பக்கங்கள்

தனியார்மயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனியார்மயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 17 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --37.-

 TamilFuser: கிழக்கிந்திய கம்பெனி ...


கல்விய சீரழிக்க #தேசியக்_கல்விக்கொள்கை

நிலத்தை சீரழிக்க  #சுற்றுச்சூழல்_கொள்கை. ( தற்போது மசோதா )

கடலை சீரழிக்க #தேசியமீன்வளகொள்கை

கல்வி தனியார் மயம்.

நிலம் தனியார் மயம்.

கம்யூனிகேசன் தனியார் மயம்.

இனி

கடலும் மீனும் தனியார் வசம்.

 கிழக்கிந்திய கம்பெனி என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து வெளியே வந்து இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை......

திங்கள் 30 2014

கொலைகாரர்கள் உள்ளே உலாவுகிறார்கள் பாதுகாப்பாக........

கட்டிட இடிபாடுகள்

படம். http://www.vinavu.com/2014/06/30/mouliwakkam-building-collapse-photos/


உலகமயமாக்கத்தின் ஆசியுடன்
பெருக்கப்பட்ட நகரமயமாக்கலால்
கட்டப்பட்டு வந்த பதினோரு மாடி
கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இடித்த இடிக்கும் பெய்த
மழைக்கும் தாக்கு பிடிக்காமல்
இடிந்து விட்டதாக சொன்னான்.
பொறியாளன் ஒருவன்.

சொன்னவனும் கட்டிடத்திற்கு
முதல் போட்டவனும் அச்சாரம்
கொடுத்தவனும் கட்டிய கட்டிடத்
தோடு புதைந்திருந்தால்.............

கட்டிடம் இடி இடித்ததாலா..
பெய்த மழையிலாலா  இடிந்தது
என்ற உண்மை வெளிவந்திருக்கும்.

எந்த பரிதவிப்பும் இல்லாமல்
கொலைகாரர்கள்  உள்ளே
உலாவுகிறார்கள் பாதுகாப்பாக.....

பஞ்சம் பிழைக்க வந்த
பஞ்சைகளோ!  வெளியே
பரிதவிக்கிறார்கள் பாதுகாப்பு
இல்லாமல்........

பஞ்சையர்களின் துக்கம் பதினாறு
நாட்களில் முடிந்து விடும்...

இந்த சுயநல  பிண்டங்களுக்கோ
குறைவொன்றுமில்லை  எப்போதும்
கொண்டாட்டத்துடனே இருப்பார்கள்

அடுத்து வளர்ச்சி என்ற பெயரில்
உயிர்பலி வாங்குவதற்கு.!!!




வெள்ளி 24 2013

அது அங்கே!! இது இங்கே!!!



தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார் மயத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் இங்கே, கல்தோன்றா,மண்தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்தக்குடி என்று பீ....ற்றிக்கொள்ளும் தமிழ்நாட்டின் தலை நகரிலோ?

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட தண்ணீரை தனியாரிடம் ஒழுங்காக வழங்கக்கேட்டு ரோட்டில் உடகாரந்து மறியல் செய்கிறார்கள். இது தனியார் தண்ணீர் கம்பெனியை ஊக்குவித்து, ஏழைகளின் தண்ணீர் தாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே வழிவகுக்கும்

திண்ணுவதிலிருந்து களிப்பது வரைக்கும், இறுதியில் செத்து சுடுகாடு போவது வரை .தனியார்தான்

இதனால காசுக்கார கூட்டத்துக்கு பிரச்சினையில்லை, , பெருமாளுக்கு மொட்ட போட்டு மசிர கொடுத்தால் எல்லாம் சரியாய் போய்விடும் என்று வேறு ரூட்டை தேடி ஓடிகிறது காசில்லா கூட்டம்

ஒரு காலத்தில் புலி பதுங்குவது பாய்வதற்குன்னு சொல்லப்பட்டது. இந்தக்காலத்தில் புலி  (பூனையாகி) பதுங்குவது தப்பித்து ஓடி விடுவதற்க்குத்தான் என்பது நடைமுறையாகிவிட்டது

வெள்ளி 06 2012

தனியார் மயத்தை ஒழித்தவர் மாவீரர் திப்புசுல்தான்


கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட போது மைசூரை
ஆட்சி புரிந்த திப்பு  வர்த்தகத்தில் பிரிட்டிசாரின் ஏகபோகத்தை
வளராது தடுக்கவும்.மக்களின் நலனுக்காவும் பல திட்டங்களை
தீட்டினார் அத்திட்டங்களில் ஒன்று, தனியார் மயத்தை ஒழிப்பது

மிளகு,சீரகம்.ஏலம் போன்றவற்றை நேரிடையாக உற்பத்தி
யாளர்களிடமிருந்து பரங்கிய வெள்ளை முதலாளிகள் வாங்குவதை
தடுத்து.அரசே, அவற்றை வாங்கி அரோபியாவிற்கு விற்பனை
செய்து. அரேபியாவிடமிருந்து வெள்ளை பிரிட்டீஸ் தொழிலதிபர்களை
வாங்கச் செய்தார்.

இதனால்.அரசே,பெரும் வர்த்தகராக்கி,தனியார் சுரன்டலையும்
 தரகு ஏஜென்டகளின் இடைத்தரகு தனத்தை ஒழித்தார்.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தை இயற்றிய முதல்
மன்னன் என்ற பெருமை பெற்றார்.இலவசங்களை வெறுத்தவர்.
தன் மகன் இலவசமாக காய்கறிகளை வாங்கியதற்க்காக தன்
மகனையே தண்டித்த நேர்மையாளர் திப்பு.

நிலவுகின்ற தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் இன்றைய
கைக்கூலி ஆட்சியாளர்களின் முன்னோர்கள் கொண்டுவந்தபோது
தனியார்மயத்தை அன்றே ஒழித்தவர் பெருமைமிக்க  மாவீரர்
திப்புசுல்தான்தான்.

இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...