| படம்- ஓட்டுக்கு பணம் வாங்கும்காட்சி. |
பெங்களுரு சிறப்பு நீதி மன்றத்தில் 18 ஆண்டுகளாக ஜெ.-கும்பலால் இழுத்தடிக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி டி.குன்ஹா நன்கு ஆராய்ந்து எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல், எந்த ஆசை குழிகளுக்கும் விழாமல் பணத்துக்காக சோரம் போகாமல் துணிவுடன் ஒரு ரூபா சம்பளத்தில் உழைக்க வந்ததாக பீத்திக் கொண்டு 66கோடியே 65 இலட்சம் சம்பாரித்த கிரிமினல் கும்பலை சட்டத்தின்படியே நேர்மையாக தண்டித்து தீர்பளித்தார்.
ஆனால் சிறீரங்கம் வாக்காளர்களோ.... ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி பதவியிழந்த முதலாவது முதல்வர் என்ற சிறப்பு தகுதியை அடைந்ததன் விளைவாக நடந்த இடைத்தேர்தலில் இந்தக் கிரிமினல் கும்பல் நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராகவோ அல்லது இந்த இடைத் தேர்தலை புறக்கணித்தோ ஜெ கும்பலின் முகத்தில் கரியை பூச ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், எவ்வித அறநெறியுமின்றி, மனம் உறுத்தாமல் வாக்காளர் என்ற தகுதியில் எந்தவித ஒரு பொதுச் சிந்தனை இல்லமால்.. ஊழல் கும்பல்கள் கொடுத்த ரூ5000-க்கும் ரூ2000-க்கும் எந்தவித உறுத்தல் இல்லாமல் தன்மானமின்றி தரம் தாழ்ந்து பணத்துக்காக தரம் தாழ்ந்து விலை போனார்கள்.
ஓட்டுக்கு பணம் கொடுத்து பெற்ற சிறீரங்கம் தேர்தல் வெற்றியானது இந்தக் கொள்ளைக் கும்பலுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக ஆகிவிட்டது. தமிழ் சமுதாயத்தை அடிமைகளாகவும், தன்மனம் இழந்த இழிபிறவிகளாகவும். கை யேந்திகளாகவும் சீரழித்த ஜெ கும்பலின் சிறீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியானது. இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து போன வாக்காளர்கள் நிறைந்த ஆபத்தான தமிழகமாக மாற்றிவிட்டது.