திங்கள் 04 2016

டூமில்...சுட்டச் செலவு ஆறு கோடி....!!!

பெறுநர்; -            மத்திய உள்துறை அமைச்சகம்..

அனுப்பநர்;-    . துணை முதல்வர் ,பஞ்சாப்

பொருள்; -         டூமில்....சுட்டச் செலவு ஆறு கோடி கேட்டது சம்பந்மாக....


அய்யா,


கடந்த மாதம் 2ந்தேதி பஞ்சாப் மாநிலம்பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில், தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் டூமில் சம்பவத்தில் துணை இராணுவ்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜனவரி 2ந்தேதி முதல் 27ந் தேதி வரை பாதுகாப்பு மற்றும் கண்கானிப்பு பணியில் மத்திய துணை இராணுவப்படை ஈடுபட்டதற்க்கான செலவான ரூ6.35 கோடியை பஞ்சாப் அரசு  வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிற்க;-

துணை இராணுவப் படையானது. மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக அழைத்து வரப்படவில்லை. இந்தீய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடூறுவலை தடுப்பதற்க்காக  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு  பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணி  உள்துறை கட்டுப்பாட்டில்தான் வருகிறது்.

எனவே, டூமில்.. சுட்ட பணம்  ரூ..ஆறு கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும். பஞ்சாப் அரசு வழங்கப் பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.

                                                                                                                                      ஒப்பம்
                                                                                                                             துணை முதல்வர்
                                                                                                                                            பஞ்சாப்.


8 கருத்துகள்:

  1. இதுக்கும் குழாயடிச் சண்டையா ?...

    நன்றி சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் அப்படித்தானே இருக்க வேண்டும்
    இது இந்தியாவைப் பாதுகாத்தக் கணக்குதானே
    எப்படி பஞ்சாப் கணக்காக எடுக்க முடியும் ?

    பதிலளிநீக்கு
  3. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் நடந்த சம்பவத்துக்கு மாநில அரசு எப்படி தரமுடியும் ? இதிலும் அரசியலா ?தீவிரவாதிகள் கூட இப்படி சண்டை இட்டுக் கொள்வதில்லை :)

    பதிலளிநீக்கு
  4. அடடே இந்திய கு(ட்)டி மகனின் கடன் இன்னும் ஏறும் போலயே....

    பதிலளிநீக்கு
  5. ஆம், மைய அரசுதான் வழங்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. ஹஹஹஹ் நல்ல இழுபறி...சரி சமீபத்தில் இராணுவத்தினர் எதற்கோ ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதற்கான செலவு..???

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...