அவரு என்ன வாத்தியராகவா இ ருந்தாரு
ஒன்னாந் தேதிக்கு முன்னாடி சம்பளம்
வாங்கும் ஊழியராகவல்ல இருந்தாரு
பள்ளியில் வகுப்பறையில் சொல்லாமல்
மாலை வேளையில் அவர் வீட்டு
வகுப்பறையில காசு வாங்கில்ல
பாடம் நடத்தினாரு
முதல் நாளு புத்தகத்தை மனப்பாடம்
செய்து மறுநாளு கரும்பலகையில
வரிவிடாமல ஒப்பித்தாரு
துணிந்து கேள்வி கேட்டால்
புத்தகத்தை பார்த்து தெரிந்து கொல்லு
னு சொன்னாரு
முதல் வரிசையில் அமர்நதிருந்த
என்னை கடைசி பெஞ்சில துாங்க
வுல வச்சாரு
ஜால்ரா த்ட்டும் மாணவர்கள் இவர்
முன்னே தட்டாதவர்களுக்கு வேட்டு
வைப்பார் பின்னே
இவர் வீட்டு வேலைக்கு போக வில்லை
யென்றால் செய்முறை தேர்வின்
விருப்ப மதிப்பென்னை போடாமல்
போடாமல் மறுப்பார்.
காரணமில்லாமல் பிரம்பால் அடிப்பார்
தலைமை வாத்தியிடம் சொன்னால்
அந்தத் தலையாட்டி பொம்மை
சொன்னதுக்கு திருப்பி அடிக்கும்
மாணவன் தப்பு செய்தால் வாத்தியிடம்
சொல்லலாம். அந்த வாத்தியே தப்பு
செய்தால் யாரிடம் சொல்வது
பாடம் நடத்தும் வாத்தி மாணவியை
மான பங்கம் செய்யுது
டீச்சரு,படிக்கும் மாணவனை
கடத்திக்கிட்டு ஓடுது
மேல்ஜாதி வாத்தி ஜாதி
வித்தியாசம் பாக்குது
அரசாங்க வாத்திக்கு அழுக்காத
வேலை கொளுத்தகூலி ஓய்வு
நிறைந்த நாட்கள்
பத்தில் மூன்று முன்னேறுவதற்கு
அடிமை கல்வி போதிக்கும்
வாத்திக்கு செப்பு டம்ளரு
அய்ந்து தினமாம்
வாத்தியில் ஆனென்ன பென்னென்ன
இதுகள் ஏங்கினால் நாடு ஏங்குமாம்
பிழைப்பு வாதத்தின் பிதாமகன்
சொன்னாராம்
இந்த வாத்திகள் வளரும் தலைமுறை
களிடம் எதை ஊட்டுகின்றன
அறிவையுமில்லை வீரத்தையுமில்லை
அடிமைதனத்தையும் அச்சத்தையும்
சுயநலத்தையும் போதிக்கும் வாத்தி
மார்களுக்கு செப்பு......டம்பரு அய்ந்து
தினமாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
தலை எழுத்தை தவறாக எழுதிய வலி உங்கள் எழுத்துக்களில், வலியை போக்க வில்லை, மேலும் அதிகரித்திருக்கிரீர்கள்... பலர் வாழ்க்கையை தவறாக திருப்புவர்களில் தெய்வம், குரு, பிதா, மாதா..
பதிலளிநீக்குஎன்னசெய்வது சில எழுத்துகளில் சொல்லும்போது
பதிலளிநீக்குவலி அதிகரிக்கரித்தான் செய்கிறது. போக்க முயல்கிறேன் ஜீவா