செவ்வாய் 30 2022

காதலர்கள் சொன்ன சரடு கதைகள் -12

 செனட் சபையில் கூடியிருந்த காதலர்களில் ஒருவர்.. நமக்கு தெரிந்தது. அறிந்தது போன்றவற்றை எல்லாரும் சொல்லிவிட்டோம். ஒருத்தர் மட்டும் எதுவும் சொல்ல வில்லை.. இந்த முறை அவரு அறிந்தது..தெரிந்தததை இந்த சபையின் முன்னே சொல்ல வேண்டும் என்றவுடன் எல்லோரும் என்னை பார்த்தார்கள். 

ஒருவாறு உடம்பை நெளித்து  எனக்கு எந்த அனுபவமும் இல்லையே என்று சொல்லி பார்த்தேன்.

அவர்கள் விடுவதாக இல்லை.. எந்தவொரு விசயத்திலும் அனுபவப்படாதவர்கள் யாருமே..இல்லை என்றார்கள் பலர்.  ஒருவர் சரி விடு அந்த அனுபம் இல்லை என்றால். உன் வீட்டு இடத்து பிரச்சினையில் என் தெருக்காரர்கள். உனக்கு கொடுத்த தொல்லைகளை கூறலாமே என்றார் . ஆமா சொல்லலாமே என்றார்கள் மற்றவர்கள்

சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை. சற்று யொசிக்கிறேனே என்றேன்... உடனே ஒருவர் ஏ.ப்பா... தீ கொளுத்தி மக.. உன்ன டார்ச்சர் பன்னின பூனை கதை ஒன்னு இருக்குல்ல... ரெம்ப நல்லா இருக்கும் சொல்லுப்பா என்றார். உடனே நிணைவுக்கு வந்துவிட்டது  ...  சம்பவத்தை சொல்ல தொடங்கினேன்

 நான் இப்ப சொல்கிற கதையானது ..ஏற்கனவே தாங்கள் சொல்லிய, சொல்லப்போற சரடு கதையல்ல.... இது முழுக்க முழக்க உண்மை சம்பவம் என்ற முத்திரையுடன் ஆரம்பித்தேன். எல்லோரும் நான் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.


என் தெருவில் ஒரு நாட்டாமை அவனுக்கு ஒரு வைப்பாட்டி,  அவளுக்கு பெயர் தீ கொளுத்தீ... தீ கொளுத்தீ பெயர் எப்படி வந்தது என்றால் அவளுடைய காதலன் நாட்டாமைக்கும் அவளுக்கும் பணம் பிரச்சினையில் அவர்களுக்குள் முட்டல் மோதல் நடந்தது. அவளுடைய வப்பாட்டன் அவளிடம் பேச மறுத்தால்...இவள் அவனை வரவழைப்பதற்க்காக ..அவர்கள் சண்டையில் சம்பந்தமே இல்லாத பக்கத்து வீடுகளில் தீ வைத்துவிடுவாள்.  இப்படித்தான் அவளின் வப்பாட்டானை எதிர்த்த ஒரே காரணத்தக்காக என் வீட்டிற்கு இரண்டு தடவை தீவைத்து அவளின் வப்பாட்டனின் மனதை குளிர்வித்தால்...இதே மாதிரிதான் சில வீடுகளுக்கும் தீ வைத்ததால் அந்தத் தெருக்களில் உள்ள பொம்பளைகள் வைத்த பெயர்தான் தீ கொளுத்தீ என்பது...

அந்த தீ கொளுத்தீ ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதன் பலனாக சீக்கு பிடித்து குறுதி வழிந்து வீச்ச மெடுத்து நாறிப்போய் செத்தாள். அவள் செத்த பிறகு அவளுடைய மகளுக்கும் தீ கொளுத்தீ மகள்னு பேரு நிலைத்து விட்டது.

தீ கொளுத்தி மக  திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளையை பெற்றும் ஊதி விட்டாள் காற்றினிலே பற்ந்து போகும் அளவுக்கு அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்தால்..... என்ன மாயமோ ..அவளுடைய ஆத்தா செத்து ரெண்டு வருசத்துல   இல்லாத அளவுக்கு ரெம்ப குண்டாகி விட்டாள்.. மார்பகமே இல்லாது இருந்த அவள்..தமிழ் சினிமாவில் வரும் அரக்கிகளைப் போல் கொளுத்த மார்பகளுடன் காட்சியளித்தாள்.

