திங்கள் 18 2015

பக்தியில் முக்தியவர்கள்..........

மூன்று பெண் தெய்வங்கள் சந்தித்து ஊர்கதைகள் பேசிய  பொழுது தமிழ்நாட்டு கதையயும் இப்படி  பேசிக்கொண்டது.

அதில் ஒரு தெய்வம். “அடியே நம்ம பக்தர்களையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு அம்மாவின் பக்தர்கள்  பக்தியில் முக்திவிட்டார்களடீ ”என்றது

நான் அதைத்தான் சொல்ல வந்தேன் நீ சொல்லி விட்டாயடி... என்றது ஒரு தெய்வம்.

 இவர்களின் பக்தியின் கூத்தைத்தான் பாருங்களடி  என்றபடி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்தது.ஒரு தெய்வம்

“காவடியில் என்னென்ன காவடிகள் இருக்கிறதோ அத்தனை காவடியையும்  எடுத்து அம்மாவை ஊழல் வழக்கில் இருந்து விடுதலையாக்கிய கையோடு மீண்டும் அரியனை பீடத்தில் அமர வைப்பதற்க்காக.. காசு கொடுத்து வேல்குத்தி காவடியில் புதுமுறையை அறிமகப்படுத்திய மதுரையைச் சேர்ந்த அந்த பக்தர்  மீண்டும் ஆறுபடையின் முதல் படைக்கு வேல் அளிக்கும் நாடகத்தை நடத்தி தன் பக்தியை காட்டி அசத்தி விட்டுருக்கார் ..டி.

படம்-www.vikatan.com



இன்னொருத்தரோ.. எந்தவித ஆர்பாட்டம் இல்லாமல் தன்னுடைய பக்தியை 
வெளிப்படுத்தி அம்மன் அரியனையில் அமர்வதற்க்காக நம்மைப் போன்ற 
தெய்வங்களிடம் முதலில் பக்தியை காட்டாமல் நேரடியாகவே அந்த 
ஊழல் அம்மனிடம் காட்டிவிட்டாரடி அந்த பக்தர்     .                         





நம்மிடம் வேண்டுதல் செய்யாத அந்த பக்தர் பேரு . சென்னை ஆர்.கே.நகர் எம்எல்ஏவாம்..

இரண்டு பெண் தெய்வங்கள் பேசிக் கொண்டு இருப்பதை மூன்றாவது தெய்வம்       
தடுத்து நிறுத்தி அது சரிங்கடி...இந்த பக்தர்களின் பக்திதான் நமக்கு தெரியுமேடி... 
இந்த இரண்ட பக்தர்களின்       பக்தியின் முக்தியின் காரணமாக அவர்களின் 
அம்மன் அரியனை பீடத்தில் அமர்ந்தவுடன் இந்த பக்தர்களின் பக்தியை மெச்சி 
யாருக்கு முக்தி அளிப்பார். அரியனையில் அமரும் அந்த அம்மா !!!அதச் சொல்லுங்கடி 
முதலில் என்றது சற்று கோபமாக                                                                                 





11 கருத்துகள்:

  1. எப்படியெல்லாம் நடிக்கிறாங்கப்பா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களின் நடிப்பில் தோற்று பொய்விடுவோம் என்ற பயத்தில்தான் நடிகர்திலம்,நடிப்புச்செல்வர்கள் எல்லாரும் செத்துப்போனார்கள்.

      நீக்கு
  2. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கைதானே நண்பா...வாழ்க்கை...!!! நமக்குத்தான் சகித்து பழகிய ஒரு வரலாறு இருக்கிறதே...நண்பா.....

      நீக்கு
  3. சிறப்பாக அலசி உள்ளீர்கள்
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடப்பதை சகிக்க மாட்டாமல்...இப்படி ஆத்திகிட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  4. சிறப்பாக அலசி உள்ளீர்கள்
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நாங்க எல்லாம் என்ன என்று நினைத்தீர்கள். எவ்வளவோ செய்யத நம் பக்தகோடிகள் இதைச் செய்ய மாட்டார்களா?
    உங்களுக்கு பொறாமை. ஏன் முடிந்தால் நீங்களும் ட்ரைப் பண்ணுங்கோ,,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறாமையை வச்சு ஒரு பஞ்சு மிட்டாய்கூட வாங்க முடிந்தால் முயற்சித்து தோற்றுப்போகலாம்....

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...