பக்கங்கள்

நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 19 2026

7 அடி உயரமுள்ள உயர்ந்த மனிதர்கள்

 



உயர்ந்த மனிதர்கள்

என்பவர்கள் யார்

என்று என்னை 

கேட்டார்கள் நான்

கேட்டவர்களிடம் கேட்டேன்

உயர்ந்த மனிதர்கள்

யரென்று  அவர்கள் 

சொன்னார்கள் அதிக

செல்வமும் செல்வாக்கும்

உள்ளவர்களும், உயர்ந்த

பதவியில் இருப்பவர்களும்

ஏழைபாழைகளுக்கு உதவி

செய்பவர்களும் சமூகத்தில்

உயர்ந்த மனிதர்கள் 

 என்றார்கள் எனக்கு

 அப்படித் தெரியவில்லை

சமூகத்தில்  7 அடி

உயரமுள்ள மனிதர்கள்

தான் உயர்ந்த 

மனிதர்கள் என்று.............


வெள்ளி 12 2024

நான் கண்ட கனவு எனக்கு பலித்தது....1


புத்தகத்தை திறந்து இரண்டு பக்கம் படித்து முடிக்குமுன்னே..தூக்கத்துல தல ஆடிவிடுகிறது. உடனே புத்தகத்தை மூடி வைத்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். நன்றாக தூங்கிக் கொண்டு இருக்கும்போது செல் ஒலி எழுப்பி விடுகிறது.. யாராச்சும் வரச் சொல்லி பேசுவாங்க.. வருவதற்கு ஒரு நேரத்த சொல்லி செல் போன நோண்டிகிட்டு இருக்கும்போதே திரும்பவும் தலை ஆட்டம் கண்டுவிடும். திரும்பவும் படுத்து சிறிது நேரம் தூங்குவேன்..

பகலில் நாயாய் மாடாய் அலைந்து விட்டு, இரவில் ஏழு மணிக்கு தொடங்கின்ற வேலை இரவு மூன்று மணிவரை முடியும். சில நேரங்களில் அந்த வேலை முடிந்துவிடும் .சில வேளைகளில் முக்கால் பங்கு வேலை முடிந்துவிடும் கால் பங்கு வேலை பாக்கியிருக்கும் அந்த வேலையை முடித்து விட்டு தூங்கலாம் என்று எண்ணிலாலும், தயார் படுத்தினாலும் முடியாது சோர்வு தட்டி அப்படியே தூங்கிவிடுவதும் உண்டு.

கொரனா காலத்திலும் கொரனா முடிந்த காலத்திலும் வேலை இல்லாத காரணத்தால் வேலை பார்த்து வந்த மருமக,மருமகன்கள் தனித்தனியாக வெவ்வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டபடியால் ஒரே ஆளாக பகலில் அலைவதும் இரவில் வேலை செய்வதுமாக  பழகிக் கொண்டேன்.

உண்ணுவதும் உறங்குவதும் விதிப்படி இல்லாமல்  வேலையின் நிலைமையை ஒட்டி மாறிவிட்டது.  ஒற்றைவழி வரும் வருமானத்தை வைத்தே ! கொரோனா வுக்கு முன் வாங்கிய  மிஷின் லோனும் . எனது சாப்பட்டுக்கும்  யாரிடமும் கையேந்தாமல் பயன் படுத்தி வருகிறேன்.

 வேலை இருக்கும் நாளெல்லாம் வேலை நாள்.. வேலை இல்லாத நாளெல்லாம் விடுமுறை நாட்கள்...அந்த விடுமுறை நாட்களில்தான் எத்தனை வேலைகள்

துணி துவைப்பது. இரு சக்கர வாகனத்தை பராமரிப்பது... அலுவலகத்தை சுத்தம் செய்வது இப்படி  வரிசையாக வேலை வந்தபடியே இருக்கும்.

தனிமரம் தோப்பாகாதுதான். என் அக்கா பிள்ளைகளை வளர்த்து அவர்களை ஆளாக்கி தனித்தனியாக செட்டில் ஆக்கி விட்ட காலம் அதிகம் கடந்து விட்டதால் ..நான்தோப்பாகுறதுக்கு எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இருப்பினும் அதற்க்காக நான் வருத்தப்படவும் இல்லை ஏக்கப்படவுமில்லை.

