ஞாயிறு 17 2017

வேடிக்கையல்ல..வாடிக்கையே அதுதான்...

மழைநீரில் கால்
பதிக்காத சீமாட்டி
 போய் சேர்ந்ததால்
சீமாட்டியின் ஆர்.கே
தொகுதியில் தேர்தல்

முதல் தடவை
வாக்குக்கு பணம்
பட்டுவாடா செய்ததால்
கருணை உள்ளத்தோடு
தேர்தல் ரத்து...

 இரண்டாம் முறை
தேர்தலில் ஒரு
ஓட்டுக்கு ஆறாயிரம்
ஓவா என்று
மற்ற தொகுதி
வாக்காளர்கள் வாய்
பொளந்த நிலையில்

பட்டும் புத்தி
வராமல் ஓட்டுக்கு
துட்டு வாங்குபவர்களை
சுட்டு கொல்லவேண்டும்

வாங்குபவர்களை  விட
பணத்தாசை காட்டி
ஓட்டுக்கு துட்டு
கொடுப்பவர்களை முதலில்
சுட்டுக் கொல்லவேண்டும்

இல்லை இல்லை
வாங்குபவனையும் பணம்
கொடுப்பவனையும் தடுக்காமல்
துணை இராணுவப்
படையும் தேர்தல்
ஆணையமும் நடவடிக்கை
எடுக்காமல் ஆளும்
 கட்சிக்கு ஆதரவாக
வேடிக்கை பார்ப்பதைத்தான்
முதலில் ஒழிக்கனும்

இப்படியாக..பல
விவரம் கெட்டதுகள்

ஆக..தேர்தலோ
இடைத் தேர்தலோ
நடக்கும் போது

ஓட்டுக்கு பணம்
கொடுப்பதும் ஓட்டு
பணம் வாங்குவதும்
பணம் கொடுக்க
இயலா கட்சிகள்
பணம் கொடுப்பதை
தடுப்பதும்  முறையிடுவதும்
ஜனநாயகம் கேலிக் கூத்து
என்று புலம்புவதும்
துணை இராணுவப்
படையும் தேர்தல்
ஆணையுமும் கண்டும்
காணாமல் இருப்பதும்
வேடிக்கை அல்ல
வாடிக்கையே அதுதான்

ஆர்கே நகர் தொகுதி க்கான பட முடிவு

3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...