பக்கங்கள்

பாரம் இறங்கியது.சுதந்திரமனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரம் இறங்கியது.சுதந்திரமனிதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன் 20 2017

இ்ரண்டாவது வருட நிணைவு நாளில்............

இரண்டு வருடங்களுக்கு முன்பு 20/9/2015-ல் இரவு 8 to 8,30 மணியளவில் என்னை பெற்று பாதுகாப்பாக வளர்த்த என் தாய் இவ்வுலகை விட்டு பிரிந்தார்
அவர் பிரிந்த இரண்டாவது நிணைவு நாளாகும்.

என்தாய் இறந்தபின் இந்துக்குரிய எந்த மதச் சடங்குகளையும் செய்யாமல் எவ்வித சச்சரவு ஏற்படாமல் தகனம் செய்தேன்.. இடுகாட்டில் புதைப்பதற்கு இடம் இல்லாததால் எரியூட்டப்பட்டார்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து..என் தாய் ஆனையிடும் வேலைகளை எனக்கு பிடிக்காமல் எதிர்மறையான கருத்து இருந்தாலும் அதை அவர் முன் வெளிக்காட்டாமல்அவர் இறக்கும் வரை அதை செய்து முடித்தேன் .இறப்பதற்கு முன்பு உடல் நலம் இல்லாமல் படுக்கையில் இருந்த போது அவர் அருகில் அதிக நேரம் இருப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு காரணம் எனக்கு ஏற்பட்ட பயம்தான்..

அந்த பயத்துக்கு காரணம் இதுதான்....விபத்தால் இடையில் பார்வையிழந்த என் அக்காவையும் அக்காவின் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிக் கொண்டமாதிரி வேறு எதாவது கோரிக்கை வைத்து வேண்டினால் என்ன செய்வது என்ற பயம்தான். என் தாயார் இறப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் அவர் அருகில் சென்ற நான்... அவர் பூதவுடலை சுடுகாட்டில் எரியூட்டும்வரை அவர் உடலை விட்டு அகல வில்லை....

என் சிறு வயதில் அவரிடம் வாங்கிய அடி உதையினாலும்  என் உடலோடு பயம் ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. அந்தப் பயம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்தாயார் இறந்த பின் எனக்கு  குளிர் விட்டு போச்சு என்ற கதையாக... என் அக்காவின் கணவராலும்.அவர்களின் பிள்ளைகளாலும் ஏகப்பட்ட கஷ்டத்தையும் துயரத்தையும் அனுபவித்த நான்... வேண்டாத செலவுகளையும் மூடநம்பிக்கைகளையும் களைய அவர்களுடன் போராடினேன். அவர்கள் என்னிடம் முரண்பட்டே வந்தார்கள்.... நானும் நிலக்கடலைக்கு ஆசைப்பட்ட குரங்குபோல  கடலையையும் விட முடியாமல் கையையும் எடுக்க முடியாமல் தவித்து வந்தேன்...

நான் செய்து வந்த தொழிலிலும் என்னோடு முரண்பட்டே வந்தார்கள்..கடுமையாக உழைத்து வந்தேன். என் தாயார் இறந்து இரண்டு வருடங்களில்      சலிப்பும் வெறுப்பும் புலம்பலும் அதிகமாகிக் கொண்டே வந்ததது...

முழுக்க நணைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழிக்கேற்ப.. எனது தாயாரின் இரண்டாவது நிணைவு நாளில் பயத்தை விட்டொழித்து திடமான ஒரு முடிவு எடுத்து விட்டேன்...இந்த இரண்டாவது நிணைவு நாளிலிருந்து என் தொழின் அனைத்து நிலைகளையும்  வேலைகளையும்வரவு செலவு அணைத்தையும் என் மருமகன்களிடம் ஒப்படைத்துவிட்டேன்...விருப்பம் இருந்தால் உணவு கொடுங்கள்... இல்லையென்றால் ஆளை விடுங்கள்...என் தாயாரின் வேண்டுகோளின் படி உங்கள் விருப்பத்கேற்றபடி இதுநாள்வரை  நடந்து கொண்டேன்.. என் விருப்பத்திற்கு  வர நீங்கள் தயாராக இல்லாத போது  இனி நான் உங்கள் விருப்பதற்கு ஏற்றாற் போல் நடக்க முடியாது.

என்னைவிட்டால் உங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாததால் மேற்படி தொழிலை நீங்களே ! ஏற்று உங்கள் விருப்பபடி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு... அனைத்து பாரத்தையும் இறக்கி வைத்து விட்டேன் என் தாயார் இல்லாத தைரியத்தில்....குடும்பமே இல்லாத...சுதந்திரமனிதனாக  ஆகிவிட்டேன்.

என்னைக் கேன.... கிறுக்கன் ,லூசு ,மக்கு,என்று பலவாறு திட்டிய நண்பர்களுக்கும் தியாகி. உன்னைப்போல் எவனும் இல்லை என்று பாராட்டிய தோழமைகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்    நன்றி!



எதுக்கும் சொல்லி வைப்போம்....!!!

  இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய்.                                          -  ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...