தனிமரமாக இருந்து வாழ்ந்து மடிவதுதான் என் நிலைமை என்றாகிவிட்டதால் அதற்க்காக கவலைப்படுவதுமில்லை. இருக்கும் வரை ஓடிக் கொண்டிருப்பேன்.

பகல்  நேரத்தில் தூங்கும் குட்டி தூக்கத்தினால் கனவு எதுவும் வருவதில்லை. செய்து கொண்டு இருந்த வேலைதான் மண்டைக்குள் குடைச்சலாக இருக்கும் இரவு இரண்டு மூன்று மணிக்கும் தூங்கும் நேரத்தில் தான் எனக்கு கனவு அதிகமாக வரும் அப்படிவரும் கனவுகள் சில நினைவுக்கும் வரும் பல நினைவுக்கு வராமல் மறைந்து   சம்பவம் நடந்து முடிந்த பின்தான் கனவாக வந்தது நினைவுக்கு வரும்.

கண்ட கனவுகளில் பத்துக்கு எட்டு ஒன்பது கண் முன்னே நடந்துவிடும். ஒன்று இரண்டு கனவுகள் நடந்து முடிந்து பின்புதான்....

அம்பானி. அதானி,டாட்டா. பில்லா மாதிரியான பணக்கார அதிபதிகளாக ஆகும் கனவெல்லாம் வந்ததில்லை..இனி வரப்போவதுமில்லை..அந்த கனவுக எல்லாம்  வந்தாலும் பலிக்கப் போவதில்லை.

இப்போதிலிருந்து

கனவு-1

என்னைத் தேடி இரண்டு காவலர்கள் வருகிறார்கள். என் வீட்டுக்கு வரும் தெருப் பாதை இருட்டாக இருப்பதால்  செல்போன் டார்ச்லைட்டில்  என் வீட்டிற்கு வருகிறார்கள். உறங்கி கொண்டியிருக்கும் என் முகத்தில் டார்சலைட் வெளிச்சத்தை அடித்தவாறே என்னை எழுப்பினார்கள்.  திடுக்கிட்டு கண்விழித்து எழுந்தேன். தூக்கம் கலையாமல் என்ன விபரம் என்றேன். எழுந்து வெளியே வரச் சொன்னார்கள்.

துண்டால் முகத்தை துடைத்துவிட்டு மேல் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தபடியே என்ன விபரம் என்று கேட்டடேன். என்மீது புகார் கூறப்பட்டதாக அதை விசாரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். புகாரை தெரிவித்தார்கள் என்ன புகார் என்று தெரியவில்லை. நான் மறுத்தேன் தெருவில் உள்ள பாப்பாத்தி மக மகன்கள்  என்னை சுட்டிகாட்டி வந்த காவலர்களிடம் புகார்களை தெரிவித்தார்கள். நான் என்னவென்று தெரியாமல்  முழித்தேன்.. சிறிது நேரத்தில் காலர்களில் ஒருவர் என்னை நிலையத்துக்கு வரும்படி கையோடு அழைத்து சென்றார். திடிரென்று ஒன்னுக்கு வரவே உறக்கத்திலிருந்து விழித்துவிட்டு வேகமாக கழிப்பறையை நோக்கி ஓடினேன். கழிப்பறையில் சாமி கும்பிட்டுகிட்டு இருக்குபோது கனவில் வந்தவை வரிசையாக வந்தன. என்ன புகார் மட்டும் தெரியவில்லை. வந்த கனவுப்படி எதிர்ப்பாரத்தபடியே இருந்தேன்

காலையில் கண்ட கனவு அன்று இரவு நடப்புக்கு வந்துவிட்டது.

