ஒரு நாயை கொல்வதென்றால்
தீர விசாரித்து கொல்வார்களாம்
கொலைகாரர்கள்.
குற்றமற்ற மனிதர்களை
அதுவும் தமிழர்களை
தீர விசாரிக்காமல் தண்டனையும்
கொடுத்து,அது முடிந்தும்
கொல்வார்களாம்-கொலைகாரர்களின்
கொள்ளைர்களின் வாரிசுகள்
சூரியன் அஸ்தமிக்காத கொள்ளையனிடம்
கூட்டிக கொடுக்காமல் காட்டிக் கொடுக்காமல்
ரத்தம் சிந்தாமல் பெற்றார்களாம்
ஜனநாயத்தை
அந்த ஜனநாயக நாட்டில் மூவர்க்கு
ஜனநாயகப்படி துாக்காம்
சுட்டவனை சுட்டு-சுட்டவனோடு
மாணடவர்கள் உயிருடன் இல்லாததால்
சுடாமல் இருந்தவர்களை,வலை வீசி
பிடித்து இருபது ஆண்டுகள சிறையில்
வதைத்தும், போதாதென்று மூவரையும்
துாக்கிட்டு கொல்வார்களாம்.
ரத்தம் சிந்தா ஜனநாயக நாட்டில்
ஊத்த வாய்(ர்)கள் சொல்கிறார்கள்
சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்
ஆண்டைகளுக்காக
கருப்பு சட்டங்கள் மூலம்
கொலை வெறியர்களுக்காக!
கொள்ளைக்காரர்களுக்காக!!
கக்கியதை நக்கி மாண்டவனுக்காக
கொல்லாமல் கொல்லுவதற்து
ஆறப்போட்டு கொல்லுவதற்கு
மானிட நீதியையும்,உயிர் வாழும்
உரிமையையும் ஒழிப்பதற்கு
சட்டம் தன் கடமையைச் செய்யும்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.
உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...
-
படம்- poocharam.net நான்கு தனிமங்கள் தற்செயலால் இணைகின்றன. இணைவதின் பயனால் உருவமுள்ள தோற்றம் ஒன்று உருவாகிறது. இந்த தனிமங்களின் ...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
-
மேலும்- பிரமாண்ட இயக்குநரின் பிரமாண்ட படத்தின் விபரங்களுக்கு காப்பி அடிப்பதிலும் தன் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய பிரமாண்ட இயக்குநரின...
பெரும்பான்மை மக்கள் விரும்பாத அரசு ஆட்சி புரியும் கொடுமை தான் இந்திய ஜனநாயகம்...
பதிலளிநீக்குஅதில் நீதியாவது,
வெங்காயமாவது..
தங்கள் கூற்று உண்மைதான்
பதிலளிநீக்கு