பக்கங்கள்

வெள்ளி 17 2014

என்னிடம் இருப்பது ஏராளம்.........(சிறைக்கவிதை)

மழையில் சொட்டச் சொட்ட நனைந்த
ஒரு நாளின் மாலைப்பொழுது
ஒளியில் இட்டு நெய்தெடுத்த
ஒரு வாழ்ககை

ஒருமித்த கூட்டுணர்வால்
உருவான நாங்கள்
அங்கே விளைந்து
பயிரான நான்

என்னிடமிருந்து உன்னால்
எதை எடுக்க முடியும்
இந்த மாலைப்பொழுதை
எந்த இருட்டுச் சிறையில் பூட்ட முடியும்?

ஒரு உயிரைப் பிறிதோர் உயிரால்
மோதித் தேய்த்து
அழித்துவிட முடியுமோ உன்னால்?
எம்மிலிருந்து என்னைத்
தனனியே பிரித்துவிட முடியுமோ
உன்னால்?

என்னிடம் ஏதுமில்லை
என்றாய் அல்லவா,
உன்னை வெல்லும் சக்தியே
அங்குதான் உள்ளது.
என்னிடம் இருப்பது ஏராளம்
ஏதுமில்லை என்பதிலும் ஒன்றிருப்பது
உனக்கு தெரியாது

--------பாஷ் (சிறைக்கவிதை)











நன்றி! புதிய கலாச்சாரம் மே. 2004.

2 கருத்துகள்:

  1. சிறைக் கவிதை என்றாலும் சிந்தனை சிறைப்படவில்லை !
    த .ம 1

    பதிலளிநீக்கு
  2. தங்களின் கருத்துரைப்படியே,அவருக்கு சிந்தனை சிறையிடப்படவில்லை. நன்றி! Bagawanjee KA

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...