சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில்தானதிருஞானசம்பந்தர் கைங்கர்யத்தால் எட்டாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். திருநாவுக்கரசர் கைங்கரியத்தால் ஆயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.
சமணர்கள் படுகொலைகளை மறுக்கிறவர்கள் திருஞானசம்ந்தரை திருநாவுக்கரசரை, சேக்கிழாரை, பரஞ்சோதியாரை பொய்யர்கள் என ஒப்புக் கொள்ள வேண்டும்! அவர்கள் ஒப்புக் கொண்டால் தேவாரமும், பெரிய புராணமும் திருவிளையாடல் புராணமும் பொய்யாகி விடும்.
திருஞானசம்பந்திரனின் சூழ்ச்சியால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் திருநாவுக்கரசால் சமணர்கள் படுகொலையானது பற்றி யாரும் வாயே திறப்பதில்லை.
தூங்கா நகரமல்ல..தூக்கத்தை கெடுக்கும் நகரமும்கூட
இப்பேற்ற பட்ட சிறப்பும் பெருமையும் கொண்டதுதான்.. மதுரை...
தங்க ஊசி என்றால் கண்களை குத்திக் கொள்ளவா முடியும்!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை