம்மாவைப் பார்த்தால் என் அம்மாவைக் காணோம்.
பேந்த பேந்த முழிக்கும் நிலை ஏற்பட்டது.. சிறிது நேரம் கழித்து தன்னுணர்வு வந்த பிறகுதான் புரிந்தது. கனவுக்குள் கனவாக என் அம்மா வந்தது.

இன்னும் விடியவில்லை என்பதால் மீண்டும் படுத்துவிட்டேன்.

அதிகாலை விடிந்ததும் பணப்பேக்கை காணமல் அதிர்ச்சியாக இருந்தது. மாணிக்கத்தை பார்த்தால் காணவில்லை... மகள்களிடம் கேட்டபோது.. பணப்பேக்கை மகள்களிடம் கொடுத்துவிட்டு பக்கத்து நகரத்தில்  இருக்கும் மாணிக்கத்தின் தம்பியை பார்த்துவிட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றது தெரியவந்தது.

அங்கயற்கண்ணி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தேன்... சந்தர்ப்பம் கிடைத்தது.  விபரத்தை சொன்னேன் மகள்கள் இருவருக்கும்தலா  ஐந்து லட்சம் கொடுத்துவிட்டு உன் பேர்ல  வைப்பு தொகையாக இருக்கட்டும். இந்த விபரம் உனக்கு மட்டுமே இருக்கட்டும் மகள்களிடமோ..மருமகன்களிடமோ... மூச்சு விடவேண்டாம். பின்னாளில் உன் மனசு போல... மகள்களுக்கே கொடுத்தாலும் சரி, உன் பராமரிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொண்டாலும் சரி... அன்னிக்கு நிலமைக்கு முடிவு எடுத்துக்கோ...என்றுபேசி முடித்தவுடன் மூத்த மகள் வசந்தி தன் குழந்தையை கொண்டுவந்து  தாத்தாவிடம்  போ..  என்று என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார். பேரனோ.  ஒரு புதிய முகத்தை கண்ட அதிர்ச்சியில் அழுது துடித்ததைக் கண்டு அவன் அம்மாச்சிடம் கொடுத்துவிட்டேன்.


அடிக்கடி வந்தால்தானே கொழுந்தா... பேரனுக்கு தாத்தாவை தெரியும்...என்றார் அங்கயற்கண்ணி...

ஆமாம.. அண்ணன் இருக்கயிலேயே வர முடியல.... இனிமேலா வரமுடியப் போகுது.....என்றவுடன்....எதையோ நிணைத்து வருத்தப்பட்டார்.. இனி என்ன வருத்தப்பட்டா மட்டும் அண்ணன் திரும்பி வந்துவிடவா போறார்.. வருத்தப்பட்டு  உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.... சாயப்பட்டறை தொழிலின் கொடுமை தங்கள் கைகளிலும் உடம்பகளிலும் தெரியுது... இதோடு அண்ணனை நிணைத்து வருத்தப்பட்டால்..... என்று சொல்லி முடிக்கும்முன்னே...அவருடனே நானும் சேர்ந்து போயிருந்தால் எவ்வளவு சந்தோசமும் நிம்மாதியாக இருக்கும்.....ஏங் கொழுந்தா..எங்கள் இருவருக்கும்
கல்யாணத்தை முடித்து வைத்த  நீய்யி....அவருடனே என்னை அனுப்பி வைக்க மறந்திட்டில..... என்றார்.

ஆமா..ஒன்னயும் அவருடனே அனுப்பி வச்சா... ரெண்டு மகள்களை பார்க்கிறது யாரு....???இப்படியெல்லாம் பேசாத மதனி......அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசி....இப்படி புலம்பிகிட்டு நீயும் வண்டிய விட்டுராத..... உன்னய வச்சுதான் நான் இங்கு வர்ரேன்.....நீயும் போயிட்டா.....நான் இங்கு வருவதற்கு வேலையே இல்லை...மருமகன்களின் குணம்தான்  தெரியுமே......


மகள்கள் இருவரும் வந்தார்கள். நல்லா  சொல்லுங்க சித்தப்பா... எப்பப் பாத்தாலும் அம்மா அழுதுகிட்டே இருக்காங்க...நாங்க எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாடறாங்க... சித்தப்பா என்றன.....

உங்காப்பா மேல உங்கம்மாவுக்கு அவ்வளவு பாசம்மா......அந்தப் பாசத்த அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதும்மா...??? கோபத்துல அம்மாவ திட்டாதிங்கம்மா....உங்களத்தவிர அவருக்கு யாருமே இல்லம்மா...?? நான் சொல்லிகிட்டு இருக்கயிலே.. அஙகயகற்கண்ணி என்னைக் கட்டி பிடித்து அழுதார்.. மகள்களின் சிறு வயதில் இருந்தே.. அப்பா முன்னே.. அம்மா சித்தாப்பவை கட்டிப் பிடுச்சு அழும்...அப்பவே.. சித்தப்பா அம்மாவுக்கு ஆதரவாக அப்பாவை சத்தப் போடுவார்...... அம்மாவுக்கு அண்ணனாக பிறந்திறக்க வேண்டியவன்  அம்மாவுக்கு கொழுந்தனாக வந்து மாட்டிக்கிட்டான் என்று அப்பாவும் சித்தாப்பவை கேலி செய்வார். சித்தப்பா எதாவது சொன்னால். அம்மாவும் அப்பாவும் எதுவுமே பேசமாட்டார்கள்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சித்தப்பா மேல் அவ்வளவு பாசம் என்பது அதுகளுக்கு தெரிந்திருந்தது.


சரி.. சரி  போதும் அழுவதை நிறுத்து.. என்றுவிட்டு மகள்களிடம் அம்மா..உன் வீட்டுக்காரர்கள் எங்கே.. ரெடியாக இருக்கறார்களா.... மாணிக்கம் வந்த வுறுவுடன்  வந்த வேலையை முடிக்க வேண்டும் ரெடியாக இருக்கச் சொல்லுங்கள் என்று விட்டு மாணிக்கத்தின் வரவை எதிர்பார்த்தேன்.

கிடைத்த இடைவெளியில் அங்கயற்கண்ணியிடம்  ..நீ எந்த பேங்கில் கணக்கு வைத்திருக்காய்.. மகள்கள் கணக்கு வைத்திருக்கும் பேங்கிலா என்று கேட்டபோது  வேறு பேங்க் என்று சொன்னவுடன் மனதில் சற்று நிம்மதி கிடைத்தது.

மாணிக்கம் வந்தவுடன் செட்டில் மெண்ட் வேலை தொடங்கியது... மாணிக்கம் மகள்கள் பேரில் டெபாசிட் செய்வோம் என்ற போது.. மகள் மருமகன் இருவர் பெயரில் ஒரு தொகையும் குழந்தைகளின் பெயரில் சிறு தொகையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது.. மருமகன்கள்    இருவரும் மாமா சொலற்படி செய்யுங்கள் சித்தப்பா என்றபோது.... நான் மாணிக்கம், அங்கயற்கண்ணி, மகள்கள் இருவரும்  எல்லாருமாக வாயடைத்து நின்றோம்....எனக்கு ஆச்சச்சரியம்..... அந்த சந்தோசத்தில் படுக்கையை எழுந்துவுடன் என்னையறியாமல் சத்தம்மிட்டேன்......










2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...