வியாழன் 07 2017

99 ரூபாயை ஆட்டையை போட்ட கதை........

நாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.

“ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;அறை நிறையவில்லை.

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்அறை நிறையவில்லை.

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........

அந்த பாஜக உறுப்பினர் பின் சொன்னார்

”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும்நாட்டில்  இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....

பின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???என்று

அதற்கு கதை சொன்ன யோக்கியர் பதில் சொல்லவேயில்லை...

6 கருத்துகள்:

  1. 99 ரூபாய்க்கும் மெழுகுவர்த்தி வாங்கிட்டாரு....

    பதிலளிநீக்கு
  2. வெளிச்சம் மட்டுமா நிறைந்தது ,அவர் பையும்தான் :)

    பதிலளிநீக்கு
  3. இது உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் சொல்லபட்ட கதையா?
    ஆன்மீக கதைகள் போலவும் உள்ளது, பொதுவுடமை காதலன் அசுரனின் கதைகள் போலவும் உள்ளது.
    எனக்கு மெயிலில் வந்தது, அழகான இயற்கை காட்சிகள், ஆஸ்திரேலிய வினோத மலைகளின் படங்கள், அதன் கீழே எழுதியிருந்தது கடவுளின் அற்புத படைப்புகளை பார்த்தாயா அந்த வல்லமைமிக்கவரின் கைகளை இறுக்கமாக பிடித்துகொள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...