ஞாயிறு 09 2012

பரதேசிக்கு மூன்றாம் உலகப்போரின் பக்கவாத்தியம்.......................




பக்கவாத்தியத்தின் மறுபெயர் ஜால்ரா என்று பெயர். ஜால்ரா எததெக்கு போடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யார்யார் எப்படி பக்கவாத்தியம் செய்தார்கள் என்பதுதான் தெரியாத விசயம் அதில் ஒன்றுதான் கருவாச்சி காவியம் படைத்த ஒலகமகா கவிஞர், மூன்றாம்  உலகப்போர்படைத்தவர்  இந்திய அரசின் விருதுகளை அள்ளிக் குவித்தவர் அவராவது பக்கவாத்தியம் போடுவதாவது  எல்லாரும் அப்படித்தான் நிணைப்பீர்கள் மூன்றாம் உலகப்போரின் வார்த்தை ஜாலங்களை படித்துப் பாருங்கள்

சேது படமெடுத்த பாலா சேது பாலான்னு பேரெடுத்தவர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி “பரதேசிஎன்ற பெயரில் படம் எடுத்து,அந்தப்படத்தின்  பாடல் மற்றும் டிரைலரின் விளம்பர நிகழ்ச்சியின் வெளியீட்டு விழா நடத்தினார். அந்தப்  நிகழ்ச்சியில் மூன்றாம் உலகப் போரின் பக்கவாத்தியம்தான் ரெம்ப ருசிகரமாக இருந்தது.
பரதேசி பாலா படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்ததும் எல்லாருக்கும்போல அல்லாமல்  கவிக்கு மட்டும் ஒரு அதிர்வு ஏற்ப்பட்டது அந்த அதிர்விலிருந்து கோல்டன் உதிர்த்த பக்க வாத்தியங்கள்

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம் யாரும் தவறவிட்டுவிடக்கூடாது பஞ்சம் பிழைக்க போகும் ஒரு கூட்டத்தின் வாழ்க்கை இதில் பிம்பப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாத்தியத்தோடு நிற்காமல்“ பரதேசி பாலா தன் படங்களில் மனிதனின் மறுபக்கத்தை பார்க்க ஆசைபடுபவர், பரதேசி படத்திலும் அவர் இப்படித்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்.

நீரோட்டத்துடன் ஓடுவது செத்த மீன் (அட) நீரோட்டத்தை எதிர்த்து ஓடுவது உயிருள்ளமீன்(அடடா) அந்த மீன்தான் பரதேசி பாலா, அவரது படத்துக்கு பாடல் எழுதியது வித்தியாசமான அனுபவம் என்று தன் பக்கவாத்தியத்தை  தொடர்ந்தார்.

பஞ்சம் பிழைக்க போகும் கூட்டத்தைப்பற்றிய வலி எனக்கு தெரியும். வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களே எழுத்துகளாக வருகின்றன
சினிமாவில் எழுதி குவித்த காமரசம் சொட்ட சொட்ட ததும்பும் பாடல்கள்  காதல் பாடல்கள் குத்துப்பாடல்கள் எல்லாம் அவருடைய  அனுபவம்தான். ப கவி எழுதிய பாடல்களின் வரிகளை மாற்றாத ஒரே இயக்குநர்ரு பாரதிராஜா மட்டும்தானாம். பரதேசி பாலா கூட பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என்றபோது நன்றாக இருந்தால் மாற்றிக் கொல்லுங்கள் என்று விட்டு பாடல் வரியை மாற்றி விட்டால் சொல்ல வந்த கருத்து மாறிவிடும் என்றவுடன் பரதேசிபாலா அதைப்புரிந்து கொண்டு கவியின் பாடல் வரிகளை மாற்றமால் பயன்படுத்தியதில் பாரதிராஜாவக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாராம்.

 தாம் எழுதும் பாடல்களை தன் அனுபவமாக்கூறும் கவிராயர். தான் பிறந்தமண்ணில்நிலவும்சாதிவெறியையோ,இரட்டைகுவளைப்பற்றியோ,
சாதிமறுப்பு திருமணகொடுமையை பற்றிய அனுபவத்தை பாடவில்லை. இவர் தூக்கி வைத்து ஆடும் இரு இயக்குநர்களுக்கும் அது பற்றி வாயே திறக்கவில்லை   

இதே பரதேசி பாலா  மூன்றாம்உலகப் போரின் பக்கவாத்திப்படி மனிதனின் மறுபக்கத்தை பார்த்த்தினால்தான். நான் கடவுள் படத்தில்   நடித்த மாற்று திறனாளிகளுக்கு பேசியபடி ஊதியத்தை தராமல் பட்டை நாமம் போட்டார்.  பிதாமகனில் நடித்த விக்ரமுக்கு ஊதியத்தை குறைத்து கொடுத்து மொங்கா போட்டார். பரதேசி படம் வந்த பிறகுதான் அதில் நடித்தவர்களில் எத்தனை பேரை பரதேசியா ஆக்கியிருப்பதும் தெரிய வரும்.

முன்னொரு காலத்தில் அரசர்கள் நாட்டை ஆண்டபோது மன்னனின் கொடுங்கோல்  கொடுமையின் அவலத்தை பாடாது  அதை மறைத்து இல்லாததை ஏற்றி போற்றி மன்னனை  புகழ்ந்து வாழ்த்திபா பாடி வயிறு வளர்த்து புகழ் பெற்றார்கள்.  இந்தக் காலத்து கவிப் புலவர்கள்.அவர்களின் அடியோற்றி  சமூகத்தில் நிலவுக்கூடிய உண்மைகளை மறைத்து பொய்யாக திரித்து  நிழலை நிஜமென்று காட்டி மாயையில் ஆழ்த்துபவர்களை வாழ்த்தும்  பக்கவாத்தியங்களாக  புலவர்களும், மூன்றாம்  உலகபோர் கவிராயர்களும்  வாழ்த்துப்பாடி தானுண்டு,தன்கவியுண்டுமாய் சொத்தும் புகழும் சேர்த்து ஒலக பிற்போக்குத்தனமும் சீரழிவும் நிறைந்த கவி உலகில் கவி பேரரசுகளாக.கவி சக்ரவத்திகளாக,காட்டிலே வாழும் சிங்கங்களாக.புலிகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.




உலகப்போர்,பக்கவாத்தியம்,

1 கருத்து:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...