வியாழன் 28 2012

ஓங்கி ஒலித்த குரல்கள்

வேகமாக வளர்ந்து கொண்டு இருப்பதாக சொல்லிக்
கொல்லும் இந்திய பொருளாதாரம் பல மாதங்களாக
கும்மாங்குத்து ஆட்டம் போட்டுகிட்டு இருக்குதுன்னு
ஒலக அறிவாளி ஊடகங்கள் எல்லாம் புழுதியை கிளப்பி
விட்டுகிட்டு இருந்தது.அந்தப் புழுதியோடு வெளி நாட்டு
நிபுணர்கள்களின் தயவோடு உள்நாட்டு நிபுணர்கள்
சொன்ன குரல் வாய்ஸ்கள் .


இன்போசிஸ் நாராயாணா மூர்த்தி.
எல்லா சிக்கல்களும் நாமா உருவாக்கிக் கொண்டது.
நிறைய சேதமாகிவிட்டது. சரி செய்யப் போகிறமோ?
இன்னும் சேதப்படுத்த போகிறமா? என்பது தெரியவில்லை.
( அவர்க்கே தெரியவில்லை)


அஜிம் பிரேம்ஜி.
தலைவன் இல்லாத படகாக நாடு தத்தளிக்கிறது.
( ரெம்பவும் அலட்டிக்கிறார்)


இந்திய பெரும் தொழிலதிபர்கள் சங்கம்
அந்நிய மூலதனத்தை ஈர்க்கக்கூடிய பொருளாதார சீ்ர்
திருத்தங்களை மேற்க்கொள்ள மத்திய அரசு தயங்கு
கிறது.இந்த தயக்கத்தை அதிபர்கள் சங்கம் வண்மையாக
கண்டிக்கிறது.( அட,1991டூ2012 வரையும்தான் ஒன்னுவிடாம
அவித்துவிட்டாச்சுலே,இனி அவுக்கிறததுக்கு என்னா
இருக்கு)


மணி சங்கர் அய்யரு
அசாத்திய லாபம் ஈட்டும் அய்.அய். டீ. தொழிலதிபர்களின்
குரல்கள் இந்தியாவின் குரல்கள் எல்லாம் இந்தியாவின்
குரல்களாகிவிடாது.( அதானே, நேத்து வந்த சுண்டக்கா
அதிபர்களெல்லாம். காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரிய
தொழில் அதிபதிகள் முன் எடுபடுமா?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...