வெள்ளி 01 2019

நினைவலைகள்-56.








பெரிய்ய.... கோவிலை பற்றி...........

தஞ்சை கோயிலை பார்த்த பெரியார் க்கான பட முடிவு








தஞ்சாவூர் பெரிய கோவிலை பார்த்தாரா இல்லையா  பெரியார்  ... என்று கேட்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்...

பார்த்தார் .. கோவிலை  பார்ப்பதற்கு முன் .. கோவிலை கட்டிய, அருள்மொழிவர்மன் என்ற அழகிய தமிழ்பெயரை விட்டுவிட்டு ராஜராஜசோழன் என்று மாற்றிக்கொண்ட சமஸ்கிருத பித்தரை பார்த்தார் ... 

அதே கோவிலில் தேவரடியார் என்கிற பெயரில் பெண்களை தாசிகளாக்கிய அவலத்தை பார்த்தார் .. 

கோவிலை மய்யமாக வைத்து அக்ரஹாரம், ஊர், சேரி என்று மனிதர்களை பிரித்த கொடுமையை பார்த்தார் ... 

கோவிலுக்கு உள்ளே சிலருக்கு அனுமதியில்லை, கோவில் கருவறைக்கு உள்ளே பலருக்கும் அனுமதி இல்லை என்று கோவிலின் பெயரால் நடக்கும் தீண்டாமையை பார்த்தார் .. 

கோவில் நிலம் என்கிற பெயரால் பார்ப்பனரகளுக்கு பொது நிலத்தை வாரி வழங்கிய பார்ப்பன அடிமை புத்தியை பார்த்தார் .. 

இத்தனையையும் பார்த்துவிட்டு பின் அந்த கோவிலை பார்த்து இது வானளாவிய குட்டிச்சுவர் என்று சொன்னார் ... 

தான் பார்த்ததையெல்லாம் ஒழிப்பதே தன் வாழ்நாள் பணி என்று ஒரு அழிவுவேலைக்காரனாக  கலகக்காரனாக வாழ்ந்தார் ... 

அன்றிலிருந்து இன்றுவரை கோவில் கோபுரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அறிஞர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் பைத்தியங்கள் .. வாயை பிளந்துக்கொண்டு ... 

கல்லிலும் மண்ணிலும் அறிவியலை பார்த்தவர் அல்ல பெரியார் .. மக்களின் வாழ்க்கையில் அறிவியலை தேடியவர்  பெரியார் .. என அறிவோம் அரசியல்!!


1 கருத்து:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...