பக்கங்கள்

தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 13 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -78.....


| வே.மதிமாறன் பேச்சு | deepavali |





பலகாரப் போட்டி. கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடியே ஆக வேண்டும். தன் வருமானத்திற்கு மேல் கட்டாயமாக செலவு செய்ய வைக்கிற பண்டிகை. நடுத்தர வர்க்கத்தை கடனாளியாக மாற்றும் ஒரே மகிழ்ச்சியான நிகழ்வு



-க்கான பதிலில்
நரகாசுரப் பாட்டையா வழியில் வடக்கில் இருந்து வரும் கொடுமைகளை அழித்து, தூத்துக்குடி கொலைகளுக்கும், சாத்தான்குளம் #லத்தி கொலைகளுக்கும், NEET ஆல் கொலைசெய்யப்பட்ட அனிதாவிற்கும் நீதி காண்போம்
Flexed biceps

செவ்வாய் 31 2017

ஒரு அக்காவின் மிரட்டல் & உத்தரவுக்கு பணிந்து......





'துரை சண்முகம் என்பருடைய கவிதை ஒன்றை அனுப்பியிருக்கிறேன் மரியாதையாக போஸ்ட் செய்யவும்' என்று அக்கா ஒருவர் மிரட்டலோடு உத்தரவிட்டிருக்கிறார்

 அவர் கொண்டாடிய கடைசி தீபாவளி 


அப்போது என் மகளுக்கு
எட்டு வயது
அக்கம் பக்கத்தில்
தீபாவளி பரபரப்பு.

குடும்பம்
கொண்டாடவில்லை என்றாலும்
தெருவே தீபாவளியை
மகள் கண்ணில் காட்டியது.

ஏம்ப்பா….
நம்ம வீட்ல
இதெல்லாம் இல்ல – என
புதுத்துணி, பலகாரம்
பூவாணம் பார்த்து
கேட்டாள் மகள்

எதுவோ..
மனிதனுக்கு ஒரு கொண்டாட்டம் !
என ஊரே திளைக்கையில்
கருத்தியல் கனத்தை
குருத்து தாங்குமோ?
அச்சத்தோடு,
”கொண்டாட்டம் கூடாதென்பதல்ல
இது அவமானம்….” என
ஆரம்பித்தேன் காரணத்தை.

”வேற இருக்கட்டும்
வெடியாவது கிடையாதா?” என
வேண்டினாள் மகள்.
முடியாத கருத்தை
முகை அவிழ்க்கும் இயல்பாய்
கதையாகத் தொடர்ந்தேன்….

நரகாசுரனை கொன்றதற்கு
தீபாவளி – என
ஊர்க்காரணம் சொன்னவுடன்,
”அப்ப அவன் கெட்டவனா?
அடுத்த கேள்வியோடு
ஆவலாய் அருகே வந்தாள்.

நடந்தது இதுதான்,
அசுரர்களின் காட்டுக்குள்
ஆரியப் பார்ப்பனர்கள்
அத்து மீறி நுழைந்தார்கள்.

சுரா எனும் சாராயத்தை
ஊர் கெடுக்க கலந்தார்கள்.

அசுரர்களின்
ஆடு, மாடுகளை
அடித்து யாகத்தில் எரித்தார்கள்
அடுத்தவன் உழைப்பில்
திருடித் தின்றார்கள்.

தேவர்களின் தீய செயலை
எதிர்த்துக் கேட்டான் நரகாசுரன்
எங்களுக்கா தொல்லை தருகிறாய் ?
என
விஷ்ணுவை விட்டு கொன்றார்கள் !
இதுதான்
கதைக்கு பின்னால் உள்ள
கள வரலாறு!

இன்னும் புரியும்படி
சொல்கிறேன்,
எங்கிருந்தோ வந்து
ஊரில் ஒரு
சாராயக்கடையை திறக்கிறான்
நான் எதிர்த்துக் கேட்டால்
நரகாசுரன்,

நம்ப ஊர் ஆத்துல ஒருவன்
மணலைத் திருடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்,

படிக்குற
உன் பள்ளிக் கூடத்தை
ஒருவன் மூடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வந்து
நாம இருக்கும்
இடத்தை ஒருவன் பறிக்கிறான்
எதிர்த்துக்கேட்டால்
நான் நரகாசுரன்.

இதுக்காகவெல்லாம்
அப்பாவை
ஒருவன் கொலை செய்தால்
கொண்டாடுவாயா?