நான் வெளியில் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணி வாக்கில் என் வீட்டுக்கு வந்தபோது என் வீட்டு மேற்கு புறத்தில் பாப்பாத்தி. மகள்களில் இருவர். மகன் இருவர் பேரன் பேத்திகள் கூட்டமாக குழுமியிருந்தனர்.  என்னவென்று நான் விசாரித்தேன். என் பேத்தி வளர்க்கும் இரண்டு நாய்களில் ஒன்று பாப்பாத்தி கடைசி மகளின் மகனை அதாவது பேரனை கடித்துவிட்டதாம்.. நாய் கடித்த காயத்தை பார்க்கலாம் பாப்பத்தி பேரனை கூப்பிட்டேன். மறுத்துவிட்டார்கள். பின் நான் என்ன செய்யவேண்டும் என்றேன். ஒன்னும் செய்ய வேண்டாம் என்றார்கள். சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் கனவில் கண்டபடி செல் அடித்தபடி  என்னிடம் வந்தார்கள். அவிழ்த்து விட்டுஇருந்த சட்டை பட்டனை மாட்டியபடி நான்தான் என்றேன். வந்தவர்கள் இரண்டு பேரும் சவுண்டு விட்டார்கள் நாய் வளர்த்தால் கட்டிபோட்டு வளர்க்கனும் என்றார்கள். நான் அமைதியாக வீட்டுக்குள்ளே கட்டிபோட்டுத்தான் வளர்க்கிறேன். ஒன்-பாத் போவதற்க்காக நாய் வந்தபோது கடித்தவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். என்றுவிட்டு அமைதியானேன்


சிறிது நேரத்திற்கு பிறகு வந்த காவலர்களில் ஒருவர் சொன்னார். நாய் கடித்துவிட்டது. அதற்குண்டான ஆஸ்பத்திரி செலவை கொடுத்துவிடுங்கள் என்றார். சரி என்றேன். வந்தகாவலர்கள்  என் பெயர் வயது அப்பா பெயர் கேட்டவர்கள் சாதியை கேட்டார்கள் தோழர் என்றேன். பதில் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். பாப்பாத்தி கடைசி மகளிடம் ஆஸ்பத்திரிக்கு சென்று எவ்வளவு என்று சொல் ஜிபே-ல் அனுப்பி வைக்கிறேன்.என்று விட்டு அப்பாடா ஒரு கனவு பலித்துவிட்டது என்று பெருமூச்சு விட்டபடி..ஆஸ்பத்தரி தொகையை எதிர்பார்த்தபடி காத்திருந்தேன்.

சனி 13 2024

திடீர் உடல்நலக்குறைவும்..பயமுறுத்திய லேப் பரிசோதனை முடிவுகளும்...





 கொரனாவுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பின்  அதாவது மூன்று வருடங்கள் கழிந்து  திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் முன்னெரிச்சைரிக்கையுடன் இருக்கும் நிலையை மீறி தோன்றிவிட்டது. அருகிலுள்ள கிளினிக் கொண்டு சென்றபோது அந்தக் கிளினிக் மருத்துவர்க்கு உடல்நலமில்லாததால் அவர் கிளினிக் வரவில்லை. அடுத்த கிளினிக் கொண்டு சென்றபோது அந்த மருத்துவர் வெளி வேலையாக வெளியே சென்றுவிட்டார். மூன்றாவதாக ஒரு கிளினிக்கில் சேர்க்கப்பட்டு, உடனடியாக உடலின் பின்புற அடிப்பாகத்தில் இரண்டு ஊசிகள் குத்தப்பட்டு, பின் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

இரண்டு, மூன்று. ஒரு வாரம் கழித்து  சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்னார் உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல், பி.பி.லோ, சுகர் அதிகமாகிவிட்டது, இருதய அடைப்பு உள்ளது. நான் சொல்லவில்லை லேப்பின் பரிசோதனை முடிவுகள் சொல்கிறது என்று லேப் முடிவுகளை காட்டினார்.

டைபாய்டு காய்ச்சல் குணமாகி, சுகர் குறைக்கபட்டு, பி.பிலோ, தடுக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் செலவழித்தபின்  இருதய அடைப்பு நீக்க  ஐம்பதாயிரம் பீஸ் என்று பேரம்பேசி, வீட்டிற்கு வந்து சேர்ந்தாயிற்று..

