வெள்ளி 08 2012

சாதிவெறி கணக்கெடுப்பு....


நூறாண்டு பேசும் ஓராண்டு ஆட்சியில் ஆளும் புரட்சித்
தலைவின் பொற்கால ஆட்சிக்கு வித்திட்ட புரட்சி தலைவர்
தமிழ்நாட்டு ஆட்சிக்கட்டிலில் படுத்திருந்தபோது. ஒவ்வொரு
சாதிவெறித் தலைவர்களெல்லாம் அவரவர்கள் கோரிக்கை
வைத்தார்கள். எங்க ஜாதி சனம் இவ்வளவு எண்ணிக்கையில்
 இருக்கிறார்கள். ஆகவே, எங்க சாதிக்குத்தான் முன்னுரிமை
 கொடுக்கனும் என்று சொன்னாங்க. புரட்சி தலைவரும் என்னடா.
இவிங்க ஆட்சிக்கட்டிலில் நம்மள படுத்திருக்க விடமாட்டுறாங்
கன்னு நிணைச்சு. ஒவ்வொரு ஜாதித் தலைவர்களை கூப்பிட்டு.
ஒங்க ஜாதிக்காரங்க எவ்வளவு பேரு இருக்கிங்க என்று லிஸ்ட
கொடுங்கன்னு உத்தரவு போட்டாரு.எல்லா ஜாதி வெறித்
தலைவர்களும் தங்களுடைய ஜாதி பலத்தின் எண்ணிக்கையோட
பட்டியலை தெரிவிச்சாங்க, அப்படி தெரிவிச்ச பட்டியலை
அண்ணன் புரட்சித்தலைவரு கூட்டிபார்த்தப்போ, மொத்த
தமிழ்நாட்டு ஜனத்தொகையைவிட அதிகமா இருந்தது.
இன்னாங்கடா,ஒங்க சாதிவெறி கணக்குக்கு அளவேயில்லயா
என்று தலிவரு கேட்டவுடனே,.ஒவ்வொரு சாதிவெறித்
தலைவர்களும் கம்முனு சைலன்ட்டா ஆகிட்டாங்க, தலைவரும் ஆட்சிக்கட்டிலில் நிம்மதியாக படுத்திருந்தாருஇப்போ,புரட்சித்
தலைவரின் இரண்டாவது வந்த உண்மையான வாரிசு அண்ணி புரட்சிதலைவியின் மூன்றாவதுதடவையாக அமர்ந்தபின்னால் 
ஓராண்டு ஆட்சியில், மீண்டும்சாதி வெறியில் பிரநிதித்துவம் 
பெறுவதற்க்கு  சாதியை ஒழிக்கவேண்டிய அரசாங்கமே சாதிவெறி கணக்கெடுப்பு நட்த்துகிறது. இந்த சாதிவெறி கணக்கெடுப்பில் 
ஒவ்வொரு சாதிவெறித் தலைவர்களும்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சலுகைகள் பெறுவதற்க்காகஎப்படி சாதிவெறியை 
பதிய வேண்டும என்று உத்திரவு இட்டார்கள் ஒலகமே சுருங்கினாலும் சாதிவெறி மட்டும் பரந்துவிரிந்து பல ஒலகமாய் ஜொலிக்க்கின்றது.
நீங்களே படித்துப் பாருங்களேன்.




1.புதிய நீதிக்கட்சிதலைவர் ஏ.சி.சண்முகம்.
நமது சமதாயத்தினர் 153 உட்பிரிவுகளாக அகமுடையார்,செங்குந்தர்,
துளுவவெள்ளாளர்,வெள்ளாளர்,செக்கோனார்,பிள்ளைமார்,சேனைத்
தலைவர்.உடையார் என பல பிரிவுகளாக இருப்பதால்,கல்வி,
வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வட மாவட்டங்களைச்
சேர்ந்தவர்கள்.கல்விச் சான்றிதழில் குறிப்பிட்ட சாதியை அப்படியே
குறிப்பிடுங்கள். உ-ம்அகமுடையார் என்று குறிப்பிட்டு 
அடைப்புக்குள்முதலியார்என்றுகுறிப்பிடுங்கள்.இதேபோல்
செங்குந்தர்,வெள்ளாளர்,தொண்டைமண்டலவெள்ளாளர்,
உடையார் போன்ற சாதிகளும் அடைப்புக்குள் முதலியார் 
என்று குறிப்பிடுங்கள்.

தென்மாவட்டங்களில் உள்ள பிள்ளை, பிள்ளைமார்,சோழிய
வெள்ளாளர், பாண்டியநாட்டு வெள்ளாளர்,கொடிகால் வெள்ளாளர்,
கார்காத்த வெள்ளாளர், முசுகுந்த வெள்ளாளர்.இல்லத்து பிள்ளை
மார்கள், போன்றவர்கள் சாதியை அப்படியே குறிப்பிட்டு
அடைப்புக்குள் வெள்ளாளர் என்று குறிப்பிடுங்கள் என்று 
உத்திரவிட்டார்.
சாதிவெறிகுலதெய்வம்





2அண்ணன் லொடுக்கு பாண்டிஎன்ற அம்பானி என்ற திண்டுகல்லு சாரதி.

