| படம்- |
இடப்பிரச்சிணையில்
விசாரணைக்காக காவல்
நிலையத்தில் காத்திருந்த
போது....................
இந்தியப் பிரஜையும்
தமிழ்நாட்டு குடிமகனுமான
ஒருவர் இரண்டு
விரலை நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடு என்றார்
என்ன என்று
கேள்வி கேட்டபோது
முதலில் தொடு
பிறகு சொல்கிறேன்
என்றார் அவர்.
மறு பேச்சில்லாமல்
இரண்டில் ஒன்றைத்
தொட்டேன் அவர்
முகம் மலர்ந்தார்.
இப்படி நின்ற
நான்கு பேர்களிடம்
இரண்டு விரல்களை
நீட்டி ஒரு விரலைத்
தொடச் சொன்னார்.
அவர்களும் கேள்வி
எதுவும் கேட்காமல
இரண்டில் ஒன்றைத்
தொட்டார்கள் அகம்
மலர்ந்த அந்த
தமிழ்நாட்டு குடிமகன்.
...........
சத்தம் போட்டுச்
சொன்னார் ஆர்.கே
நகர் இடைத் தேர்தலில்
அவருடைய அம்மாமதான்
வெற்றி அடையுமாம்..