சனி 23 2012

தமிழ்நாட்டின் தலைமைச்செயலகம்... தற்காலிக இடமாற்றம்...!!!



தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில்
மூன்றாவதாக ஏறிய(ஏற்றிய)
ராணி.......................

ஓராண்டு சாதனையாக பால்
விலை,பேருந்து கட்டணம்
மின்கட்டணம்...இப்படியாக
பலவற்றை உயர்த்தி.......

தன்னை சிறையிலடைத்து
கொடுமை செய்த முன்னால்
ஆட்சியாண்ட செம்மொழி
மன்னனின் அமைச்சர்களை
பதிலுக்கு சிறையில் தள்ளி
பூட்டி.................................

தன் அருமை எருமைத்
தோழியை விட்டை விட்டு
துரத்தியடித்து மீண்டும்
தீட்டு கழித்து சேர்த்து...

தன் அகவை 64 நாளை
பட்டி தொட்டி எங்கும்
பரப்பிட செய்து போகும்
இடமெல்லாம் தன் அறிவை
மெச்ச குட்டிக் கதைகள் பல
சொல்லி............................

நித்தம் ஒரு நாளாக
லாக்கப் கொலை நடத்தி
அந்தப் பழியை தொலைக்க
ஆயிரத்து ஆறு ஜோடிக்கு
திருமணம் நடத்தி....

பேரரசுக்கு தலையாட்டி பொ்ம்மை
யார் வரவேண்டும் என்று
மூதுரைத்து..........................இப்படி
ஓய்வு ஒழிச்சலின்றி அயராது
உழைத்து கலைத்த செந்தமிழ்
நாட்டின் இளவரசி செல்வி.......

வானுர்தியில் கொண்டு சென்ற
உரத்தையும் கலப்பையும்
கொண்டு,தன் கொட நாட்டு
விளை நிலத்தை உழுத பரம்ப
அடித்து பயிரிட சில வாரங்கள்
ஆகுமென்பதால்..................

அடிமை அமைச்சு பெரு மக்களும்
அவர்தம் பிழைப்பு மாணமிகு மக்களும்
செந்தமிழ்நாட்டின் தலைமைச்
செயலகம் தற்காலிமாக............
கொட நாட்டுக்கு மாற்றம்
என்பதை அறிக! உணர்ந்து கொள்க!!!



2 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...