சனி 04 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...100

 புத்தக விரும்பிகள் - Book Lovers

உலகத்தையே ஜெயிக்க நினைச்ச பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது....
சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசிக்காலம் கழிந்தது...
அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து
இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும் என்று கூறி அவரிடம் கொடுத்தார்.
ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை...
சிறிது காலத்தில் இறந்தும் போனார்...
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் நெப்போலியனிடம் இருந்த அந்த சதுரங்க அட்டையை ஏலம் விட,
அதை ஆய்வு செய்தபோது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது..
அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது...
ஆனால் அவரின் மன உளைச்சலும்... பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....
உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூரான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி . . . .
மரத்தால் செய்யப்பட்ட பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியில் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்....
மாவீரனானாலும் சரி.... சிறிய எலியானாலும் சரி... பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது....

53

3 கருத்துகள்:

  1. 'பதட்டமும் மனஉளைச்சலும் சிந்தனையை செயல்படாமல் வந்துவிடுகிறது ' நிச்சயமாக.
    அதுதான் முன்னோர் சொல்லி இருக்கிறார்கள் 'பதறாத காரியம் சிதறாது '

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...