சனி 31 2021

குத்தாமல் குடலை உறுவும் கலை

 இன்று காலை 11மணி வாக்கில் என் வீட்டீற்கு நாலைந்து அதிகாரிகள் வந்தார்கள்.   அவர்கள் எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் என்று பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது. வந்தவர்கள் என் பெயரைச் சொல்லி கேட்டார்கள்.

என்ன விபரம் என்று கேட்பதற்கு முன்னமே நான் ஊகித்துக் கொண்டன்.

ஒரு அதிகாரி வழக்கு போட்டு இருக்கீறீர்களா?? என்று கேட்டார்.

“ ஆமாம்” என்றேன்.

“ வெறும் மெமோதான் வந்திருக்கு .ஆதாரம் எதுவுமில்லை. உங்களின் ஆதாரங்களின் நகல்களை எங்களுக்கு தரவும் ” என்று கேட்டார்.

நான். மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இருந்துதானே, தங்களுக்கு வந்திருக்கும் அவர்களிடம் கேட்டுப் பெறலாமே? என்று சொன்ன போது ஆதாரம் எதுவும் வரவில்லை நீங்கள்தான் தரவேண்டும் என்றார்.

ஒரிஜினல் ஆதாரம் கோரட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நகல் வக்கிலிடம் இருக்கிறது என்றபோது..... வழக்கில் உள்ளவர்கள் எல்லோரும் திங்கள்கிழமை நாங்கள் வரும்போது நகல்கள்மட்டும் எங்களிடம் கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

போலீஸ் ஸ்டேசன் ஆனாலும் மாநகராட்சி ஆனாலும் சரி, வட்டாட்சியர் ஆனாலும் சரி , என் தரப்பு ஆவணத்தை தரும்போது  பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு எதுவும் எனக்கு வழங்கப்படுவது இல்லை. நான் அலைந்து திரிந்து வாங்கும் ஆவணம் எல்லாம்..குத்தாமல் குடலை உறுவுவது போல என் எதிராளிகள் கைளில் கிடைத்துவிடுகிறது.

இதனால் வெறுத்து போன நான்... வந்த அதிகாரிகளின் ஒருவரிடம் தொலைபேசியில்  உங்கள் வக்கிலிடம் கேட்டு பெறலாமே?? என்றபோது

அந்த ஆதிகாரி..“ எங்க வக்கிலிலுக்கு இதுதான் வேலையா? என்றார். மனதுக்குள் சிறிது கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எனக்கு...வக்கிலின்..வேலையே அதுதானேய்யா....

சரி, நான் தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது... அதற்கு அவர், தரவில்லை என்றால்.  நாங்கள் திருப்பி அனுப்பி விடுவோம்.என்றார்.

சரி, அப்படியே! செய்யுங்கள் என்றேன்..

பிறகு, நானா புலம்பினேன். ஆமய்யா....என் ஆவணத்த வாங்கி... என் எதிராளிடம் தர...  நீங்க கேட்டவுடன்...தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கனும், பொது மக்களிடம் வாங்கும் மனுவுக்கு உடனே நடவடிக்கை எடுப்பது மாதிரி,என் அப்பன் பெயரிலுள்ள வரியை என் பெயருக்கு மாற்ற ஆறு ஏழு வருடங்களாக அலையவிட்டவனுகல்ல  நீங்க....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

3 கருத்துகள்:

  1. சாதாரண மக்களுக்கு இங்கு வாழ்வதற்கு இடமில்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. எதிராளிகள் பதில் அபிடவிட் போடவேயில்லை. அதற்குள் இவர்களுக்கு ஆதார ஆவணம் வேண்டுமாம்.அதற்குத்தான் அந்த பதில்..

      நீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...