ஓட்டு போட்டா என்ன..
ஓட்டு போடலைன்னா என்ன
ஓட்டு போட்டா மட்டும்
ரோட்டுல தேனாறும் பாலாறும்
ஓடிடுமா என்ன..
ஓட்டு போடலைன்னாலும்
நாட்டுல மாற்றம்தான்
வந்துரும்மா என்ன..
எஸ்அய் ஆர் படிவம்
கொடுத்தால் என்ன
படிவத்தை நிரப்பி
கொடுக்கலைன்னா என்ன
அதிகாரமில்லா அந்த
ஓட்டுக்கு வேட்டு
வைத்தால் என்ன.........
செத்துப் போனதை
எரித்தால் என்ன
புதைத்தால் என்ன
பிணம் முழித்தா
பார்க்கப்போகிறது.
ஆடுங்கள் ராஜாக்களே
ஆடுங்கள் உங்கள்
ஆட்டமும் ஒருநாள்
முடிவுக்கு வராமலா
போகப்போகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை