ஞாயிறு 29 2019

அவன் இன்னாளு.......!!!.


அவர்..இன்னாளு என்று தெரிந்து கொள்ளும்  அடையாளங்கள்.....!!!!!!!!!!!!!
அம்பேத்கர் க்கான பட முடிவு


ஒருவன்  தீண்டதகாகவன் என்பதை தெரிந்து கொற்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன...

மகாராஷ்டிரா வில் அவன் கழுத்தை சுற்றியோ.இடுப்பை சுற்றியோ கறுப்பு கயிறு அணிய வேண்டுமென்ற விதி இருந்தது..

குஜராத்தில் ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது..

பஞ்சாபில் தெருக்கூட்டுபவன் தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்..

பம்பாயில் கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும் தீண்டபடாதவர்களுக்கு துணிகள் விற்கும்போது அந்த துணிகளையும் கந்தலாக்கியும் அழுக்கடையச்செய்தும் விற்பனை செய்தார்கள்..

மலபாரில் ஒரு மாடிக்கு மேல் வீடு கட்ட அனுமதிக்கப்படவில்லை.இறந்தவர்களை எரியூட்டவும் குடை எடுத்து செல்லவும் காலணிகள் அணியவும் நகைகள் அணியவும் பசுக்களிடமிருந்து பால் கறக்கவும் தங்கள் மொழியில் பேச கூட அனுமதிக்கப்படவில்லை...

தென்னிந்தியாவில் இடுப்புக்கு மேல் எந்த துணியும் அணியக் கூடாது ,பெண்களுக்கு உடலின் மேல் பகுதியில் மூட அனுமதிக்கப்படவில்லை...

இப்படிப்பட்ட கொடுமையிலிருந்து நீக்கி மனிதனாக மதிக்க வைத்த பட்டியல் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டு தவமிருந்து ஈன்றெடுத்த மாமனிதர் பாபாசாகேப்

#Coming Dr.Babasaheb Birthday April 14

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...