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் இவ்வளவு செலவு ஆகியிருக்காதே என்று மருமக்களிடம் கேட்டபோது.. அங்கு சேர்த்தால் பிணமாகத்தான் திரும்ப வேண்டியிறுக்கும் என்று பதிலோடு.. அங்கு சேர்த்தால் உடனிருப்பவர்கள் யார் என்ற கேள்வியும் வந்தது.

சிகிச்சையில் இருந்தபோது  சுகர் நோயாளிக்கு உடனிருந்தவர் சொன்னார். காலில் உள்ள புண்ணை சுகமாக்குவதற்க்காக இதுவரை ஐந்து லட்சம் செலவழித்துள்ளதாக சொன்னார். அவரை பார்க்க வந்தவர் ஒருவர் அடுக்காக மாடிகளை கொண்ட தனியார் மருத்துவமனைகள் எல்லாம் உங்களின் நோயை போக்கவா கட்டியெழிப்பி உள்ளார்கள். அது சேவை என்ற பெயரில் காசு பறிக்கதானப்பா..

ஒரு வழியாக நல்ல நிலமைக்கு  வந்தவுடன் உண்ணாமல் உடுத்தாமல் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை  எடுத்து சிகிச்சைக்காக செலவழித்தவர்களுக்கு கொடுத்துவிட்டு.. சேமிப்பு இல்லாத நிலையில்

எந்த பழக்கமும் இல்லாதவனுக்கு டைபாய்டு சுரம், சுகர், இரத்த அழுத்த குறைவு, இருதய அடைப்பு.   . எதை சாப்பிட்டால் பித்தம் குறையும், தொலையும் என்ற ஆழ்ந்த யோசணையில் 2024-ல் 63 ஆண்டு முடிந்து 64 ஆண்டை நோக்கி,


புதன் 10 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -9

 அக்டோபர் முதல் “ ஐடியாக்கல்” கிடையாது    அமைப்பை திறந்தவுடன் இதுதான் கண்ணில்பட்டது. “ஐடியாக்கள் என்ன என்பது எனக்கு தெரியாது.. சரி போகட்டும்...

 சரி.. சரடு கதைக்கு வருவோம்.


அந்த தெருவுக்கு அவன் நாட்டாமை, தலைவர், தெரு கோயில் நிர்வாகி, இப்படி பல பதவிகள். அதோடு சின்னபயல் என்ற பட்டப் பெயரும் அவனுக்கு உண்டு.  அந்தத் தெருவில் குடியிருப்போர்களின் முக்கால் வாசி  வீடுகள் அவனுடையதான். குடியிருக்கும் வீடுகளில்  பாதி பெண்கள் அவனின் வலையில் விழுந்தவர்கள்.அல்லது அவனை தங்கள் வலையில் வீழ்த்தியவர்கள். அதற்கு பிரதிபலனாக அவன் வாடகை வாங்காமல் விடுவது. புதிய துணிமணிகள் வாங்கி கொடுப்பது  அவர் வழக்கம்.

அப்படி புதிதாக அவனது வீட்டிற்கு புதிதாக வந்தவள் ஒருத்தி.சிவத்த மேனி, அழகான நாட்டுக்கடடை அவள். அவளின் கனவனும் அவனும் நெருங்கிய நண்பர்களாயினர். அவளின் கனவர் இல்லாத நேரத்தில் அவளின் கனவர் அவன்தான். அவனை காணவில்லை என்றால். எங்கும் தேடி அலைய வேண்டாம் அவளின் வீட்டிற்கு சென்றால் பார்க்க முடியும்.  அவளின் கனவர் போக்குவரத்து துறையில் பணி புரிகிறார். வெளியூர்களுக்கு மாற்றலாகி சென்றால் .தன் மனைவியை பார்த்துக் கொள்ளுமாறு தன் நண்பரிடம் சொல்லிவிட்டத்தான் செல்வான் அவனின் நண்பன். அப்படி ஒரு நட்பு..

