திங்கள் 01 2012

செத்துப்போவதற்கு 1008 காரணங்களில் இதுவும் ஒன்று........



   மதுரையை சேர்ந்தவர் முனிஸ்வரன் இவருடைய மகன் வசந்த குமார்
வசந்தகுமார்.ஆறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில்
உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல் பிரிவில்
நான்காம் ஆண்டு படித்துவந்தார். மொத்தம் 22 பாடத்தில் அரியர் வைத்
திருந்தார்.
   
   பலமுறை முயன்றும் அரியரை குறைக்க முடியவில்லை. இதனால்
தனக்கு இனிமேல் படிப்பு வராது என்று முடிவெடித்து. கல்லூரிக்கு
செல்ல மறுத்துள்ளார்.
    
   தந்தை முனிஸ்வரனோ.அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் இன்று
நல்ல நிலமையில் உள்ளதைக் கண்டும் கேட்டும்( 100க்கு 20பேர்)
தன் மகனும் அந்த நிலமைக்கு வரவேண்டும் என்ற ஆசையில்
தன மகனை கல்லூரிக்கு சென்று படிக்க கட்டாயப்படுத்தியுள்ளார்
தந்தையின் வற்புறுத்தலால் (மிரட்டலால்) வேண்டா வெறுப்பாக
கல்லூரிக்கு சென்று வந்தார்.
   
   ஒரு நாள் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று வந்த வசந்தகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு  வீட்டில் யாரும் இல்லாத
நேரத்தில் நையிலான் கயிற்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து
கொண்டார்
   
   இது குறித்து தந்தை முனிஸ்வரன் புகார் செய்ய, வழக்கம்போல்
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக செய்தி வெளியிட்டது.
   
   அரியரை முடிக்க முடியாமல் தோல்வி கண்ட வசந்தகுமார். வாழ்வின்
வசந்த்தை முடித்துக் கொண்டதுபோல 1870 காலி பணியிடங்களுக்கு
ஒன்பது லட்சம் பேர் தேர்வு எழுதிய வேலையற்றவர்கள் நிறைந்த
நாட்டில் அய்யோ! நான் தேர்வு எழுதியும் எனக்கு வேலை கிடைக்க
வில்லையே! என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கும்
அடுத்தக் காரணமும் கிடைத்துவிடும்.
       
        ஒருசிலரை வாழ வைக்கும் தனியுடமையை அழித்து
        பலரை வாழ வைக்கும் பொதுவுடமை படைக்க மடிவதே
        பல வழிகளில் சிறந்த ஒரே வழி!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...