சனி 20 2021

சத்ரபதி சிவாஜி காவி தலைவன் அல்ல..கோவிந்த் பன்சாரே

 

கோவிந்த் பன்சாரே




நேற்று சத்ரபதி சிவாஜியின் 19.2.1630  பிறந்தநாள். அவரை முஸ்ஸிம்களுக்கு எதிரானவராக காவி இந்துத்துவ அமைப்புகளால் காட்டப்படுகிறார். உண்மையில் அவருடைய வரலாறு  உண்மையாக சொல்லப்படவில்லை.

சிவாஜி என்பவர். ஔரங்சீப்பை எதிர்த்தவர், முஸ்ஸிகளுக்கு எதிராக களமாடியவர் . இந்துக்களின் தலைவர்  என்றுதான் காவிகளால் பிறர் மூளையில் ஏற்றப்பட்டுள்ளது.

 சிவாஜியின் உண்மையான வரலாற்றை மராட்டியத்தை சேர்ந்த கோவிந்த் பன்சாரே என்ற பொதுவுடமை இயக்கத்தலைவர், எழுத்தாளர் . சிவாஜியின் உண்மை வரலாற்றை “ யார் இந்த சிவாஜி” என்ற நூலை எழுதினார். சிவாஜி காவிகளின் தலைவன் அல்ல .காவியத் தலைவன் என்று ஆதாரங்களுடன் புத்தகத்தை எழுதினார். அதில் சிவாஜியின் படையில் மெய்க்காப்பாளராக இஸ்லாமியர்கள் இருந்தனர், படைத்தலைவர்களாக, நம்பிக்கை மிக்க அரசியல். தூதர்களாக இருந்தனர் என்று ஒரு பட்டியலையே சொல்கிறார். அதன்படி வீர சிவாஜியின் மெய்க்காப்பாளராக இரந்தவர் பெயர். மாதாரி திகடர் என்ற முஸ்லிம்தான்,இவர் பலமுறை சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.

மொகலாய மன்னர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய  விலைபோகாத நம்பிக்கையான  முஸ்லிம் தூதர் பெயர் ஹைதர். சிவாஜியின் பீரங்கி படைத் தளபதி பெயர். இப்ராஹிம்கான் இவரோடுதான் பீஜப்புர், கோல்கொண்டா அரசுகளை பிடித்தார்சிவாஜி.

கப்பற்படை தளபதியின் பெயர் தவுலத்கான். கொங்கன கடற்பகுதியில் மொகலாயர்களை எதிர்த்து வெற்றி பெற்றது இந்த தளபதியோடுதான். சிவாஜி 1630 ல் பிறந்து 1680ல் மறைந்தார். தன்னுடைய 16ம் வயதிலேயே மன்னரானார் என்பதெல்லாம் பொய் கதைகள். .1674ல்தான் மன்னராக முடிசூட்ட அனுமதிக்கப்பட்டார். சூத்திரன் படைக்கு தலைமை தாங்கலாமே தவிர அவன் மன்னன் ஆகக்கூடாது என்ற வர்ணாசிரமம்தான் சிவாஜி மன்னராக விடாமல் தடுத்தது. சிவாஜிக்கும் அவுரங்கசீப்பிற்கும் நடந்த போர் மண்ணிற்க்கான நடந்த போரே தவிர மதத்திற்க்கான  போரே அல்ல என்று கோவிந்த் பன்சாரே எழுதிய புத்தகம் 5 லட்சம் பிரதிகள் விற்றன. காவிகளின் பொய்யும் புனை சுரட்டும் நாடு முழுவதும் தெரிந்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள் என்ற காரணத்தால்தால்தான்  கோவிந்த் பன்சாரே அவர்களை  பரர்ப்பன இந்து மதவெறிக்கும்பல் சுட்டுக் கொன்றது.

சத்ரபதி சிவாஜியை பாசிச காவிக் கும்பல் இந்துக்களின் தலைவன் என்று பரப்பியது.. சிவாஜியை பற்றி  “அண்ணா அவர்கள் தனது “ சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகம் மூலம் வர்ணாசிரமத்தின் மூலம் இழைக்கப்பட்ட அநீதியை பற்றி   தமிழர்க்கு  பாலபாடமே நடத்தி விட்டார்.

 வர்ணாசிரமத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பார்ப்பனக் கும்பல் விடாமல் இன்று சிவாஜியை முன் நிறுத்துகின்றன.     இந்த வீர சிவாஜியின் பிறந்த நாளோடு நிணைக்கப்படுபவர்கள், கோவிந்த் பன்சாரே மற்றும் அண்ணா அவர்கள்தான்


வரலாறு மறந்தவன்

திக்கற்று போவான்..

திசை மாறி போவான்.

 இந்து வெறி புளுகர்களிடம்  

கவனமாக நில்லுங்கள்.!!!

நன்றி!..

2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...