செவ்வாய் 24 2012

சுழி பிடித்த பிள்ளையாரே.............




கற்பகக் கடவுளே,விருச்சிகமே!
கருனைக் கணபதியே!
இந்த ஒலகம் முழுவதும் ஆட்சி
செய்பவனே! வேண்டும் வரம்
அருள்பவனே!

 மாட்சிமை  தாங்கியவர்கள்
செய்யும்  சமூக
விரோததொழில் யாவும் 
சிறப்புடன் நிகழ்த்திடச் 
செய்பவனே!.................

தாமரை முகத்தில் அமர்ந்திருக்கும் ஆனை
முகத்தானே! உன் திருவடியே சரணம்
எனஅடைக்கலம் அடைந்துவிட்டவர்களை
காத்தருள்பவனே!

வாழ்வில் பல குற்றங்குறைகளை செய்துவிட்டு
உன்னை  நாடி வருவோர்க்கு  பாது காப்பு
கொடுப்பவனே!

நல்லோரையும்,வல்லலேரையும்
மதிக்காதவனே!

எல்லோரும் ஒருநாள் சாகும்போது. கடலில்
 கரைத்தாலும் சாகாமல் இருப்பவனே!!!.

ஆஸ்பத்தரியும் மருத்துவ மனையும்
இல்லாத காலத்திலே முக மாற்று
அறுவை சிகிச்சை செய்தவனே!

உண்ணாமல் பேளாமல் இருப்பவனே!
நான்  சாமி கும்பிடுவதற்கு ஒரு கழிப்பறை
வேண்டும். உன்னால் தர முடியுமா???
சூழி பிடித்த பிள்ளையாரே.............

குறிப்பு--  கக்கூஸ்க்கு போவதுதான் சாமி கும்பிடுவது
                  என்பதின் அர்த்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...