ஞாயிறு 31 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -7

 வழக்கம் போலவே  காதலர்கள் கூடும் செனட் சபைக்கு சென்றேன். கூட்டத்தில் புதியவர்கள் சிலர் இருந்தனர். அந்தப்புதியவர்களிடம் பழையவர் ஒருவர் காதில் கிசு கிசுத்தார். நான் கவனித்தேன் ..ஆனால் சொன்னார் என்று தெரியவில்லை. நார்மலாக பேசினாலே எனக்கு கேட்காது.. இதில் கிசு கிசுத்தால் சுத்தமாக கேட்காது..

அவர்கள் கிசு கிசுப்பதை பார்த்தபடியே.. செனட் சபையின் கூட்டத்தில் உட்கார குனிந்தேன். புதிய காதலர்களில் ஒருவர் என்னிடம்  சில கேள்விகள் கேட்டார். உட்காருவதை தவிர்த்து நின்றபடியே அந்தக் காதலர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்.

“உங்களுக்கு டீ குடிக்கிற பழக்கம் இருக்கா...”?

“இல்லை”  ...

“புகை பிடிக்கும் பழக்கம்”....??

“ இல்லை”..

“ தண்ணி அடிக்கிற பழக்கம்”...???

“ இல்லை..”

“ திருமணம்....செய்து......

“ இல்லை”......

“காதலிச்சு இருக்கீங்களா...????”...

“ இல்லை”....

“ சரி., பெண்களை சைட்டாவது அடிச்சிருக்கீங்களா...”??????

“ இல்லை..”

“ யோவ்... அப்ப என்னதாய்யா வாழ்க்கையில செய்திருக்க..”...

“ எதுவும் இல்லை”


“எதுவுமே செய்யாமல் இருக்கும் நீவீர் காதலர்கள் கூடும் இந்த செனட் சபைக்கு என்னா மயித்துக்கு வர்ரீரு.... போய்யா...போயி தனியாக உட்காரு ” என்று செம கடுப்புல..கையை நீட்டினார்

அந்தக் காதலரின் கோபத்தை அறிந்த நான் அவர் கை நீட்டிய இடத்தில் போயி அமர்ந்தேன்.  என்னைப பற்றி கொச்சையாக பேசினார். அதைக் கேட்ட பழைய காதலர்களில் இருவர் என்னைப் பற்றி கொச்சையாக பேசுவதை கேட்டு.. கொச்சையாக பேசாதே என்று தடுத்தனர். புதிய காதலரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

 நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை..  ஒருவரை சுட்டிக்காட்டி இவரது பார்வையில் தியாகி.... எனது பார்வையில்  கேனயன்...,ஏமாளி... உங்களது பார்வையில்....நையன், ஓம்போது ..... இவரின் சித்தப்பனின் மனைவி. இவர்மீது  மானபங்கம் செய்ததாக புகார் கூறியபோது... இவர் ஆண்குறியை ஒன்னுக்கு இருக்க மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை. நம்பவில்லை என்றால் பரிசோதிக்கலாம் என்றார் பாருங்களேன்... ஆண்மையற்றவன் மலடாக இருக்கிறவன்கூட ஆசை இல்லாமல் இருப்பதில்லை. நானே பலமுறை கோளாளாறு எதுவும் இருக்கலாம் பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன் . பாத்துக்கலாம் என்று சொன்னாரே தவிர பரிசோதனை செய்தாரா என்று தெரியவில்லை. அவரை தனியாக உட்கார வைக்க வேண்டாம். அவருக்கு காது கேட்காது அருகில் உட்கார வைக்கலாம் என்றபடி  கை சைகையால் என்னை அழைத்து அருகில் வந்து அமரும்படி செய்தார். புதிய காதலர்களும் வியப்புடன் பார்த்து அனுமதித்தனர்.

நிற்க.... காதலர்கள் சொன்ன சரடு கதைகள் என்பது  காதலர்களின் செனட்  சபையில் காதலர்கள் சொன்னவைதான் அந்தக் கதைகள் எனது பாணியில்  எழுதியவைகள்தான்.. படிப்பவர்களின் புரிதலுக்காக..................



2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...