ஞாயிறு 17 2015

புறாவை காக்கையாக காட்டி பாடிய பாடல்

படம் .பராசக்தி......







கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க – அந்த
அனுபவப் பொருள் விளங்க – காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
கா கா கா
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க – உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க – பாடும்
கா கா கா
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ
எச்சிலை தனிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க – எங்கே பாடுங்க
பாடல்: கா கா கா கா கா கா
வரிகள்: உடுமலை நாராயண கவி
படம்: பராசக்தி
பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
இசை: ஆர்.சுதர்சனம்
ஆண்டு: 1952 


நன்றி!  March 28, 2010 by தமிழ்மணி

17 கருத்துகள்:

  1. படத்துல வர்றது புறாவா..காக்காவான்னு பார்த்துட்டு போங்க நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமா அது காக்காதான் நண்பரே ,அர்த்தம் பொதிந்த பாடல் என்றாலும் பாடகர் குரல்தான் இடிக்குது :)

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடல் பகிர்வு. பறவை தொடர்பான இயல்பான ஐயத்தை கிளப்பியுள்ளீர்கள். மாறி மாறிக் கூற வாய்ப்புண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .புறாவுக்கு சாயம் பூசி காக்கையாக காட்டி படமெடுத்திருப்பதாக சொல்லக் கேள்வி அய்யா...

      நீக்கு
  4. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, எல்லா இடமும் அன்ன தானம்,
    பிரியாணி, என்னப்போங்க,
    அதுசரி காக்கை தானே
    அது தன் இனம் மட்டும் அழைக்குமே
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காக்கைகள் இரண்டு நிகழ்ச்சிகளில்தான் தங்கள் இனத்தாரை அழைக்கும் என்கிறார்கள்.. அய்யா...

      நீக்கு
  5. அண்ணாவே நீங்க அழகான வாயால்
    பண்ணாகப் பாடுறீங்க – காக்காவென
    ஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க
    கா கா கா

    அண்ணாவே நீங்க அழகான கருத்தாலே
    தில்லாக எழுதுறீங்க ஷோக்கா - படு
    தில்லாக எழுதுறீங்க - வாங்க!
    கருத்து சொல்ல தோ ழ ரே!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் சொன்னா சரியாகத்தான் இருக்கும்...அய்யா...

    பதிலளிநீக்கு
  7. காட்சியும் பாடலும் பின்னிப் பிணைந்த அருமையான பதிவு.
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. காட்சியும் பாடலும் பின்னிப் பிணைந்த அருமையான பதிவு.
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...