அவனின் தாலிகட்டிய மனைவிக்கு நாண்கு ஆணும், இரண்டு பெண்களும், நாண்கு ஆண்களும் அவனைப்போலவே தப்பாமல்  பிறந்திருக்கின்றன.... அவனுடைய காதல் லீலைகளை பற்றி மனைவியோ பெத்துப்போட்ட பிள்ளைகளோ எதுவும் கண்டு கொள்வதில்லை...  அவர்களுக்கு எந்தக் குறையும் .அவன் வைத்ததில்லை. ஆசை நாயகிகளுக்கும், வைப்பாட்டிகளுக்கும் தலா நாலு, மூனு.இரண்டுக்கு குறைவில்லை, ஒரே ஒரு வைப்பாட்டிக்கு மட்டும் குழந்தையே இல்லை...அந்த வைப்பாட்டி இன்னும் குமரியாகவே இருக்கிறது.

பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்த அவனுக்கு எந்த நோயும் இதுவரை வந்ததில்லை... 80 வயதை கடந்தும் இன்னும் ஆள் திடமாகத்தான் இருக்கிறான். அவனின் சில ஆசை நாயகிகள் வைப்பாட்டிகள்தான்  நோக்காடு வந்து கிடக்குதுக. அவனுக்கு வீட்டு வாடகை வருமானத்தோடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்ததால் பதிணைந்தாயிரத்துக்கு மேல் பென்சன் வாங்குகிறான்.... இப்போ மூத்த மகள் வீட்டில்தான் சாப்பிடுகிறான்.... 


அவன்.தன் ஆசை நாயகிகள். மற்றும் வைப்பாட்டிகளுக்குள் எந்த முட்டல் மோதல் வராமல் பாரத்துக் கொண்டான். எப்படி சமாளித்தான் என்று கேட்டால் அந்தத் தெருவின் இளைஞர்கள்  கதை கதையாக சொல்வார்கள்.  அந்தக் கதைகளிள் அறுபதாயிரம் பொண்டாட்டிகளை கட்டிய தசரதன்  தோற்றுப் போய்விடுவான்.

தனக்கு பிடிக்காதவர்களை. தன் எதிர்களை, தன் ஆசை நாயகிகள் மற்றும் வைப்பாட்டிகள்  அவள்களின் பிள்ளைகள் மற்றும் தன் வீட்டு ஆட்களை சேர்த்து  பெரும் கூட்டமாக ஏவி..அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.   இன்றும்  அந்த தெருவில் அவன் வைத்ததுதான் சட்டம்...

அவன் எப்போ சாவான்.. என்று அவனால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒன்றிடம் அனுதினமும் வேண்டுகிறார்கள். அந்தத் தெருவில் உள்ள இளைஞர் அணியினர் சொல்கிறார்கள்.  அவனுக்கு என்ன கவலை..என்ன குறை ,நூறு வயது கழித்துதான் சாவான்.என்று.....


ஞாயிறு 31 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -7

 வழக்கம் போலவே  காதலர்கள் கூடும் செனட் சபைக்கு சென்றேன். கூட்டத்தில் புதியவர்கள் சிலர் இருந்தனர். அந்தப்புதியவர்களிடம் பழையவர் ஒருவர் காதில் கிசு கிசுத்தார். நான் கவனித்தேன் ..ஆனால் சொன்னார் என்று தெரியவில்லை. நார்மலாக பேசினாலே எனக்கு கேட்காது.. இதில் கிசு கிசுத்தால் சுத்தமாக கேட்காது..

அவர்கள் கிசு கிசுப்பதை பார்த்தபடியே.. செனட் சபையின் கூட்டத்தில் உட்கார குனிந்தேன். புதிய காதலர்களில் ஒருவர் என்னிடம்  சில கேள்விகள் கேட்டார். உட்காருவதை தவிர்த்து நின்றபடியே அந்தக் காதலர் கேட்ட கேள்விக்கு பதில் கூறினேன்.

“உங்களுக்கு டீ குடிக்கிற பழக்கம் இருக்கா...”?

“இல்லை”  ...

“புகை பிடிக்கும் பழக்கம்”....??

