புதன் 01 2017

நீ..மட்டும் அல்ல..நானும்தான்...........



அவர்கள்   யார்
என்று தெரியவில்லை

தெரிந்து கொள்ள
வழியும் இல்லை

அவர்கள் வாதம்
கடுமையாக இருந்தது

அவர்களின் வாதம்
நாட்டு நடப்பை
பற்றி  நீண்டது

அவர்கள்  இருவருமே
தங்களைப் பற்றி
மாறி மாறி
சொல்லிக் கொண்டார்கள்


முதல்  நாள்
ஒரு பேச்சு
மறு  நாள்
ஒரு பேச்சு
பேசும் உச்ச
நீதி  மன்றம்
அல்ல  நான்

நீ மட்டும்
அல்ல நானும்தான்..

அவர்கள் பேச்சு
முடிவுக்கு வந்ததா
 இல்லையா  என்பது
எனக்கு தெரியவில்லை

அவர்களுடன் இருந்தவர்
நான் போறேன்
என்று விட்டு
நகர்ந்த போது
நீ  மட்டும்
அல்ல நானும்தான்
என்று சொல்லாமல்
அவரைத் தொடர்ந்தேன்........

5 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...