கேட்ட மாத்திரத்தில்
கண்களை உருட்டி
கைவிரல் ஆட்டி
”ஊம்…
தொலச்சி புடுவேன்!” – என
மகள் வெடித்த
வெடிப்பு இருக்கிறதே
அந்த வீரியத்தை
பட்டாசு எதிலும்
பார்க்க முடியாது.

குழந்தைக்கு உணர்த்துவது
சிரமம் என நினைத்திருந்தேன்
பிற்பாடுதான் புரிந்தது
பெரியவர்களுக்கு
புரிய வைப்பதுதான்
பெரும்பாடு.

இன்று
வளர்ந்துவிட்ட மகளிடம்
மீண்டும் தொடர்ந்தேன்.

”பூர்வகுடி மக்களை
இன்று
காட்டை விட்டு துரத்துவது
வேதாந்தா கம்பெனி,

பூர்வகுடி திராவிடர் வளத்தை
அன்று
ஆட்டையப் போட்டது
வேதக் கம்பெனி.

அரசாங்க மொழியில் சொன்னால்,
நரகாசுரன்
அந்தக் கால நக்சலைட்!”

மகள்
வெடித்துச் சிரித்தாள்
பூவாணம் தோற்றது
புது அர்த்தம் பொலிந்தது.

நன்றி!  – துரை. சண்முகம்.

ஞாயிறு 03 2013

நீங்க....தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா........!!!


 தீபாவளி அன்னிக்கு தொலை காட்சியால் ஒரே தொல்லையாக இருந்தது, கைகாலும் சும்மா இருந்ததால, கைக்கும் காலுக்கும் வேல கொடுக்குற
துக்காகவும்  , மக்கள் எப்படியெல்லாம் தீபாவலிய கொண்டாடுறாங்கன்னு பார்ப்பதற்க்காகவும், அப்படியே ஒரு ரவுண்ட் அடித்து வாக்கிங் போயிட்டு வரலாமுன்னு  வீதி வழியா போய்கிட்டு இருந்தேன்.

ஒன்னாவது தெருவிலிருந்து என் வீட்டுக்கு அருகிலுள்ள மெயின் ரோட்டு வரைக்கும் உள்ள கடைகளெல்லாம் அடப்பு, ஆனா, அதில. ஒரே ஒரு கடை மட்டும் ஜெக ஜோதியா ஒளி வீசிகிட்டு இருந்தது. அந்தக் கடையில ஒரே வெள்ளையும் சொள்ளையுமான கூட்டம்.......

அது எந்தக் கடைன்னு ஒங்களுக்கு  படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருக்கும் இருந்தாலும், தெரியாதவங்களுக்கு சொல்லனும்ல....... அதனால ,அந்தக் கடை  வேறு கடை இல்லங்க.............ஒயின் ஷாப்புங்க,

அந்தஒயின்ஷாப்ப கடந்துதான் நான் போகனும்  வரனும்.. அத அவாய்ட் பண்ணாம போகவம் வரவும் முடியாதுங்க........ அந்தக் கடைக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு கூடாரத்துல“ உங்கள் உதவிக்கு காவல்நிலையம்னு இருக்கிற.  இடத்த போட்டு அது பக்கத்துல தொலை பேசி எண் எழுதிய போர்டு ஒன்னு மாட்டி இருந்தது.ச்சுங்க......... அத இப்பதாங்க...நானும் பார்க்குறேனுங்க.. நா...........அத பாத்தபடி முகத்த வேறு பக்கமா திருப்பி கிட்டு போனேனா..........

ஒரு குடி மகன் என்ன தடுத்துட்டாருங்க................

என்னா,அந்த போர்டையே பாத்துகிட்டு போறீரு..........அந்த மகன் சொன்னாருங்க........ அப்புறம் அவரே..பேசினாருங்க.........போலீசக்காரன் செல் நம்பர போடலேன்னு.... பாக்குறீரா...............ன்னு கேட்டுன்னு  சிரிச்சாருங்க.......

 பதிலக்கு சிரிக்கலைன்னா அந்த குடிமகனுக்கு கோபம் வருமுன்னு  எனக்கு முன்னாடியே தெரிஞ்சதுனால....... நானும் பதிலக்கு பல்ல மட்டும் காட்டினேனுங்க................

நான் பல்ல காட்டினனோ, இல்லையோ.அத பாத்துட்டு.இன்னொரு குடி மகன் தள்ளாடி தள்ளாடி  வந்து.என் தோள் பட்டையில கைய வச்சாருங்க.......

