வெற்றி அடைந்தவர்களை
விட தோற்றுப் போனவர்கள்தான்
அதிகம். அந்த அதிகத்தில்
நானும் ஒரு துளி....
அறிவே இல்லாதவர்கள்
அறிவாய் பேசுவதை
பார்த்து நானும்
அறிவை வளர்க்க
படாத பாடு பட்டேன்
பாடு பட்டதுக்கு பலன்
கிடைக்கவே இல்லை
அறிவாளி ஒருவரிடம்
கேட்டேன் அறிவு
வளர்வதற்கு ஒரு
வழி சொல்லுங்கள்
என்று...............
அவர் சொன்னார்
அடிமைகளுக்கு அறிவு
வளர வாய்ப்பே இல்லை
என்று..அய்யோ அறிவு
வளா்ப்பதற்கு வாய்ப்பே
இல்லையா...? முட்டி மோதி
சுவரில் அல்ல...யோசித்தேன்
எனக்கும் ஒரு ஞானயோதம்
உருவாகியது.. அறிவுக்கு
பதிலா மயிர் வளர்ப்போம்
அந்த மயிர் வளர்வதற்கு
தேங்காய் எண்ணெய்
மட்டும் போதும்
வளர்த்தேன் பல
காலமாய் பெண்களே!
பொறாமை பட்டார்கள்
நான் ஆணா, பெண்ணா
என்று.. இன்று அந்த
மயிர்க்கும் பங்கம்
வந்துவிட்டது. அடிக்கிற
வெயிலில் தாக்கு
பிடிக்க முடியாமல்
பொடுகு வைத்து
நோட்டு கட்டு போல்
கத்தை கத்தையாக
பட்டை பட்டையாக
செதில் செதிலாக
நெட்டையும் குட்டையமாக
உரியத் தொடங்கிவிட்டது
பேன் என்ற விலங்கினம்
இல்லாமல் அரிக்கவும்
செய்தது. கண்ட
இடங்களில் சொரிந்து
விடுவதை தடுக்க
இதுதான் வழி
என்று புலப்பட்டது.
அறிவும் வேண்டாம்
மயிரும் வேண்டாம்
பல தோல்வியுடன்
பாண்டியனின் சலூன்
கடைக்கு சென்று
வரிசையில் உட்காரமல்
மொட்டை பெயரோடு
வெளியே வந்தேன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை