ஞாயிறு 15 2017

டாட்டாவும்,அம்பானியும் வேர்வை சிந்த உழைத்த கதை



டாட்டாவும்,அம்பானியும் 10 வருடங்கள் முன்பு சென்ட்ரல் வங்கியில் 45 ஆயிரம் கோடி கடன் பெற்றனர்.

எதற்காகக் கடன் பெற்றார்கள்? 

அணுமின் நிலையம் தொடங்குவதற்கு.

 எதற்காக? மின் உற்பத்தி செய்வதற்காக.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக தொடங்கவில்லை. 

பத்துவருடமாக தொடங்காதவர்கள் இப்போது தொடங்குகிறோம் என இருவரும் கூறுகிறார்கள்.

ஆனால் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஒரு டன் ரூபாய் 2500 க்கு தர வேண்டும் என கண்டிசன் போடுகிறார்கள்.

ஒரு டன் நிலக்கரி 25ஆயிரம் விலை இருக்கும்போது எப்படி ரூ 2500 க்கு கொடுப்பது என கோல் இந்திய சேர்மன் மறுத்துவிடுகிறார்.

உடனே பிரதமர் தலையிடுகிறார். பிரதமர் மோடி தலைமையில் டாட்டா அம்பானி ,கோல்இந்திய சேர்மன் பேச்சுவார்த்தை நடந்தது.

உலகப் பணக்காரர்களுக்கு ஆதரவாக மோடி முடிவெடுத்தார். அதாவது இந்திய மக்கள் வரிப்பணத்தில் இயங்கும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனம் ஒரு டன் நிலக்கிரியை 25ஆயிரத்திற்கு ஆஸ்திரேலியா,இந்தோனிசியா ஆகிய இரு நாடுகளிலிருந்து வாங்கி ரூபாய் 2500 க்கு டாட்டாவுக்கும், அம்பானிக்கும் கொடுப்பதற்க்கா...

மக்கள் வரிப்பணத்தை யாரிடமிருந்து பிடுங்கி ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி யாரிடம் கொடுக்கிறார் என்பதை இந்த நாட்டின் கோவணங்கட்டி விவசாயிகளும், நடுத்தர வர்க்க முழி பிதுங்கிகளும் தெரிந்து கொண்டீர்களா?.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...

இத்தோடு கதை முடியவில்லை. இனிதான் இருக்கிறது உச்சகட்டம். அது என்னான்னு கேக்குறீங்களா? பொறுங்க... சொல்றேன்...

கோல் இந்தியா நிறுவனம் டாட்டாவுக்கும், அம்பானிக்கும் டன் ரூ.2500 விலையில் தருவதற்காக டன் ரூ.25000க்கு ஆஸ்திரேலியா, இந்தோனீசியா நாடுகளிலிருந்து வாங்குகிறதில்லையா?  

அந்த ஆஸ்திரேலியா, இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளிலும் நிலக்கரியை வெட்டி எடுக்கிற கான்டிராக்ட் பணியை யார் செய்கிறார்கள் தெரியுமா?
சென்ட்ரல் பேங்க்ல லோன் வாங்கிய  அம்பானியும்,டாட்டாவும் செய்கிறார்கள். இப்போது கூடுதலாக அதானியும் அதில் சேர்ந்துள்ளார்.

அதாகப்பட்டது, டாட்டா,அம்பானி ஆகிய இருவரும் வெட்டி எடுக்கிற நிலக்கரியை, இருவரிடமிருந்து  ஒரு டன் ரூபாய் 25ஆயிரத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் வாங்கி, அதே டாட்டா, அம்பானி முதலாளிகளுக்கு  நிலக்கரியை ஒரு டன் ரூபாய் 2500-க்குக் கொடுக்கிறார்கள்.  இப்ப புரிந்து இருக்குமே...!!! இப்படித்தான் இந்தியா வளர்ச்சி பெறும் வழி!!

ஊரான் வூட்டு நெய்யே, ஏம் பொண்டாட்டி கையேன்னு சொம்மாவா சொன்னாங்க?

100 வருசத்துல இந்தியப் பெருமுதலாளிகளோட சொத்து 26% உயர்ந்திருக்குன்னா, எம்மாம் வேர்வை சிந்தி உழைச்சிருக்கானுங்க!

3 கருத்துகள்:

  1. பிரமிப்பாக இருக்கு இதை தட்டி கேட்க முடியாத நமக்கு என்ன மசுத்துக்கு வாக்குரிமை ?

    பதிலளிநீக்கு
  2. இத்தகைய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டால் தானே
    மக்களுக்குத் தெரியும்!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...