“ இல்லை”..

“ தண்ணி அடிக்கிற பழக்கம்”...???

“ இல்லை..”

“ திருமணம்....செய்து......

“ இல்லை”......

“காதலிச்சு இருக்கீங்களா...????”...

“ இல்லை”....

“ சரி., பெண்களை சைட்டாவது அடிச்சிருக்கீங்களா...”??????

“ இல்லை..”

“ யோவ்... அப்ப என்னதாய்யா வாழ்க்கையில செய்திருக்க..”...

“ எதுவும் இல்லை”


“எதுவுமே செய்யாமல் இருக்கும் நீவீர் காதலர்கள் கூடும் இந்த செனட் சபைக்கு என்னா மயித்துக்கு வர்ரீரு.... போய்யா...போயி தனியாக உட்காரு ” என்று செம கடுப்புல..கையை நீட்டினார்

அந்தக் காதலரின் கோபத்தை அறிந்த நான் அவர் கை நீட்டிய இடத்தில் போயி அமர்ந்தேன்.  என்னைப பற்றி கொச்சையாக பேசினார். அதைக் கேட்ட பழைய காதலர்களில் இருவர் என்னைப் பற்றி கொச்சையாக பேசுவதை கேட்டு.. கொச்சையாக பேசாதே என்று தடுத்தனர். புதிய காதலரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

 நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை..  ஒருவரை சுட்டிக்காட்டி இவரது பார்வையில் தியாகி.... எனது பார்வையில்  கேனயன்...,ஏமாளி... உங்களது பார்வையில்....நையன், ஓம்போது ..... இவரின் சித்தப்பனின் மனைவி. இவர்மீது  மானபங்கம் செய்ததாக புகார் கூறியபோது... இவர் ஆண்குறியை ஒன்னுக்கு இருக்க மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறேன். வேறு எதற்கும் பயன்படுத்தவில்லை. நம்பவில்லை என்றால் பரிசோதிக்கலாம் என்றார் பாருங்களேன்... ஆண்மையற்றவன் மலடாக இருக்கிறவன்கூட ஆசை இல்லாமல் இருப்பதில்லை. நானே பலமுறை கோளாளாறு எதுவும் இருக்கலாம் பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறேன் . பாத்துக்கலாம் என்று சொன்னாரே தவிர பரிசோதனை செய்தாரா என்று தெரியவில்லை. அவரை தனியாக உட்கார வைக்க வேண்டாம். அவருக்கு காது கேட்காது அருகில் உட்கார வைக்கலாம் என்றபடி  கை சைகையால் என்னை அழைத்து அருகில் வந்து அமரும்படி செய்தார். புதிய காதலர்களும் வியப்புடன் பார்த்து அனுமதித்தனர்.

நிற்க.... காதலர்கள் சொன்ன சரடு கதைகள் என்பது  காதலர்களின் செனட்  சபையில் காதலர்கள் சொன்னவைதான் அந்தக் கதைகள் எனது பாணியில்  எழுதியவைகள்தான்.. படிப்பவர்களின் புரிதலுக்காக..................



ஞாயிறு 06 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...72

  • கோகுல்ராஜ் ஆணவப்படுகொலையில் யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!!
  • ஆணவம் அழிவைத்தரும் யுவராஜ் !
  • ஒரு பொறியியல் பட்டதாரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு எவ்வளவு திமிராக காலரை உயர்த்திவிட்டு பேசினாய்..சாதியும் ,பணமும்,செல்வாக்கும் காப்பாற்றும் என்ற ஆணவம்தானே,?
  • வருங்கால யுவராஜ்களின் எண்ணங்களின் மீது சம்மட்டி அடியாக இறங்கிய தீர்ப்பு. கோகுல்ராஜ்,டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா சற்று இளைப்பாறுதல் கொள்ளட்டும் !
  • சுவாதி பிறழ்ந்தபோதும் நீதி பிறழவில்லை. கடவுளைப்போல கண்காணித்து சாட்சியம் அளித்த அறிவியலின் பிள்ளை சிசிடிவி காமிரா தனது கண்களுக்குள் உண்மையை சேமித்து வைத்திருக்கிறது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் தோழர் ப பா மோகனின் அறிவார்ந்த சட்டப்போராட்டம் இதை சாதித்திருக்கிறது. கண்ணகி - முருகேசன், உடுமலை சங்கர் போன்ற ஆணவ கொலை வழக்கினை தொடர்ந்து இதிலும் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ப பா மோகன் போல இரத்தினம் போல பலநூறு வழக்கறிஞர்கள் இந்த சமூகத்திற்கு வேண்டும். தமிழக அரசு ஆணவப்படுகொலைகளை தடுக்க உறுதியான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்