அவரும். பொன்னான ஒரு கேள்விய கேட்டாருங்க............. என்னாது தீபாவலி அதுவுமா.......கருப்பு சட்டய போட்டுகிட்டு, தீ  பாவ  லீக்கு   ட்ரெஸ்  எடுக்கலை யான்னு.....................

நா.............அந்தக் குடி மகன திரும்பி பார்த்து பதில் சொல்றதுக்குல்ல.முதல் குடி மகனே....... பதில்  சொன்னாரு............பாய்காட் பன்னுறாருன்னு...........என்றார்.....

ரெண்டாவது குடி மகனறாருக்கு, நானு யாருன்னு திடீரென்று ஞாபகம் வந்திருச்சு போல......... ஓ......ஓ................ஓ..........காம்ரேட்.........காம்ரேட்...........
என்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு விரல்களில் ம ற்ற விரல்களை மடக்கிவைத்து ஆள்காட்டிவிரலை மட்டும் நீட்டி தலையை பல தடவை ஆட்டி ஆட்டி சொன்னார்.

இப்படியே விட்டால் என்னைச் சுற்றி  குடி மகன்கள் கூடி விடுவார்கள் என்பதால் நல்லபடியாக அவர்களிடமிருந்து தப்பிக்கும் முகமாக.. தோழர் ஒருவர் என்னை பார்க்க, பஸ்நிறுத்தில் நிற்கிறார்.  அவரை பார்க்க செல்ல வேண்டும். பிறகு பேசலாம் என்று   அவர்களின் ஒப்புதலை பெற்று நடையை கட்டினேன்.

 கொஞ்ச தூரம் சென்று,வீட்டுக்கே செல்லலாம், என்று திரும்பி பார்த்தால்...மூனு நாலு குடி மகன்கள் நின்று கொண்டு இருந்தார்கள். மனதை மாற்றிக் கொண்டு வாக்கிங் செல்ல தொடங்கினேன்.

பைபாஸ் ரோட்டைக் கடந்து பிக் பஜார் பில்டிங்கிட்ட நடந்து வரும்பொழுது. அங்கு    கணவனும் மனைவி மான ரெண்டு பேர் வழி மறித்து தீபாவளி வாழ்த்து சொன்னார்கள்.

எதுக்குங்க...வாழ்த்து.. நாந்தான் தீபாவலியே கொண்டாடடுறதே..இல்லையே என்றேன்.  ரெண்டு பேருமே சேர்ந்து ..நீங்க.....தீபாவளிய  கொண்டாட மாட்டிங்களா ....? என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு தியரியை  எடுத்து சொல்வதை விட்டுட்டு, சிம்பிளிக்கா..சில விபரங்களை மட்டும் சொன்னேன்.

எனக்ககு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீபாவலியை கொண்டாடடுவது இல்லை, அன்று புத்தாடை துணிமணியும் எடுப்பதில்லை. அணிவதுமில்லை, என்றேன்.

 ஆட்டுகறிகூட எடுத்து சமைத்து சாப்பிடுவதில்லையா என்றார்கள் வியப்புடன. அவர்களுக்கு   தோழர்களின் மொழியின் சில விளக்கங்கள் சொன்னேன்.

விலை அதிகமிருப்பதால் காந்தி(ஆட்டுகறி) எடுப்பதில்லை..பறவையில் ஊசி ஏற்றி பெருக்க வைப்பதால் அதையும் சாப்பிடுவதில்லை.  காங்கிரசும் (மாட்டுக்கறி) வரவர ரப்பராக இருப்பதால். சாப்பிடுவதில்லை. “நவம்பர் 7 புரட்சி தின”த்தில் மட்டும்  சமைத்து சாப்பிட்டுக் கொள்வது.... இந்திய்ன் பார்லி மென்ட் ( கருப்பு பன்னி) மற்றும் அய்ரோப்பிய பார்லிமெண்ட (வெள்ளைப்பன்னி) இரண்டையும் தொடுவதே இல்லை.. என்றேன்.

 அடப்பாவி!  தீபாவளிய கொண்டாட மாட்டீங்களா !!! என்று கேட்தற்க்கா இம்புட்டு விவரம் என்பது போல்  கணவனனமனைவி இருவரின்  வாய்  திறந்து இருக்க.............அவர்களிடம் விடைபெற்று, “ விட்டா போதுமடா........ சாமி” என்று வாக்கிங்கை பாதியிலயே முடித்துக் கொண்டேன.



மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...