சனி 07 2017

பொய்ப்புகாரில் அபராதம்

அந்தக் காவல் நிலையத்தில்    சங்கிலியால் கட்டப்பட்டுக் கடந்தவரின் அருகில் அவர் ... இன்ஸ்பெக்டர் ரவுன்ட்ஸ் போய் இருப்பதால் அவர் வந்தப் பிறகு விசாரிப்பதற்க்காக  போலீஸ்காரர்களின் வசவு மட்டும் மிரட்டலோடு அவர் உட்கார வைக்கப்பட்டார்..

காவல் நிலையத்திற்குள் வருகிற ஒவ்வொரு போலீஸ் காரர்களும் தனியாக உட்கார வைக்கப்பட்டவர்களை என்ன? ஏது? என்று விசாரித்தனர்... அப்படி ஒருவரை என்ன விபரம் என்று கேட்டு விசாரித்துக் கொண்டே கடுங்கோபத்துடன் டம்மு.டும்முன்னு  விசாரிக்கும் போலீசார் தாக்குவார்கள்...
சிறப்பு உதவி ஆய்வாளர் என்று சொல்லப்படும் போலீஸ்காரர்களும் தங்கள் அதிகார பலத்தை விசாரனைக்கு அழைத்து வந்து உட்கார வைக்கப்பட்டவர்களிடம் காட்டுவார்கள்....

இப்படி வருகிற  ஒவ்வொரு போலீசும்  தங்கள் அதிகார பலத்தை கட்டிக் கொண்டே வரும்பொழுது  அவர் முறை வந்த பொழுது... ரவுண்டஸ் போயிருந்த இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார்.... அவர்  நிலையத்துக்குள் வந்தவுடன் ஒவ்வொரு போலீசும் தங்கள் மொழியில் அய்யா வணக்கம் அய்யா. வணக்கம் சார், என்று சல்யூட் அடிக்காத குறையாக மரியாதை செலுத்தினார்கள் காவல் நிலைய வாசலில் நின்ற துப்பாக்கி ஏந்தியபடி நின்ற போலீஸ் மட்டும். டப்..டுப் என்று சத்தம் எழுப்பி துப்பாக்கி தூக்கி  மரியாதை செலுத்தினார். அவர் அப்படி  செய்தது.. காவல் நிலையத்துக்குள் இன்ஸ்பெக்டர் வந்துவிட்டார் என்பதற்கும் ஒரு அடையாள அறிவிப்பாகவும் இருந்தது.

 போலீஸ காரர்களிடம் அடி வாங்காமல் தப்பித்த அவர்..  வந்திருந்த பெரிய பிரமுகர்களை சந்தித்து அவர்களின் புகார்களை பெற்றுக் கொண்டு சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவர்கள் சென்ற பிறகு... அவர் இன்ஸ்பெக்டர் முன் நிறத்தப்பட்டார்.


“பேரு... என்னடா...”..

“கணேசன் சார்,

“ என்ன வேல பாக்குற..”

“ பிரிண்டிங் தொழில் பாக்குறேன் சார்,

“ புகார் கொடுத்த அவரின் சித்தப்பனின் மனைவியை அழைத்தார். அருகில் நின்றிருந்த அந்தப்பெண் இன்ஸ்பெக்டர் முன் நின்றதும்”

“ இந்தம்மா யாருடா..”

“ என் அப்பாக்கூட பிறந்தவரின் மனைவி..சார்,”

“ என்னடா..சித்தப்பன் மனைவி சித்தின்னு சொல்லத் தெரியாதா..டா”“?ஃஃஃஃஃஃ

“..................”

“இந்தம்மாவ கெடுக்க முற்பட்டாயா..”

“ சார்..இல்ல சார், இந்தம்மா பொய்யா என் மேல புகார் கொடுத்திருக்காங்க  சார், ”

“வெண்ண.... பொய்ப் புகாரா.. நிஜம்மா... நா... சொல்லனும்டா...” நீ என்ன பொய்ப் புகாருன்னு  சொல்றது..... வெண்ண  பேண்ட்ட கலட்டுறா....”-- ஒரு போலீஸ்காரரை பேர் சொல்லி கூப்பிட்டார்.” வந்த போலீஸ் காரர்தான்.. அவரை வீட்டிலுிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தவர்.. அவரிடம் விசாரித்தார்..


