வெள்ளி 09 2012

அண்டா சோற்றுக்கு ஒரு சோறு பதம்...

பானையில் வெந்தாலும்,அணடா,குண்டாவில் வெந்தாலும் அரிசி வெந்தததை பார்க்க ஒரு சோறுதான் பதம். அந்தவிதிப்படியே தமிழகத்தை ஆளும் ஆத்தா ரங்கநாயகியின் மகத்தான மூன்றாவது இருண்டகால ஆட்சியின் பதம்.....

ஆத்தா இரு முறை தமிழகத்தை ஆண்ட போது இருண்காலத்துக்கு அழைத்து சென்றதற்க்கான பரிசாக 42 லஞ்ச ஊழல்- அதிகார முறைகேடு வழக்குகளை பெற்றார். அந்த வழக்குகளை தன் அதி நவீன யுக்தியால் சமாளித்து பதிணைந்து ஆண்டுகளாக மாபெரும் நீதிதுறைக்கே தண்ணீர் காட்டி,அந்த மாபெரும் நீதி
துறையே ஆத்தா காட்டிய தண்ணீயை மோண்டு குடித்தும் இன்னும் தாகம் அடங்காமல் தவிக்கவிடும் ஆத்தாவின் மகிமையே மகிமை....


இதோடு நின்றுவிடாமல்தன் அரசவை அடிமை அமைச்சர்களான.
ஓஓஓஒ..பன்னீர் செல்வம்,செங்கோட்டையன் இவர்களைக்கொண்டு காமாட்சிகோயில்தேவநாதன் புகழ் காஞ்சிபுரத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் “சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுபட சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. ஆத்தா வழக்கிலிருந்து விடுபட்டால், அதற்கு பரிகாரமாக கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்க. கோரிக்கை அமைச்சர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 மூன்றாவது முறையாக தன் இருண்டகால ஆட்சியில் ஓட்டு போட்டு ஏமாறுவதையே பொழப்பாக கொண்ட மக்களை இன்னும் எப்படி ஏமாற்றலாம் என்பதை தன்னுடைய போலிசு படையின் உளவுத்துறையைமுடுக்கிவிடாமல்
வழக்கறுத்தீஸ்வரனிடம் வேண்டிய செங்கோட்டையனுக்கும்.செங்கோட்டை
உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் கள்ள உறவு இருப்பதாக செங்கோட்டையனின் மகன் ஆத்தாவிடம் பத்த வைக்க....ஆத்தா தன் உளவு படையை ஏவி ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டி வைத்து ஆறுமுகத்தை கைது செய்தது.

ஆத்தாவின் பொற்பாத ஆட்சியில் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழும் கார்ப்பரேட் மாக்கள் போல் ஆத்தாவும் ஆத்தாவின் பாதங்களும் பெரு வாழ்வு வாழ்வதே! அண்டாச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உள்ளது.

2 கருத்துகள்:

  1. என்ன தான் இருந்தாலும் இவ்வளவு புகழ்ந்து இருக்க தேவை இல்லை தோழரே.... போயஸ் கார்டன் பகுதியில் மின்வெட்டே இல்லையாமே... ஒரு வேலை போயஸ் கார்டன் மட்டும் தான் தமிழகம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆத்தாவே தமிழகம்! தமிழகமே ஆத்தா! ஆத்தா இருக்குமிடத்தில் மின்வெட்டு இருக்குமா?? ஆத்தாவின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்தாக இருக்கட்டுமேனுதான்

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...