சனி 21 2019

இது ஆசையில்லை பெரும் பேராசை....



பேராசை பிடித்த காக்கா க்கான பட முடிவு




வணக்கம் நண்பரே..... என்ன இந்தப் பக்கம்....!!!

உங்களை பார்க்கத்தான்..இந்த பக்கம்..

என்ன விசயம் சொல்லுங்கள்...

ஒன்றுமில்லை.. இந்த செல்லில் வந்த பேச்சைக் கேளுங்கள்..


சரி..கொடுங்கள்...கேட்கிறேன்....

.....................
.......................

.......................


யாரு  இது  இப்படி வசவு....உங்களுக்காக...??!!!

ஆம்..எனக்குத்தான்.... யாரதுஎன்று எனக்கு தெரியவில்லை... அந்த வசவின் சாரத்தை அதாவது விளக்கத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும்.. அதற்குத்தான் உங்களை பார்க்க வந்தேன்.. என்னைப்பற்றி  நன்றாக அறிந்தவர்கள் அல்லவா தாங்கள்......!!!!!!!!!

அப்படியா...???? செல்லை கொடுங்கள் திரும்பவும் ஒரு தடவை கேட்டுச் சொல்கிறேன்....

இந்தாருங்கள்.....

............................

..................................

.....................................


நண்பரே..! இந்த வசவு உங்களுக்கு அல்ல.... வேறு ஒருத்தனுக்கான வசவு நம்பர் மாறி வந்துவிட்டது.... மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் அந்த ரிக்கார்டு பதிவை அழித்துவிடுங்கள்.... நானே அழித்துவிடட்டுமா...?
விபரத்தை சொல்கிறேன் பொறுங்கள்...

சரி..அழித்துவிடுங்கள்....

நண்பரே... இது கள்ளக் காதலால் வந்த.... சாரி..சாரி... உங்கள் பாசையில் காதலன் காத்திருந்த காதலியை தவிக்கவிட்டு விட்டதால் வந்த கடுங்கோப வசவு நண்பரே !

அப்படின்னா....!!!

இதுக்குத்தான் நான் உங்களுக்கு அடிக்கடி சொல்றது.... ஒன்னு நீங்க காதலிக்கனும் இல்ல .கலியாணம் பன்னியிறுக்கனும்.. அப்படி பன்னியிருந்தா  உங்களுக்கு நான் சொல்வது புரியும்...

உங்களுக்கு  கிடைச்ச டிமாதிரியான வாய்ப்பும் வசதியும் எனக்கு கிடைக்கலையே  தலீவா....

இப்படிச் சொன்னா எப்படி...நண்பரே!!

உண்மையைத்தானே சொன்னேன்..வயசாயிடுச்சு ...என்னை நம்பி பத்து டிக்கெட் இருக்கு.... தொழில் வேற..அவ்வளவு சிறப்பா  இல்ல..இதுல காதல்....கல்யாணமுன்னு   ......

இத ஒன்ன சொல்லிருங்க  நண்பரே..!   அப்ப பாத்திங்க....  இப்பவுமா....???அவுக அவுக சுமைய அவுக அவுககிட்ட  ஒப்படச்சிடனும் நண்பரே...!.. உடனே..என்ன உதாரணமா காட்டி சொல்லாதிீங்க....

சரி.சரி...உங்க பாதையிலே வரேன்... வீட்டோட மாப்பிளையாக இருக்கிற மாதிரி ஒரு பொண்ண பாருங்க... என் தொழிலு..வீடு எல்லாத்தையும் அவுக அவுகட்ட விட்டுட்டு போயிடுறேன்...


இது பேராசை நண்பரே.....!!


ஆசையே படதாவனை ஆசை படுங்கன்னு சொல்றிங்க  ஆசை பட்டா பேராசைங்கிறீங்க....

இது ஆசையில்ல நண்பரே..! பெரும்.. பேராசை... உங்கள் பேராசை நீராசையாகிடும் நண்பரே...!!!

(எதையோ கேட்க..எங்கயோ  போகுதே)

3 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...