சாதிவெறி குலதெய்வத்தின் பெருமையை ஒலகம் முழுக்க பரப்பிட
முக்குலத்தை சேர்ந்த இனமக்கள்.தேவர் என்றே சாதிவெறி கணக்
கெடுப்பில் முத்திரையிட உத்திரவிட்டார்.
3.கருணாஸ் உத்திரவை எதிர்த்து அரப்பா,நகைமுகன்.
தேவர் என்ற அங்கீகாரம் பெறாத பெயர்களில் சாதிவெறி
கணக்கெடுப்பில் பதிவிட்டால் கல்வி,வேலைவாய்ப்புகளில்
சலுகைகள் கிடைக்காது. அதனால இனமக்கள் பதிவுப்பட்டி
யலில் உள்ள சாதிவெறியையே பதியவேண்டும் என்று
மறு உத்திரவிட்டனர்.

4.முத்திரையர் பேரவையின் மாநில த்தலைவர்
முத்தராஜா,முத்திரியர், உள்பட 29 இனங்களில் உள்ளவர்கள்
முத்திரையர் என்றே சாதிவெறி கணக்கெடுப்பில் பதிய
வேண்டும் என உத்திரவிட்டனர். .....

5.பரவர் நல பேரவை தலைவர் 
நம் மக்கள் பரவன்,பரதவர், பரவர்.பரதர் என பல பெயர்களில்
சாதிவெறியை பதிந்து கொள்கிறார்கள். மத்திய-மாநில சாதி
வெறி பட்டியலில் பரவர் என்பது மட்டுமே உள்ளது. எனவே
பரவர் என்று சரியானது. இப்படி பதியக்கூடிய சாதிவெறியால்
பல்வேறு சாதனைகளை செய்து முடிக்க வழி கோலும் என்று
உத்திரவிட்டார்.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி 

சாதிவெறியை புரிந்து கொண்டவர்களைக் கொண்டே சாதிவெறி
கணக்கெடுப்பு நட்த்தபடவேண்டும் என்றுவிட்டு.அரசு சாதிவெறிப்
பட்டியலில் பள்ளர்.பறையர், அருந்ததியர் என்றே உள்ளது.பல்வேறு
பிரிவுகளிலும் பெயர்களிலும் உள்ள இனமக்களான பள்ளர்கள் 
நம்குலப்பெருமையை நிலைநாட்டவும்,நமகுலதனித்தன்மையை 
காக்கவும், பள்ளர்கள் தேவேந்திரகுலவேளாளர் என்று அடையாளப்
படுத்தவும். பறையர்கள் ஆதிதிராவிடர்கள் என்றும்,சக்கிலியர்கள
அருந்ததியர் என்றும் பதியவேண்டுமென உத்திரவிட்டார்.
இப்படியாக எல்லா சலூன்கடை மருத்துவமார்களும்  வெளுத்து
கட்டுபவர்களும் .மற்றும் அய்யாமார்களும்,டாக்டர் மார்களும்
தங்களின் சாதிவெறி பலத்தை கூட்டவும் காட்டவுமாய் வேண்டு
கோலும்,உத்திரவுமிட்டார்கள்

தமிழ்நாட்டு சர்வீஸ் கமிஷனில் பத்தாயிரம் பணியிடங்களுக்கு
பதினோரு லட்சம்பேர் விண்ணப்பத்திருக்கும் நிலையில் சாதிவெறி
கண்க்கெடுப்பில் தங்கள்சாதிவெறியை பதிவிட்டுள்ள எல்லா 
சாதிகளுக்கும்.வேலைவாய்ப்பு, (கல்வி வாய்ப்பு உள்பட) கிடைக்கும்
என்பது  குதிரைக்கு கொம்பு முளைக்கின்ற கதைதான்

நிலவுகின்ற.தனியார்மயம்,தாராளமயம்.உலகமயத்தின் சூழலில்
கல்விக் கொள்ளையும், வேலையில்லாதிண்டாட்டமும்பெருகி
சிறுதொழில் விவசாயம்,போன்றவைகள் ஒழிக்கப்பட்டு வரும்
நிலைமையில் இந்த சாதிவெறி கணக்கீட்டால் எல்லா சாதிகளிலும்
உள்ள ஏழைஎளிய மக்களுக்கு எள்ளளவுகூட பயன்படாது. இந்த
கணக்கிட்டால் பயன்பெறப்போவது எல்லா சாதியிலும்உள்ள
வசதிபடைத்த மேல்மட்டத்திலுள்ள பணக்கார சாதிவெறி.ஓட்டு
 சீட்டு அரசியல் தலைவர்களுத்தான் பயன்படடும். சாதராண
மக்கள் சாதிவெறியில் முட்டி பலிகாடாவதுதான் தொடர்கதையாக
நடக்கும்.

இந்த சாதிவெறி கணக்கீட்டின் போது கேட்கப்படும் கேள்வி
விபரங்களில் சொந்தவீடா? டூவிலர் இருக்கா? கம்யூட்டர்
இருக்கா ? போன்றவற்றை பதிவதோடு. எந்த மதம்? எந்தசாதி?
என்ற கேள்விகளில் மதமும்இல்லை சாதியுமில்லை என்று
பதிவிடுவதே சாதிவெறியை கருவறுப்பதற்க்கான முதல்படி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...