“ போலீஸ்காரர் விசயத்தை சொன்னார்.   அய்யா.. ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரங்க..... இவரு..அவரு வீட்டை ஒட்டி க்ககூஸ்க்கு செப்டாங்கிக்காக  குழி தோண்டியிருக்கிறார். . இந்தம்மா வழக்கு நடககுற இடத்துல எப்படிடா.. குழி தோண்ட போச்சன்னு தடுத்து இருக்கு... அதுல இவரு சேலைய உருவி... ரவிக்கையை கிழிச்சு கெடுக்க முயற்சி பன்னயிருக்கிறார் அய்யா என்றார்.

“ சார்..  சண்டை நடந்தது உண்மைதான் சார், ஆனால் சேலையை உருவி, சட்டையை எல்லாம் கிழிக்கல சார், இந்தம்மாவும் இவரு வீட்டுக்காரரும் மற்றும் இவங்க வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து என்னைத்தான் அடி அடின்னு அடிச்சாங்க.... சார், நான் இவங்கள.. அடிக்கல சார், இவங்க அடிக்கிற அடியைத்தான் தடுத்தேன் சார்,”....

“பொய் சொல்றான் சார், குழி தோண்டக்கூடதுன்னு சொல்லத்தான் செய்தோம் சார், கெட்ட வார்த்தையில என்ன திட்டி.. என் வீட்டுக்கார கீழே தள்ளி , என்கிட்ட வந்து நான் கட்டியிருந்த சேலையையும் சட்டையையும் கிழித்துவிட்டான் சார்.. அதுக்குள்ள என்  பிள்ளைக வந்து இவன்கிட்ட இருந்து என்ன காப்பத்த்தியிருச்சங்க  சார்,


“இவன் உனக்கு என்னம்மா வேனும்”

” மச்சான் மகன் சார், என் வீட்டுக்காரருக்கு அண்ணன் மகன் சார்,” இவனுடைய அம்மா என் அப்பாவோட பிற்ந்த பெரியப்பா மக சார்.. எனக்கு அக்கா்  சார்....”

“ அப்ப..  இவன் உனக்கு மகன் முறை வேனும் என்றபடி குற்றம் சாட்டப்பட்ட அவரை இனஸ்பெக்டர் பார்த்த போது.. பேண்ட்டை கழற்றி சட்டியோடு நின்றிருந்தார்.”

“ஏன்டா.. பேண்ட கழட்டுன....” நீங்கதான் தான் கழட்ட சொன்னீங்க..”

“ மாட்டுறா வெண்ண.”.. என்று இன்ஸ்பெக்டர் சவுண்டு விட்டதும்  கையில் வைத்திருந்த பேண்ட்டை திரும்பவும் அணிந்து கொண்டார்.”

“ டே...நாயி... உனக்கு அம்மாட.. நாயி....”

“ சார். இந்தம்மா.. பொய் சொல்லுது சார்”

“ டேய்.. வாயை மூடுறா...” உனக்கு வயசு என்னடா.... . ஒனக்கு பொண்டாட்டி பிள்ள இருக்கா..டா”

“ நான் கலியாணம் முடிக்கல சார்”

“ அப்போது  வயர்லெஸ் ஒலிக்க.... இன்ஸ்பெக்டரிடம் கொண்டுவந்தார் ஒரு போலீஸ்காரர்... அதை வாங்கிய இன்ஸ் பெக்டர் .. கேட்டுவிட்டு திரும்பவும் அந்தப் போலீஸ்காரரிடம் கொடுத்துவிட்டு,.. அந்தப் பெண்ணிடம்  , நீ போயிட்டு சாயந்தரமா..வாம்மா என்று சொல்லிவிட்டு,  வேறு போலீஸகாரரை கூப்பிட்டு.. இவனை உள்ளறையில் இருக்க வை.. என்றுவிட்டு தொப்பியை கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் படை சூழ... விரைவாக வெளியே சென்றார்.

5 கருத்துகள்:

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...