  • ஆணவம் அழியட்டும் அன்பு தழைத்தோங்கட்டும் !







                                                                   சாதிவெறியன்

செவ்வாய் 15 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...66

 நன்றி ! தேவையில்லை... நேர்மை தேவை!!


நான் அம்பேத்கார் பேசுகிறேன்........|

தனித்தொகுதியில் வென்றதற்கு பூஜை செய்ய சென்றவனே ...........|

நான் போராடி பெற்றுத்தந்த வரலாற்றையே மறந்துபோனாய்.................|

அரசு வேலை கிடைத்தவுடன் .தீ மிதிக்கச்சென்றவனே*

நானில்லை என்றால் வேலை மட்டுமல்ல கல்வித்தகுதி கூட
உனக்கு கைநாட்டுதான்..............|

சேரியிலே பிறந்திருந்தும் ஆடையகம் வைத்திருப்பது உனக்கு தெரியுமா....?

நான் இல்லாமல் போயிருந்தால் உன் உடையே கோவணம்தான்

பணம் கொஞ்சம் வந்தவுடன் பழசையெல்லாம் மறந்தவனே
நீ சேரித்தாண்டி நடப்பதற்கு என் ஆயுளையே கரைத்தவன் நான்.........|
படித்து பட்டம்வாங்கி சொத்தில் பங்குகேட்டு ..வழக்கில் வென்றதற்கு

கடவுளுக்கு நன்றிசொல்லும் கண்ணான பெண்ணினமே

உனக்குத்தெரியுமா? கடவுளினூடாகத்தான் நீ அடுப்படிக்கும்

அந்தப்புரத்தற்கும் மட்டுமே என அச்சடித்து சொல்லப்பட்டாய் .........|

சொந்த வீடு கட்டியவுடன் பூஜையறை வைத்தவனே உனக்குத்தெரியுமா......?

எல்லாக்கடவுளும் இருந்தபோதுதான் , நீ கேவலமா நடத்தப்பட்டாய்

யாரால் நீ மனிதனாக மதிக்கப்பட்டாயோ அந்தப் புகைப்படம்கூட
உன் வீட்டில் கிடையாது

பரவாயில்லை

இவ்வளவு மூடனாக நீ இருப்பாயென தெரிந்திருந்தால் நான் அப்போதே எனக்காக ஒரு நாள் வாழ்ந்திருப்பேன்.

அப்படா இன்றுதான் புரிந்ததென்று எனக்கு கோவில்கட்ட கிளம்பிவிடாதே

முடிந்தால்
க ற் பி ...................|

முடிந்தால் ஒரு
நூலகம் கட்டு...........|

முடிந்தால்
பகுத்தறிவு புகட்டு ......|

முடிந்தால் அடக்குமுறைகளுக்கு எதிராக அச்சமின்றி குரல்கொடு
ஜெய்பீம்...........|


சனி 05 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...62

 

surya xavier
@suryaxavier1
தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சி என்கிறார் அண்ணாமலை.

அண்ணாமலையின் கருத்துக்கு,மலையின் எதிரொலி என
இந்த கார்ட்டூன் போட்டிருக்கார் ஒரு மலை ரசிகர்.


தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சி என்கிறார் அண்ணாமலை. அண்ணாமலையின் கருத்துக்கு, மலையின் எதிரொலி என இந்த கார்ட்டூன் போட்டிருக்கார் ஒரு மலை ரசிகர்.
படம்

தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...