செவ்வாய் 07 2017

நவம்பர் 8 காவிகள் ஒழிப்பு தினம்




4000 ரூபாயை மாற்றுவதற்கு
தேசமே வரிசையில்
நின்ற போது
நானும் நின்றேன்

ஒரு நாளுக்கு
ஒரு முறைதான்
மீண்டும் நான்
வரிசையில் வரக்கூடாது
என்பதற்க்காக என்
கையில் அடையாளமாக
மை வைத்தார்கள்

என்னைப் போல்
வரிசையில் வந்தவர்கள்
பலர் வரிசையில்
நின்றே செத்தார்கள்

நின்றவர்கள் நிற்காதவர்கள்
அனைவருக்கும் தெரிந்திருந்தும்
எல்லோரும்  வாய்
இருந்தும் ஊமையாக
காட்சி அளித்தார்கள்

ஆனால் சேகர் ரெட்டி
என்பவர் மட்டும்
வரிசையில் நிற்காமல்
கையில் அடையாள
மை பெறாமல்
33கோடி ரூபாயை
மாற்றிக் கொண்டார்
எந்த வங்கியில்
மாற்றினார் எப்படி
மாற்றினார் என்பது
மட்டும்  அண்ணன்
புல்லட் பாண்டி
ஆளும் மத்திய
அரசுக்கு தெரியவே
தெரியாதாம் ரிசர்வ்
வங்கிக்குக்கூட சத்தியமா
தெரியாதாம் இதை
சிபிஐயால் கூட
கண்டே பிடிக்க
முடியாதாம் இந்த
மாபெரும் வெற்றியை
ஆடுவோமே. பள்ளு
பாடுவோமே....என்று
கூவுகிறார்கள் இந்திய
காவி பயங்கரவாதிகள்

4 கருத்துகள்:

  1. தேர்தல் வரும் போது நம் மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டதை எல்லாம் மறந்து விடுவார்கள்.. நிச்சயம் அந்த சம்யத்தில் இது போன்ர பதிவுகளை இடுவதோடு மட்டுமல்லாமல் பலரிடமும் பேசி அந்த கஷ்டங்களை நினைவுபடுத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. உண்மை கூமுட்டை வாக்காளர்களுக்கு இன்னும் இருக்கு ஆப்பு.

    பதிலளிநீக்கு
  3. அரசுக்கு தெரியவே
    தெரியாதாம் ரிசர்வ்
    வங்கிக்குக்கூட சத்தியமா
    தெரியாதாம்

    வேதனை

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...