பக்கங்கள்

தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 04 2014

யாகம் செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம்........

சரஸ்வதி பூஜையில் புத்தகத்தை வைத்து வழிபட்டால் கல்விக் கண் திறந்து படிக்காமல் -மணப்பாடம் செய்யாமல் பாஸாகலாம் என்று அஞ்ஞான வாத்திமார்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புகட்டி வழிகாட்டினார்கள்.

வாத்திமார்களின் வழியைக்கேட்டு , வழிபட தெரியாத மாணவன் ஒருவன் கேட்டானாம். ஒரு நாள் வழிபடுறதவிட, தினசரி இரவில் தூங்கும்போது புத்தக்தை தலைக்கு வைத்து படுத்தால், புத்தகத்தில் இருப்பதெல்லாம் மண்டையில் ஏறிடும்ல சார், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கலாம்ல சார் என்றானாம்.

அதுக்கு  அந்த வாத்திமார் சொன்னாராம். அப்படியெல்லாம் ஏறாதுடா? மாணவனே!  கல்விக்கு கடவுள் சரஸ்வதியடா....அத வணங்கினாத்தாண்டா  கல்விக் கண் திறக்கும் ..நீ சொல்வது போல் நடக்காதுடா........ தூங்குவது கும்பகர்ணன்டா............அது மாதிரி கல்வியும்   ஓ..ம் மண்டையில துாங்கி போயிரும்டா ........என்றாராம்.

இந்த வாத்திமார்களின் சொன்ன விளக்கத்தை மொய்பிக்கும் வகையில் ஒலகப் புகழ்பெற்ற சல்லிக்கட்டு கூத்து நடக்கும் அலங்கா நல்லூரில் உள்ள தர்ம சாஸ்தா அய்யோப்பன் ஆலயத்தில்.....பத்து,பனிரெண்டு வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் வேண்டி மகா.....ருத்திர ஜெப யாகம் நடத்தினார்கள்.

கல்விக் கடவுள் சரஸ்வதி என்பதால் சரஸ்வதி தேவிக்கும் அபிசேக ஆராதனை நடத்தினார்கள். உடன் இருந்த கணபதி மற்றும் லெட்சுமி ஆகியோர் கோபித்து கொள்ளக்கூடாது என்பதால் கணபதி ஹோமமும் லெட்சுமி குபேர பூஜை உள்ளிட்ட ருத்திர ஜெய யாகம் நடத்தப்பட்டது.

தேங்காய் உடைப்பது,பிள்யைாரை  சுத்தி சுத்தி வருவது போன்றவை பழைய முறையாக இருப்பதால்......... புதிய முறையான..

இந்த யாகத்தால்  அதிக மதிப்பெண் பெற்று விடலாம் என்ற அசையாத நம்பிக்கையில் சுற்று வட்டாராத்திலிருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் குடும்பத்தார்கள் படை சூழ வந்து பங்கேற்றனர்.

பத்தாவது ,பனிரெண்டாவது  அரசு தேர்வு விடைத்தாள்களை, கடவுள்களானவர்கள் ,வாத்திமார்களாக அவதாரம் எடுத்து   அய்ப்பன்
சாராக,சரஸ்வதி டீச்சராக, கணபதிசாராக, லெட்சுமி டீச்சராக...வந்து
பேப்பரை திருத்தினால்............யாகமும் பூஜையும் செய்ததில் மகிழ்ந்து
ரெண்டு மார்க் கேள்விக்கு அய்ந்து மார்க் போட்டு அதிக மதிப்பெண்
பெற வழி வகுப்பார்கள் என்று நம்பலாம்  ஏன்? என்றால்? நம்பிக்கைத்தானே வாழ்க்கை...????

இந்த நம்பிக்கையை  பொய்ப்பிக்கும் வகையில்..........


இதில் அவதாரம் எல்லாம் நடக்காது.தேர்வு விடைத்தாளின் தேர்வு எண்ணை தப்பாக எழுதுவதை தவிர்த்த  புதிய நடைமுறையில் .பரிட்சை   விடைத் தாள்களை திருத்தவது எல்லாம் மெக்காலே பிரபு வகுத்த வழியில் வழுவாது வந்த அஞ்ஞான வாத்திமார்கள்தான் என்ற  . உண்மை எல்லாவல்ல மர மண்டைகளுக்கும்  நடை முறை உணர வைத்திருக்கிறது.


அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...