ஞாயிறு 18 2019

அதிகாலை கனவு-50.














செத்து போவது எந்தன் உடம்பு மட்டுமே க்கான பட முடிவு


க...க..கதை கேட்பதில் ஆர்வம்தான்...


தெரிந்தவர்களோ. தெரியாதவர்களோ,
 நண்பர்களோ.வேறு சிலரோ..
கதை சொல்லும்
போது,. கதை
கேட்பதில் ஆர்வம்தான். ....
 ஆனால் அப்படி
கேட்ட கதைகள்
அதிகாலை கனவில்
வந்து கொல...
கொலய்யா..முந்திரிக்கா...
என்பேரு கத்திரிக்கான்னு
 மறக்காமல் வந்து
ஆட்டம் போடுவதிலிருந்து
தப்பிக்க முடியவில்லை..

அப்படி வரும்
கதைகளில் கதாநாயகன்
வேறு நபராக
இருந்தாலும்..ஏதோ.
.நான் அதில்
சம்பந்தபட்டு   பக்கத்தில்
 இருந்து பார்ப்பது
போல் தோன்றுகிறது....

 இதுவும் காலத்துக்கேற்ற.
டிஜிட்டல் கனவோ..!!!!!!!!

என்னவோ...ம்ம்.......

கேட்ட கதை.. கனவில் வந்த நிலை..

நான் நாற்பது வயதில் இறந்துவிட்டேன்... என்னை உலுக்கி ஒரு பெண் அலறுகிறாள். பிற்பாடு தெரிகிறது அது என் மனைவி என்று  முகம் யாரென்று தெரியவில்லை.. அருகில்  தவழும் வயதில் ஒரு குழந்தை.. அது என் மகனாம்..
 முகம் தெரியாத என் அப்பா..முகம் தெரிந்த என் அம்மா... அக்கா மற்றும் மருமகன் மருமகள் உற்றார் உறவினர் எல்லோரும் அழுது கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருத்தாராக வந்து செத்துப் போன என் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்துகிறார்கள்... வந்தவர்களில் ஒருவர் எனது பாஸ் அதாவது நான் வேலை செய்த கம்பெனி முதலாளி  அவரைக்கண்டதும் என் மனைவியானவள் என் குழந்தையை  சுட்டிகாட்டி அழுகிறாள்..  அதிர்ச்சி அடைந்த என் முதலாளி என் உடலருகே வந்து பாவிப்பயலே என்றபடி என் தொடையில் ஊசியால் குத்துகிறார்... தமிழ்மணம் மாதிரி.. செத்துப்போனவன் எப்படி்? கத்திருப்பான்.????



நிஜத்தில் ஆ..ஆ.ஆ..வென்று கதறி சத்தமிட்டுஎ  ஊசி குத்தின தொடையை பார்த்தேன்....... நிஜத்தில் எதோ கடித்தது.கனவில் ஊசி குத்தியது.

இது எப்படி...???
















9 கருத்துகள்:

  1. இந்த கனவு நல்லது நண்பரே...
    நீங்க எண்பது வயதுவரை வாழ்வீங்க!

    வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருங்க...

    அத்தி வரதர் கனவில் வரவில்லையா ?

    பதிலளிநீக்கு
  2. அப்போ.கல்யாணம் ஆகி.மனைவி..துனைவி..குழந்தை வந்தபிறகுதான் எண்பதுல போவேன்ங்கிறிங்க... அப்படித்தானே! உங்க வாக்கு பொன்னாகட்டும் தலைவரே.. உங்க வாக்கு பொன்னான பிறகு தட்சீணா மூர்த்திக்கு என்ன தலைவரே! தங்களுக்கும் சேர்த்து வாரம் என்ன மாதம் முழுவதும் விரதம் இருக்கிறேன் தலைவரே...! தலைவருக்கு ஒரு கோரிக்கை..காசு பணம் துட்டு இல்லாததால் அத்தி வரதர் வரவில்லை..தாங்கள் சிபாரிசு செய்யவும்.. பின்னாடி அடுத்த நாற்பதில் வரும்போது அக்கவுண்ட் பே-யில் கண்டிப்பா செலுத்தி
    விடுவென் என்று...!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐதீகத்தை மாற்றி மீண்டும் அத்தி வருவார் எல்லோருக்கும் கல்'லா கட்டுவார்.

    பதிலளிநீக்கு
  4. "good night" கொளுத்தி வச்சிட்டு தூங்கினிங்கனா கொசு கடிக்காது... கனவில் வந்து பாஸ் தொடையை கிள்ள மாட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குட்நைட்டை கொளுத்தி விட்டு தூங்கினா காலையில வேறு பாஸ் வந்து மூக்கை கிள்ளுவாரே..அப்ப என்ன செய்வது..நண்பரே!!

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...