ஞாயிறு 16 2023

நான் கேட்டவை -1



தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார் சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார் கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார் கடவுள்மேல் குற்றமென்பார் .. இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் .. இந்தத் திண்ணை… .. பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அனேக வித்தியாசம் புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம் புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்த பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் .. இந்த திண்ணை… .. கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு - பழங் கதைகளைப் பேசி காலம் வீணாச்சு; கையாலே முன்னேற்றம் கண்டாகணும் .. இந்த திண்ணை… .. நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க படிப்பவங்க வீடு புடிப்பவங்க பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும் பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு மாடா இழுக்கிறோம் வேகமா; நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் .. இந்த திண்ணை…...

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...