வியாழன் 11 2019

அதிகாலை கனவு-8.



காது க்கான பட முடிவு






மெதுவாக என் காதருகே வந்தார்
லேசாக கிசு கிசு கிசுத்தார்
என்ன சொன்னாரென்று தெரியவில்லை
ஒன்னுமே புரியவில்லை என்றேன்

அட, செகுட்டு பயலே...
காதுதான் கேட்கவில்லை.புத்தியுமா
இல்லை என்று திட்டினார்..ஏய்...ஏய்.
ஏய்யா வலிப்போக்கனுக்கு காது
கேட்கவில்லை...புத்தியும் இல்லை
சிறு பிள்ளைகள் விளையாட்டில்
கத்தியது கேட்காத காதுக்கு
கேட்டது...திடுக்கிட்டு முழித்தேன்
வலிப்போக்கன் என்ற எம் புனை
பெயரு எப்படி அதுகளுக்கு
தெரியும் என்பதுதான் முழிப்புக்கு
காரணம்....ஆமா..காதுகிட்ட
வந்து கிசு கிசுத்தது என்னவாக
 இருக்கும் ..உங்களுக்கு தெரிந்தா....

4 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...