வாய்ப்பு கிடைக்காதவர்கள்
எல்லாம் யோக்கியர்கள் தான்
என்றார் வந்தவர்
என்னைத்தான் சுட்டுகிறார்
என நிணைத்து
அவருக்கு பதிலுரைத்தேன்
இல்லையே எனக்கும்
பல வாய்ப்புகள்
வந்தது வந்த
அந்த வாய்ப்புகளை
பயன் படுத்தாமல்
நான் யோக்கினாகவே
இருக்கிறேன். என்றேன்
சந்தேகம் கொண்டு
அப்படி இருந்திருக்க
முடியாதே பொய்
உரைக்கிறீர் என்றார்.
நம்பவில்லை என்றால்
இந்திய உளவு அமைப்பை
கொண்டு என்னை உளவு
அறிந்து என் யோக்கிய
தண்ட வாளத்தை வண்டவாள
மாக்கலாம் என்றபோது
உங்களுக்கு கோளாறு
அதனால் யோக்கியனாய்
இருக்கிறாய் என்றார்.
என் தெரு மாக்கள்
பொட்டை.ஒம்போது
என சொல்வது
போல் இருக்கிறது.
எனக்கு விபரம்
தெரிந்த நாளிலிருந்து
டீ குடிப்பதில்லை,
புகை பிடிப்பதில்லை
சாராயம் குடிப்பதில்லை
அதே போல் வாய்ப்பு
கிடைத்தும் பயன்படுத்தாமல்
யோக்கியவனாகவே இருந்து
மடிகிறேன் யோக்கினாக
இருப்பதற்கு எந்த
பிரிதிபலனும் வேண்டியதில்லை
வாய் முடி
மௌனமாக இருந்து
நூற்றில் ஒருவர்
இல்லை ஆயிரத்தில்
பெரும் ஆச்சரியத்துடன்
அங்கீகரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை