பக்கங்கள்

நாட்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டாமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 27 2015

பெரிய மனிதரின் தீர்ப்பை மாத்தி சொன்ன ஊர் நாட்டாமை...

குன்ஹா க்கான பட முடிவு                   குன்ஹா க்கான பட முடிவு                                 குன்ஹா க்கான பட முடிவு
படம்-tamil.oneindia.com
முயல்கறி சாப்பிடலாம் என்று ஆசைப்பட்ட ஒரு வீட்டின் சொந்தக்காரர், சமையல்காரியை அழைத்து தோட் டத்தில் இருக்கும் முயல்களில் ஒன்றை பிடித்து சமைக்கச் சொன்னார்களாம். தோட்டத்திற்கு போய் முயலை பிடித்து வந்து அடித்து சமைத்த பெண்ணுக்கு அதை சுவைக்க ஆசை ஏற்பட்டதாம். முயலின் ஒரு காலை எடுத்து சுவைத்து சாப்பிட்டாளாம். மிச்சம் இருந்த முயல்கறியை பரிமாறினாளாம். மூன்று கால்கள்தானே இருக்கிறது மிச்சம் ஒன்று எங்கே? என்று கேட்டார்களாம் வீட்டுக்காரர்கள்.

நான் தோட்டத்தில் துரத்தி துரத்தி பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் இருந்தது என்று வாதிட்டாளாம் அந்த பெண். வழக்கு ஒரு பெரிய மனிதரிடம் போனதாம். விசாரித்த பெரிய மனிதர், முயல்களுக்கு நான்கு கால்கள்தான். இந்த பெண் எதையோ மறைக்கிறாள். எனவே அவள் குற்றவாளி என்று தீர்ப்பளித்தாராம். தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண், வழக்கை ஊர் நாட்டாமையிடம் எடுத்துச் சென்றாளாம்.

அந்த பெண் என்ன பண்ணினாரோ? ஏது பண்ணினாரோ? தெரியவில்லை?! விசாரித்த நாட்டாமை, நாலு கால் இருக்கும் முயலுக்கு மூன்றே காலென்று தவறாக கணக்கிட்டு தீர்ப்பு சொன்னாராம்.

தீர்ப்பைக் கேட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினராம். அந்த பெண்ணும் சிரிப்போடும், திமிரோடும் ஊர் மக்களைப் பார்த்தா ராம்.

நாட்டாமை என்ன சொன்னார் என்ற விபரம் முழுசாக மறுநாள் தான் மக்களுக்கு தெரிய வந்ததாம்.

தீர்ப்பை சொன்ன நாட்டாமை, "முயலுக்கு முன்பக்கம் இரண்டு கால்கள், பின்பக்கம் இரண்டு கால்கள், ஆக மொத்தம் மூன்று கால்கள். எனவே முயலுக்கு மூன்றே கால்கள்தான். எனவே, அந்த பெண் நிரபராதி" என்று தீர்ப்பு சொன்ன சங்கதியை கேட்டு ஊரே சிரித்ததாம். இப்ப நீங்க சொல்லுங்க!

முயலுக்கு மூன்று கால்களா? நான்கு கால்களா? அந்த பெண் நிரபராதியா? குற்றவாளியா? அந்த பெண்ணு க்கு தண்டனை தரவேண்டுமா? வேண்டாமா?
## வாட்ஸ் அப் பில் பரவி வந்த
குட்டிக் கதை .

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...