பக்கங்கள்

தொட்டிலை ஆட்டுகிறார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொட்டிலை ஆட்டுகிறார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 12 2014

குழந்ததையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுகிறார்கள்...


படம்-www.vikatan.com

சாராயக் கடையை திறந்து அதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு நல்ல லாபமும் அதிகமான வருமானமும் அடைந்து வரும் தமிழக  நாட்டை ஆண்டுவரும் ஆட்சியாளர்களைப் பற்றி தெரியாதார் யாருமில்லை...

 குடிமக்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் இப்பேர்பட்ட தமிழக அரசு  தமிழ்நாட்டு குடிமகன்களின் குடிப்பழக்கத்தால் மாநிலத்தில் திருட்டு,வழிப்பறி, கொள்ளை.கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும்.

விடுமுறை காலங்களில் குடித்துவிட்டு டூவீலர், கார் முதலிய வாகனங்களில் வலம் வருவதால் விபத்துக்கள் ஏற்ப்பட்டு பலர் உயிரிழந்து வருவதாகவும் போலீசார் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினாலும் குடிகார குடிமகன்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்று ஒப்புக்கு புலம்புகின்றனர்.

சாராயக் கடை வியாபாரத்திலிருந்து வரும் பெரும்பாலான வருமானத்தொகை போலீசுக்கே செலவிடப்படுவதால்..தாங்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதாகக் காட்டுவதற்க்காக சிற்சில இடங்களில் பிளக்ஸ் போர்டை மாட்டி வைத்துள்ளனர். அதிலும் அந்த விளம்பரத்தில்கூட  கள்ள சாராயத்தை குடித்து  பொசுக்குன்னு சாக வேண்டாம். நல்ல சாராயத்தை குடித்து  பலருக்கும் பல அவதி கொடுத்துவிட்டு சாகுங்கள் என்ற ரீதியாக வாசகங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. இப்படியாக தங்கள் விழிப்புணர்வை காட்டிவிட்டு..

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக இதுவரை 62 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதாக புள்ளி விபரக் கணக்கு காட்டுகிறார்கள்.

கள்ளச்சாராய சாவை தடுக்கிறேன் பேர்வழி என்று சிலர் சாவதை காரணமாக காட்டி கள்ளச்சாராயத்தை ஒழிக்காமல்... நல்ல சாராயம் தருகிறேன் என்று சொல்லி  பலபேர் சாவோடு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் குழி பறித்துள்ளனர்.

 கள்ளச்சாராயத்தை தடுக்கவோ, நல்லச் சாராயக்கடையை இழுத்து மூடவோ விரும்பாத வக்கற்றவர்கள். இனி வரும் காலங்களில் போதையில் வண்டி ஓட்டினால் கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் கொண்டு வரப் போறாங்களாம். பழைய சட்டங்களின்படியே இந்தச் புதியச் சட்டமும் சாராயம் குடிக்காதவர்களை  புடுச்சு சிறையில் தள்ளுவதற்கே பயன்படும்.

முன்னோரு காலத்தில் சாராயம் குடித்தவர்களை ஊதச் சொல்லி கண்டுபிடித்து அடித்து இழுத்துச் செல்வார்கள். இனியும்  ஊதச் சொல்லி ஏண்டா குடிக்கவில்லை என்று கேட்டு குடிக்காதவர்களை  அடித்து இழுத்து செல்வார்கள்.

இது குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுகிற கதையாகத்தான் இருக்கும்

பெயருக்கேற்றவன்.....

 அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து  வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...