ஆள் குண்டானவுடன் அவள் அம்மா விட்டுச் சென்ற  இடத்து பிரச்சினையில்  என்னுடன் போட்ட சண்டையை தீ கொளுத்தீ மகள் தொடர்ந்தாள்

அன்று ஞாயிற்று கிழமை எல்லா வீடுகளில் தொலைக்காட்சியில் படம் பாரத்துக் கொண்டுயிருந்ததால் தெருவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. நான் தொலைக்காட்சி பார்க்க விரும்பாமல் என் வீட்டு மேற்கு திண்ணையில் அமர்ந்திருந்தேன். எதிர்த்த வீட்டில் தீ கொளுத்தீ மக... என்னைக்கண்டதும் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு சுத்தமாக இருந்த தெருவை புழுதி பறக்க கூட்டினாள். அவளுடன் சண்டை போட மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து மெயின் ரோட்டிற்கு வந்து அடைத்திருந்த கடைகளின் திட்டில் அமர்திருந்து அரைமணிநேரம் கழித்து  திரும்பினேன். கூட்டியதால் பரவிய புழுதி மறைந்து விட்டது. அவள் கதவை அடைத்து இருந்தாள்.. அவள் வீட்டில் வாடகைக்கு இருந்தவள் மட்டும் வாசல் படியில் அமர்ந்து ..அவள் மார்பகம் முழு அளவில் காட்டியபடி தன் குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தாள் ... நான் அதை பார்க்காமல் சென்றது என் குத்தமாம்

என் வீட்டு திண்ணையில் நான்  அமர்ந்த சிறிது நேரத்தில்  மார்பகம் தெரிய குழந்தைக்கு பால்  கொடுத்து கொண்டிருந்தவாள்.. தீ கொளுத்தி மகளை கூப்பிட்டாள்.

கதவை திறந்து வெளியே வந்த தீ கொளுத்தி மகள்... அணிந்திருந்த சாக்கெட்டின் பட்டன்களை அவிழ்த்து விட்டு கொளுத்து தொங்கிய மார்பகங்களை  காட்டியபடி..குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தவளின் அருகில் அமர்திருந்தாள். சிறிது நேரத்தில் யாரையோ திட்டுவது மாதரி என்னை திட்டினாள்...


அவன் அம்பள இல்லடி..பொண்டுகன்டி... பொட்டப்பயதாண்டி இப்பிடி இருப்பாங்கே.....என்று திட்டினாள்.... எனக்கு புரிஞ்சு போச்சு ரெண்டு சிரிக்கிகளும் ஏதோ பிளான் பன்னுறாள்கள் என்று தோன்றியவுடன் எழுந்து வீட்டுக்குள் வந்து படுத்து தூங்கிவிட்டேன்.


மறு நாள் காலை பத்து மணிக்கு மேல் என்னை தேடி போலீஸ்காரர் வந்தார். என் பெயரைச் சொல்லி கேட்டு ஊறுதிபடுத்திக் கொண்டு விபரத்தை சொன்னார். தீ கொளுத்தி மக பெயரைச் சொல்லி மேகலா என்பவளும் தனம் என்பவளும்  என் விட்டுப் பூனை அவள் வீட்டில் வைத்திருந்த சிக்கன் கறியை தின்று விட்டதாக என்மீது புகார் கொடுத்து இருக்கிறாள் விசாரணைக்கு ஸ்டேசன் வரச் சொன்னார்


வந்த காவலரிடம் .அய்யா நான் வீட்டில் பூனை வளர்க்கவில்லை. சிக்கன் கறியை திண்டதாக சொல்லப்படும் பூனை என் வீட்டுப் பூனை இல்லை.என்றபோது ஸ்டேசன் வந்து சொல் என்றார். அவருடன் ஸ்டேசனுக்கு சென்றபோது  ரைட்டரிடம் இரண்டு பெண்களும் என்னை சுட்டிகாட்டி அடுக்காக புகார் கூறினார். அவர்கள் இருவரும் கூறியதை கேட்டுவிட்டு என்னிடம் விசாரித்தார்.

பூனை அவர்கள் வீட்டு கறியை தின்றது பொய், என் வீட்டில் பூனையை வளர்க்கவில்லை. அந்த பூனை எனது பூனை இல்லை என்றேன். இருவரது பேச்சை கேட்டுவிட்டு எஸ்ஐ  இரவுதான் வருவார் இரவு ஏழு மணிக்குத்தன் வருவார் அப்போது வாங்கன்னு இருவரும் சண்டை போடக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவைத்தார்.

அடுத்து இரவு ஏழு மணிக்கு தொடரும்.......................

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பாத்தாலும் குற்றம்..பாரக்காமல் இருந்ததும் குற்றம்.. பார்த்தாலும் பார்க்காவிட்டலும் சண்டையிட ஒரு முகாந்திரம் கிடைத்துவிட்டது..

      நீக்கு

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...